LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

ஆகார வருக்கம்

 

ஆதி யெனும்பெய ரான்றிரு நாமமு
மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும்
அருகனு முதலு நேரோடலு மாமே. ....143
ஆரல் எனும்பெயர் அங்கா ரகனும்
கார்த்திகை நாளும் கடிமதில் உறுப்பும்
ஒருமீன் பெயரும் உரைத்தனர் புலவர். ....144
ஆவணம் எனும்பெயர் தெருவும் அங்காடியும்
அடிமை யோலையும் புனர்பூ சமுமாம். ....145
ஆடி யெனும்பெயர் மாதத்தி லொன்றும்
நாடி லுத்திராடமும் கண்ணா டியுமாம். ....146
ஆசை யெனும்பெயர் திசையும் காதலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....147
ஆழி யெனும்பெயர் நேமிப் புள்ளும்
கடலும் வட்ட வடிவுந் தேர்க்காலும்
சக்கிரா யுதமு மோதிரமுங் கரையுமாம். ....148
ஆலம் எனும்பெயர் அறலும் விடமும்
ஆல மரமும் மலர்ந்திடு பூவுமாம். ....149
ஆசார மென்னும் பெயர்நல் லொழுக்கமும்
தூசின் பெயரும் மழைப்பெயருஞ் சொல்லுவர். ....150
ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம். ....151
ஆறெனும் பெயரே வழியும் நதியுமோர்
எண்ணும் எனவே இயம்புவர் புலவர். ....152
ஆலையம் எனும்பெயர் தேவர் கோயிலும்
நகரமும் யானைக் கூடமும் நவிலுவர். ....153
ஆரை எனும்பெயர் கொத்தளிப்பாய் புரிசையாம்
நீர்செறி யாரையின் பெயரு நிகழ்த்துவர். ....154
ஆடவர் எனும்பெயர் ஆண்பாற் பொதுவும்
இளைஞர் பெயரும் இயம்பப் பெறுமே. ....155
ஆர்வல ரெனும்பெயர் அன்புடை யோனும்
கணவனும் எனவே கருதுவர் புலவர். ....156
ஆக மெனும்பெயர் தேகமு மார்புமாம். ....157
ஆகார மெனும்பெயர் அசனமு நெய்யுந்
தேகமும் எனவே செப்பப் பெறுமே. ....158
ஆம்பல் எனும்பெயர் ஆனையுங் குமுதமும்
இசையின் குழலும் கள்ளு மூங்கிலும்
ஒலியின் பெயரும் உரைத்தனர் புலவர். ....159
ஆரம் எனும்பெயர் அத்தி மரமும்
அணிகலப் பொதுவுந் தரளமு மாலையும்
சந்தன முமணி வடமும் பதக்கமும். ....160
ஆடல் எனும்பெயர் வென்றியு நடனமும்
உரையா டலுமென வுரைத்தனர் புலவர். ....161
ஆர்ப்பெனும் பெயரே ஆரவா ரித்தலும்
அமருஞ் சிரிப்பும் ஆகும் என்ப. ....162
ஆரெனும் பெயரே யாத்தியும் கூர்மையும்
தேராழி யுறுப்பு நிறைவும் செப்புவர். ....163
ஆசெனும் பெயரே அற்பமும் குற்றமும்
மெய்புகு கருவியும் விரைவுமோர் கவியுமாம். ....164
ஆற்ற லெனும்பெயர் ஆண்மையு மிகுதியும்
பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும்
ஞானமும் உண்டாக் குதலும் நவிலுவர். ....165
ஆடெனும் பெயரே யாட்டின் விகற்பமும்
மேடவி ராசியும் வென்றியும் விளம்புவர். ....166
ஆகுலம் எனும்பெயர் சத்த வொலியுடன்
வருத்தமும் எனவே வழங்கப் பெறுமே. ....167
ஆர்த லெனும்பெயர் உண்டலும் நிறைதலும்
அணிதலின் பெயரு மாகு மென்ப. ....168
ஆணையெனும் பெயரி லாஞ்சனையு முண்மையும்
சத்திய வசனமும் ஏவலும் சாற்றுவர். ....169
ஆசினி யெனும்பெயர் மாவயி ரத்தொடு
பலாவினோர் விகற்பமும் விசும்பும் பகருவர். ....170
ஆக்கம் எனும்பெயர் அன்புசெய மிலாபம்
பாக்கிய வியல்பும் பயில்பூந் திருவுமாம். ....171
ஆரி எனும்பெயர் அழகும் கதவுமாம். ....172
ஆணம் எனும்பெயர் அன்பும் குழம்புமாம். ....173
ஆகு வெனும்பெயர் எலியின் விகற்பமும்
மூடிகப் பெயரும் மொழியப் பெறுமே. ....174
ஆதித் தியரெனும் பெயர்விண் ணவரும்
சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர். ....175
ஆவரணம் எனும்பெயர் அரணமு மறைவும்
சட்டையுங் கவசமும் தடையும் துகிலுமாம். ....176
ஆதன் எனும்பெயர் அறிவிலோன் பெயரும்
சீவனும் எனவே செப்பப் பெறுமே. ....177
ஆங்கெனும் பெயரே யவ்விடப் பெயரும்
அசைச்சொற் பெயரும் உவமையு மாமே. ....178
ஆயம் எனும்பெய ரரிவையர் கூட்டமும்
ஆதா யத்தொடு கவற்றின் றாயமுமாம். ....179
ஆயல் எனும்பெயர் ஆய்தலும் வருத்தமும். ....180
ஆய்தல் எனும்பெயர் தேர்தலு நுணுக்கமும். ....181
ஆலல் எனும்பெயர் நடனமும் ஒலியுமாம். ....182
ஆலெனும் பெயரே யசைச்சொலும் புனலும்
பழமரப் பெயரும் பகருவர் புலவர். ....183
ஆனி எனும்பெயர் கெடுதலின் பெயரும்
மாதத்தி லொன்று மூலநாட் பெயருமாம். ....184
ஆனகம் எனும்பெயர் துந்துமிப் பெயரும்
படகமும் எனவே பகர்ந்தனர் புலவர். ....185
ஆனியம் எனும்பெயர் நாளும் பொழுதுமாம். ....186
ஆசுகம் எனும்பெயர் அம்பும் காற்றுமாம். ....187
ஆவி எனும்பெயர் வாவியும் உயிரும்
புகையு நாற்றமு மூச்சும் புகலுவர். ....188
ஆவெனும் பெயரே இரக்கக் குறிப்பும்
உயிரும் பசுவும் உரைக்கப் பெறுமே. ....189
ஆடகம் எனும்பெயர் துவரையும் பொன்னுமாம். ....190
ஆம்பிரம் எனும்பெயர் தேமாப் பெயரும்
புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர். ....191
ஆரியர் எனும்பெயர் அறிவுடை யோரும்
ஆரிய தேசத் தவரு மாமே. ....192
ஆணி யெனப்பெயர் எழுத்தாணியும் அழகும்
ஆணி மானவிகற்பமும் சயனமு மாமே. ....193

 

ஆதி யெனும்பெய ரான்றிரு நாமமு

மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும்

அருகனு முதலு நேரோடலு மாமே. ....143

 

ஆரல் எனும்பெயர் அங்கா ரகனும்

கார்த்திகை நாளும் கடிமதில் உறுப்பும்

ஒருமீன் பெயரும் உரைத்தனர் புலவர். ....144

 

ஆவணம் எனும்பெயர் தெருவும் அங்காடியும்

அடிமை யோலையும் புனர்பூ சமுமாம். ....145

 

ஆடி யெனும்பெயர் மாதத்தி லொன்றும்

நாடி லுத்திராடமும் கண்ணா டியுமாம். ....146

 

ஆசை யெனும்பெயர் திசையும் காதலும்

பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....147

 

ஆழி யெனும்பெயர் நேமிப் புள்ளும்

கடலும் வட்ட வடிவுந் தேர்க்காலும்

சக்கிரா யுதமு மோதிரமுங் கரையுமாம். ....148

 

ஆலம் எனும்பெயர் அறலும் விடமும்

ஆல மரமும் மலர்ந்திடு பூவுமாம். ....149

 

ஆசார மென்னும் பெயர்நல் லொழுக்கமும்

தூசின் பெயரும் மழைப்பெயருஞ் சொல்லுவர். ....150

 

ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம். ....151

 

ஆறெனும் பெயரே வழியும் நதியுமோர்

எண்ணும் எனவே இயம்புவர் புலவர். ....152

 

ஆலையம் எனும்பெயர் தேவர் கோயிலும்

நகரமும் யானைக் கூடமும் நவிலுவர். ....153

 

ஆரை எனும்பெயர் கொத்தளிப்பாய் புரிசையாம்

நீர்செறி யாரையின் பெயரு நிகழ்த்துவர். ....154

 

ஆடவர் எனும்பெயர் ஆண்பாற் பொதுவும்

இளைஞர் பெயரும் இயம்பப் பெறுமே. ....155

 

ஆர்வல ரெனும்பெயர் அன்புடை யோனும்

கணவனும் எனவே கருதுவர் புலவர். ....156

 

ஆக மெனும்பெயர் தேகமு மார்புமாம். ....157

 

ஆகார மெனும்பெயர் அசனமு நெய்யுந்

தேகமும் எனவே செப்பப் பெறுமே. ....158

 

ஆம்பல் எனும்பெயர் ஆனையுங் குமுதமும்

இசையின் குழலும் கள்ளு மூங்கிலும்

ஒலியின் பெயரும் உரைத்தனர் புலவர். ....159

 

ஆரம் எனும்பெயர் அத்தி மரமும்

அணிகலப் பொதுவுந் தரளமு மாலையும்

சந்தன முமணி வடமும் பதக்கமும். ....160

 

ஆடல் எனும்பெயர் வென்றியு நடனமும்

உரையா டலுமென வுரைத்தனர் புலவர். ....161

 

ஆர்ப்பெனும் பெயரே ஆரவா ரித்தலும்

அமருஞ் சிரிப்பும் ஆகும் என்ப. ....162

 

ஆரெனும் பெயரே யாத்தியும் கூர்மையும்

தேராழி யுறுப்பு நிறைவும் செப்புவர். ....163

 

ஆசெனும் பெயரே அற்பமும் குற்றமும்

மெய்புகு கருவியும் விரைவுமோர் கவியுமாம். ....164

 

ஆற்ற லெனும்பெயர் ஆண்மையு மிகுதியும்

பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும்

ஞானமும் உண்டாக் குதலும் நவிலுவர். ....165

 

ஆடெனும் பெயரே யாட்டின் விகற்பமும்

மேடவி ராசியும் வென்றியும் விளம்புவர். ....166

 

ஆகுலம் எனும்பெயர் சத்த வொலியுடன்

வருத்தமும் எனவே வழங்கப் பெறுமே. ....167

 

ஆர்த லெனும்பெயர் உண்டலும் நிறைதலும்

அணிதலின் பெயரு மாகு மென்ப. ....168

 

ஆணையெனும் பெயரி லாஞ்சனையு முண்மையும்

சத்திய வசனமும் ஏவலும் சாற்றுவர். ....169

 

ஆசினி யெனும்பெயர் மாவயி ரத்தொடு

பலாவினோர் விகற்பமும் விசும்பும் பகருவர். ....170

 

ஆக்கம் எனும்பெயர் அன்புசெய மிலாபம்

பாக்கிய வியல்பும் பயில்பூந் திருவுமாம். ....171

 

ஆரி எனும்பெயர் அழகும் கதவுமாம். ....172

 

ஆணம் எனும்பெயர் அன்பும் குழம்புமாம். ....173

 

ஆகு வெனும்பெயர் எலியின் விகற்பமும்

மூடிகப் பெயரும் மொழியப் பெறுமே. ....174

 

ஆதித் தியரெனும் பெயர்விண் ணவரும்

சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர். ....175

 

ஆவரணம் எனும்பெயர் அரணமு மறைவும்

சட்டையுங் கவசமும் தடையும் துகிலுமாம். ....176

 

ஆதன் எனும்பெயர் அறிவிலோன் பெயரும்

சீவனும் எனவே செப்பப் பெறுமே. ....177

 

ஆங்கெனும் பெயரே யவ்விடப் பெயரும்

அசைச்சொற் பெயரும் உவமையு மாமே. ....178

 

ஆயம் எனும்பெய ரரிவையர் கூட்டமும்

ஆதா யத்தொடு கவற்றின் றாயமுமாம். ....179

 

ஆயல் எனும்பெயர் ஆய்தலும் வருத்தமும். ....180

 

ஆய்தல் எனும்பெயர் தேர்தலு நுணுக்கமும். ....181

 

ஆலல் எனும்பெயர் நடனமும் ஒலியுமாம். ....182

 

ஆலெனும் பெயரே யசைச்சொலும் புனலும்

பழமரப் பெயரும் பகருவர் புலவர். ....183

 

ஆனி எனும்பெயர் கெடுதலின் பெயரும்

மாதத்தி லொன்று மூலநாட் பெயருமாம். ....184

 

ஆனகம் எனும்பெயர் துந்துமிப் பெயரும்

படகமும் எனவே பகர்ந்தனர் புலவர். ....185

 

ஆனியம் எனும்பெயர் நாளும் பொழுதுமாம். ....186

 

ஆசுகம் எனும்பெயர் அம்பும் காற்றுமாம். ....187

 

ஆவி எனும்பெயர் வாவியும் உயிரும்

புகையு நாற்றமு மூச்சும் புகலுவர். ....188

 

ஆவெனும் பெயரே இரக்கக் குறிப்பும்

உயிரும் பசுவும் உரைக்கப் பெறுமே. ....189

 

ஆடகம் எனும்பெயர் துவரையும் பொன்னுமாம். ....190

 

ஆம்பிரம் எனும்பெயர் தேமாப் பெயரும்

புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர். ....191

 

ஆரியர் எனும்பெயர் அறிவுடை யோரும்

ஆரிய தேசத் தவரு மாமே. ....192

 

ஆணி யெனப்பெயர் எழுத்தாணியும் அழகும்

ஆணி மானவிகற்பமும் சயனமு மாமே. ....193

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.