அரசின் அத்தியாவசிய சேவைககளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட், நேற்று முன் தினம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து, ஆதார் அட்டையின் பயன்பாடு குறித்த மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் படி, கேஸ் சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கும் திருமணம் பதிவு செய்வதற்கும் ஆதார் அட்டை அவசியமில்லை. ஆனால் மானியங்களுடனான நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் அட்டை மீதான உத்தரவை மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
|