திருப்பூர் நஞ்சப்பா பள்ளி கேட்டிற்கு எதிரே ''இயற்கை கீரை''.காலை 05.30 முதல் 08.00 மணி வரை.நவீன பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமலும்,நவீன இரசாயண உரங்களை பயன் படுத்தாமலும் இயற்கை உரங்களை மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை வேளாண் உணவுகள்.
கூத்தன் ராட்சசன் ஒரு பிரபலமான 'பின் நவீனத்துவ கவிஞர்',பழகுதற்கு இனியவர் என அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.ஆனால் அவரின் இன்னொரு பக்கம் பலபேர் அறியாதது. கூத்தன் ஒரு இயற்கை வேளாண் விவசாயி.சென்னை பெருநகர சொகுசான வாழ்க்கையையும், வருமானமுள்ள தொழிலையும் விட்டுவிட்டு இப்போது ஈரோடு அருகில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.
ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்தாமலும்,நவீன உரங்களை பயன் படுத்தாமலும் மிகவும் கடினமாக உழைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.அணைத்து வகை கீரைகள்,மரசெக்கில் ஆட்டிய எண்ணைய் போன்ற பல உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளை விளைவிக்கிறார்.
தான் உற்பத்தி செய்யும் இயற்கை வேளாண் உணவு பொருட்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் முனைப்பில் திருப்பூரில் சாலையோர அங்காடி நஞ்சப்பா பள்ளி முன் (காலை நேரம் மட்டும்) அமைத்துள்ளார்.
இயற்கை வேளாண் விளை பொருட்களை விளைவிப்பர்களை விட பயன் படுத்துபவர்களுக்கே நன்மை அதிகம் என அனைவரும் அறிந்ததே !
இவரின் பயனுள்ள முயற்சிக்கு தோள்கொடுப்போம் !ஆதரிப்போம் !
|