LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

முறையாமோ ! - எம் . ஜெயராமசர்மா

தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோழ்கொடுக்கும் விலங்குகளை
வாழ்வெல்லாம் மனிதவினம் வசைபாடல் முறையாமோ
விலங்குகளோ தம்பாட்டில் இருக்கின்ற வேளைதனில்
வேணுமென்று மனிதன்சென்று வீண்தொல்லை கொடுப்பதேனோ !

பசுவந்து தன்பாலை கறவென்று சொன்னதில்லை
மான்வந்து தனைக்கொன்று தின்னென்று சொன்னதில்லை
ஆனைவந்து மனிதனிடம் அடிமையாக்கச் சொன்னதுண்டா
ஆனாலும் மனிதன்சென்று அத்தனையும் செய்கின்றான் !

காட்டிலே வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு வந்தபின்பும்
காட்டையே அழிப்பதற்குக் காரணந்தான் தெரியவில்லை
காட்டிலே இருக்கின்ற விலங்குகளை அழித்தொழிக்க
நாட்டிலே இருப்பார்க்கு யார்கொடுத்தார் அதிகாரம் !

அரசியலும் தெரியாது ஆட்சியிலும் ஆசையில்லை
அலைபாயும் மனங்கூட அவற்றுக்குக் கிடையாது
நிலபுலனும் சேர்க்காது நிம்மதியும் இழக்காது
வனமதிலே தன்பாட்டில் வசிக்கிறது விலங்கினமோ !

சிங்கத்தைப் பிடிக்கின்றான் சிறுத்தையையும் பிடிக்கின்றான்
வெங்கரிகள் தனைநாளும் விரட்டியே பிடிக்கின்றான்
காட்டிலே இருப்பவற்றை நாட்டுக்கே கொண்டுவந்து
காட்சிப் பொருளாக்கிக் காசெடுத்து நிற்கின்றான் !

வேட்டையெனும் பெயராலே காட்டையே கலக்குகிறீர்
விலங்குகளைக் கொன்றுவிட்டு வீறாப்பும் பேசுகிறீர்
காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களே
நாட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாட யார்வருவீரா !

மிருகவதை கூடாது எனச்சொல்லும் சட்டமெலாம்
வேட்டையாடும் வெறியர்களை விட்டுவைத்தல் எப்படியோ
காட்டைவிட்டு வந்தபின்பும் காருண்யம் தொலைத்துவிடின்
நாட்டிலே வாழுவதில் நம்வாழ்வு உயிர்ப்பெறுமா !

குரங்கென்றும் கழுதையென்றும் கரடியென்றும் திட்டுகிறோம்
நாயென்றும் மாடென்றும் நரியென்றும் நகைக்கின்றோம்
மிருகமாய் இருந்தாலும் இவைதிட்டை நினைப்பதுண்டா
மனிதராய் இருக்கும்நாம் திட்டுவது முறையாமோ !

 

எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா

by Swathi   on 25 Nov 2017  0 Comments
Tags: முறையாமோ   Muraiyamo   Tamil Kavithai              
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
முறையாமோ ! - எம் . ஜெயராமசர்மா முறையாமோ ! - எம் . ஜெயராமசர்மா
வா வானம் அளக்கலாம் .. - தண்மதி வா வானம் அளக்கலாம் .. - தண்மதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.