|
||||||||
“இருமடிப் பாத்தி / மேட்டுப்பாத்தி” |
||||||||
4 அடி அகலம், 25 அடி நீளம் (நீளம் உங்கள் வசதியைப் பொறுத்து இருக்கலாம்), முக்கால் அடி ஆழத்துக்கு நிலத்தில் உள்ள மேல் மண்ணைச் சுரண்டி, இருபுறமும் ஒதுக்கி வைக்க வேண்டும்.
மேல் மண்ணை சுரண்டிய பிறகு, உள்ளே இருக்கும் கெட்டி மண்ணை கட்டப்பாரை கொண்டு சுமார் ஒரு அடி ஆழம் வரை உள்ள மண் பொலபொலப்புத் தன்மை பெறுமாறு பெயர்த்துவிட வேண்டும்.
குழிக்குள் பாதி உயரத்துக்கு, தோட்டத்தில் கிடைக்கும் இலை, தழை, கம்போஸ்ட் போன்ற வற்றை எடுத்து வைக்க வேண்டும்.
ஏற்கெனவே தனியாக சுரண்டி வைத்த மேல்மண்ணை இதன் மீது போட வேண்டும்.
பிறகு தொழு உரம், அல்லது மண்புழு உரம் போடலாம். இதன் மீது அமுதக்கரைசல் தெளிக்கலாம்.
இப்போது, தரையில் இருந்து முக்கால் அடி உயரத்துக்கு மேட்டுப்பாத்தி( இருமடிப் பாத்தி ) அமைக்கப்பட்டிருக்கும்.
இதுபோல, இரண்டு அடி இடைவெளியில் வரிசையாகப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: தற்சார்பு விவசாயம் |
||||||||
by Swathi on 08 Apr 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|