LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

பயிற்சி முகாமிற்கு ஓர் கடிதம்

கார்த்திகா!
என் நினைவுகளோடும்
உடலோடும்
என்னுடையவளாகிவிட்டவளுக்கு!

இப்போதெல்லாம்
இங்கு பூக்கள்
வாசனை வீசுவதில்லை
கருவண்டுகளெல்லாம் தெருக்களில்
செத்துச் செத்துக் கிடக்கின்றன.
நிலவு பெய்கின்ற
இரவுகளெல்லாம்
இப்போ இனிப்பதேயில்லை.

நேற்று -
என்னுடைய துப்பாக்கிக்கு
நான் எண்ணெய் தடவும்போது
அந்த நாட்களில்
என் மார்பில் சாய்ந்திருந்து
நீ செய்த குறும்புகளெல்லாம்
என் நினைவுக்கு வந்தன.

கார்த்திகா!
கடந்துபோனவையை நினைப்பதிலும்
ஒரு சுகம் இருக்கின்றது.

கார்த்திகா!
போன தடவை எழுதியிருந்தேனே
என் கூடவே இருக்கின்ற
எனக்கும் பி¡¢யமான
முரட்டுத் தோழனைப்பற்றி
நன்றாகவே சண்டை போடுவான்.

என் துப்பாக்கிக்கு
சில வேளைகளில் அவன்தான்
எண்ணெய் போட்டு வைப்பான்.
உன்னைப்பற்றி அவனிடம்
நிறையவே பேசியிருக்கிறேன்.
அவனுக்கும் ஒரு
இளம் காதலி இருக்கிறாள்
அவன் ஆரம்பத்தில் படித்த
புத்தகங்களெல்லாம் இப்போ
அவளுக்கு கொடுத்து வருகிறான்.

கார்த்திகா!
என்னவென்று
அதை நான் எழுதுவது
சென்ற வாரம் நடைபெற்ற
தாக்குதலின் போது
அவன் செத்துப் போய்விட்டான்.
அவனது பி¡¢யமான துப்பாக்கியில்
இப்போ
அவனது காதலி
சுடுவதற்குப் பழகி வருகிறாள்.

கார்த்திகா!
மரணத்தை எதிர்கொண்டு
நாங்கள் காத்திருக்கிறோம்.
எங்கள் துப்பாக்கிகளுக்காக
புதிய தோழர்கள் காத்திருக்கின்றனர்.
பயிற்சி முடிந்து விரைவில்
நீ திரும்பி வருவாயென
எதிர்பார்க்கிறேன்.
நீ வரும்போது
ஒருவேளை
நான் இல்லாமற் போகலாம்.

கார்த்திகா!
மக்களை நேசித்த
எங்கள் கண்களில்
கண்ணீர்ப் பூக்கள் உதிர்வதை
நான் வெறுக்கிறேன்.
மகிழ்ச்சிக்காய் வாழ்ந்து
மகிழ்ச்சிக்காய் இறந்து போய்விட்ட
எங்கள் தோழர்கள் மத்தியில் அமையும்
என் சமாதியில்
அழுகையின் ஒலி
கேட்கவே கூடாது.

கார்த்திகா!
என்னவளே!
என் சமாதியில்
முட்களைத் தாங்கி
அழகிய பூச்செடி ஒன்று
துளிர்விட்டு வளரும்.
நான் நம்புகிறேன்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.