பெருமாள் கோயில்களில் எத்தனையோ விதமான நைவேத்தியங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பொரி கடலை மாவு நைவேத்தியம் செய்யப்படும் பெருமாள்
கோயில் தர்மபுரி மாவட்டம் கோவிலூர் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சென்னகேஸ்வர பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிகடலை மாவு
நைவேத்தியம் செய்கிறார்கள்.இக்கோயிலில் சர்க்கரை கலந்த பொட்டுக்கடலை மாவு பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. விஷ்ணு கோயில்களில்
பொதுவாக பைரவர் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தலத்தில் மூலவரின் அருகிலேயே பைரவர் குடிகொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன்
சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் உள்ளார். எனவே வீர ஆஞ்சநேயர் எனப்படுகிறார். சென்னகேஸ்வர பெருமாளின் விக்ரகம் சில
சமயங்களில் நரசிம்மரைப்போலவே காட்சி தருகிறது. மேலும் ராமானுஜர், விஸ்வக்சேனர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர். இவரை ஆராதித்தால்
அனைத்து நலன்களும் பெருகும். இந்த கோயில் அன்னை அமைந்த இடத்தை ருத்ரபூமி என தேவப்பிரசன்னத்தில் கூறியதால் சிவலிங்கப் பிரதிஷ்டையும்
செய்யப்பட்டது. உற்சவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, காட்சி தருகின்றனர். இங்கு ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஸ்ரீ சாஸ்தர பூஜையும், நவக்கிரக பூஜையும்,
சென்னகேஸ்வர பெருமாளுக்கு புத்தாண்டு திருமஞ்சனம், ஆராதனை, நைவேத்தியத்துடன் இணைந்து செய்யப்படுகிறது.
பெருமாள் கோயில்களில் எத்தனையோ விதமான நைவேத்தியங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பொரி கடலை மாவு நைவேத்தியம் செய்யப்படும் பெருமாள் கோயில் தர்மபுரி மாவட்டம் கோவிலூர் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சென்னகேஸ்வர பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிகடலை மாவு நைவேத்தியம் செய்கிறார்கள். இக்கோயிலில் சர்க்கரை கலந்த பொட்டுக்கடலை மாவு பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
விஷ்ணு கோயில்களில் பொதுவாக பைரவர் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தலத்தில் மூலவரின் அருகிலேயே பைரவர் குடிகொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் உள்ளார். எனவே வீர ஆஞ்சநேயர் எனப்படுகிறார். சென்னகேஸ்வர பெருமாளின் விக்ரகம் சில சமயங்களில் நரசிம்மரைப்போலவே காட்சி தருகிறது.
மேலும் ராமானுஜர், விஸ்வக்சேனர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர். இவரை ஆராதித்தால் அனைத்து நலன்களும் பெருகும். இந்த கோயில் அன்னை அமைந்த இடத்தை ருத்ரபூமி என தேவப்பிரசன்னத்தில் கூறியதால் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. உற்சவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, காட்சி தருகின்றனர். இங்கு ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஸ்ரீ சாஸ்தர பூஜையும், நவக்கிரக பூஜையும், சென்னகேஸ்வர பெருமாளுக்கு புத்தாண்டு திருமஞ்சனம், ஆராதனை, நைவேத்தியத்துடன் இணைந்து செய்யப்படுகிறது. |