|
||||||||
ஆகார வருக்கம் |
||||||||
ஆதி யெனும்பெய ரான்றிரு நாமமு
மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும்
அருகனு முதலு நேரோடலு மாமே. ....143
ஆரல் எனும்பெயர் அங்கா ரகனும்
கார்த்திகை நாளும் கடிமதில் உறுப்பும்
ஒருமீன் பெயரும் உரைத்தனர் புலவர். ....144
ஆவணம் எனும்பெயர் தெருவும் அங்காடியும்
அடிமை யோலையும் புனர்பூ சமுமாம். ....145
ஆடி யெனும்பெயர் மாதத்தி லொன்றும்
நாடி லுத்திராடமும் கண்ணா டியுமாம். ....146
ஆசை யெனும்பெயர் திசையும் காதலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....147
ஆழி யெனும்பெயர் நேமிப் புள்ளும்
கடலும் வட்ட வடிவுந் தேர்க்காலும்
சக்கிரா யுதமு மோதிரமுங் கரையுமாம். ....148
ஆலம் எனும்பெயர் அறலும் விடமும்
ஆல மரமும் மலர்ந்திடு பூவுமாம். ....149
ஆசார மென்னும் பெயர்நல் லொழுக்கமும்
தூசின் பெயரும் மழைப்பெயருஞ் சொல்லுவர். ....150
ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம். ....151
ஆறெனும் பெயரே வழியும் நதியுமோர்
எண்ணும் எனவே இயம்புவர் புலவர். ....152
ஆலையம் எனும்பெயர் தேவர் கோயிலும்
நகரமும் யானைக் கூடமும் நவிலுவர். ....153
ஆரை எனும்பெயர் கொத்தளிப்பாய் புரிசையாம்
நீர்செறி யாரையின் பெயரு நிகழ்த்துவர். ....154
ஆடவர் எனும்பெயர் ஆண்பாற் பொதுவும்
இளைஞர் பெயரும் இயம்பப் பெறுமே. ....155
ஆர்வல ரெனும்பெயர் அன்புடை யோனும்
கணவனும் எனவே கருதுவர் புலவர். ....156
ஆக மெனும்பெயர் தேகமு மார்புமாம். ....157
ஆகார மெனும்பெயர் அசனமு நெய்யுந்
தேகமும் எனவே செப்பப் பெறுமே. ....158
ஆம்பல் எனும்பெயர் ஆனையுங் குமுதமும்
இசையின் குழலும் கள்ளு மூங்கிலும்
ஒலியின் பெயரும் உரைத்தனர் புலவர். ....159
ஆரம் எனும்பெயர் அத்தி மரமும்
அணிகலப் பொதுவுந் தரளமு மாலையும்
சந்தன முமணி வடமும் பதக்கமும். ....160
ஆடல் எனும்பெயர் வென்றியு நடனமும்
உரையா டலுமென வுரைத்தனர் புலவர். ....161
ஆர்ப்பெனும் பெயரே ஆரவா ரித்தலும்
அமருஞ் சிரிப்பும் ஆகும் என்ப. ....162
ஆரெனும் பெயரே யாத்தியும் கூர்மையும்
தேராழி யுறுப்பு நிறைவும் செப்புவர். ....163
ஆசெனும் பெயரே அற்பமும் குற்றமும்
மெய்புகு கருவியும் விரைவுமோர் கவியுமாம். ....164
ஆற்ற லெனும்பெயர் ஆண்மையு மிகுதியும்
பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும்
ஞானமும் உண்டாக் குதலும் நவிலுவர். ....165
ஆடெனும் பெயரே யாட்டின் விகற்பமும்
மேடவி ராசியும் வென்றியும் விளம்புவர். ....166
ஆகுலம் எனும்பெயர் சத்த வொலியுடன்
வருத்தமும் எனவே வழங்கப் பெறுமே. ....167
ஆர்த லெனும்பெயர் உண்டலும் நிறைதலும்
அணிதலின் பெயரு மாகு மென்ப. ....168
ஆணையெனும் பெயரி லாஞ்சனையு முண்மையும்
சத்திய வசனமும் ஏவலும் சாற்றுவர். ....169
ஆசினி யெனும்பெயர் மாவயி ரத்தொடு
பலாவினோர் விகற்பமும் விசும்பும் பகருவர். ....170
ஆக்கம் எனும்பெயர் அன்புசெய மிலாபம்
பாக்கிய வியல்பும் பயில்பூந் திருவுமாம். ....171
ஆரி எனும்பெயர் அழகும் கதவுமாம். ....172
ஆணம் எனும்பெயர் அன்பும் குழம்புமாம். ....173
ஆகு வெனும்பெயர் எலியின் விகற்பமும்
மூடிகப் பெயரும் மொழியப் பெறுமே. ....174
ஆதித் தியரெனும் பெயர்விண் ணவரும்
சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர். ....175
ஆவரணம் எனும்பெயர் அரணமு மறைவும்
சட்டையுங் கவசமும் தடையும் துகிலுமாம். ....176
ஆதன் எனும்பெயர் அறிவிலோன் பெயரும்
சீவனும் எனவே செப்பப் பெறுமே. ....177
ஆங்கெனும் பெயரே யவ்விடப் பெயரும்
அசைச்சொற் பெயரும் உவமையு மாமே. ....178
ஆயம் எனும்பெய ரரிவையர் கூட்டமும்
ஆதா யத்தொடு கவற்றின் றாயமுமாம். ....179
ஆயல் எனும்பெயர் ஆய்தலும் வருத்தமும். ....180
ஆய்தல் எனும்பெயர் தேர்தலு நுணுக்கமும். ....181
ஆலல் எனும்பெயர் நடனமும் ஒலியுமாம். ....182
ஆலெனும் பெயரே யசைச்சொலும் புனலும்
பழமரப் பெயரும் பகருவர் புலவர். ....183
ஆனி எனும்பெயர் கெடுதலின் பெயரும்
மாதத்தி லொன்று மூலநாட் பெயருமாம். ....184
ஆனகம் எனும்பெயர் துந்துமிப் பெயரும்
படகமும் எனவே பகர்ந்தனர் புலவர். ....185
ஆனியம் எனும்பெயர் நாளும் பொழுதுமாம். ....186
ஆசுகம் எனும்பெயர் அம்பும் காற்றுமாம். ....187
ஆவி எனும்பெயர் வாவியும் உயிரும்
புகையு நாற்றமு மூச்சும் புகலுவர். ....188
ஆவெனும் பெயரே இரக்கக் குறிப்பும்
உயிரும் பசுவும் உரைக்கப் பெறுமே. ....189
ஆடகம் எனும்பெயர் துவரையும் பொன்னுமாம். ....190
ஆம்பிரம் எனும்பெயர் தேமாப் பெயரும்
புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர். ....191
ஆரியர் எனும்பெயர் அறிவுடை யோரும்
ஆரிய தேசத் தவரு மாமே. ....192
ஆணி யெனப்பெயர் எழுத்தாணியும் அழகும்
ஆணி மானவிகற்பமும் சயனமு மாமே. ....193
ஆதி யெனும்பெய ரான்றிரு நாமமு மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும் அருகனு முதலு நேரோடலு மாமே. ....143
ஆரல் எனும்பெயர் அங்கா ரகனும் கார்த்திகை நாளும் கடிமதில் உறுப்பும் ஒருமீன் பெயரும் உரைத்தனர் புலவர். ....144
ஆவணம் எனும்பெயர் தெருவும் அங்காடியும் அடிமை யோலையும் புனர்பூ சமுமாம். ....145
ஆடி யெனும்பெயர் மாதத்தி லொன்றும் நாடி லுத்திராடமும் கண்ணா டியுமாம். ....146
ஆசை யெனும்பெயர் திசையும் காதலும் பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....147
ஆழி யெனும்பெயர் நேமிப் புள்ளும் கடலும் வட்ட வடிவுந் தேர்க்காலும் சக்கிரா யுதமு மோதிரமுங் கரையுமாம். ....148
ஆலம் எனும்பெயர் அறலும் விடமும் ஆல மரமும் மலர்ந்திடு பூவுமாம். ....149
ஆசார மென்னும் பெயர்நல் லொழுக்கமும் தூசின் பெயரும் மழைப்பெயருஞ் சொல்லுவர். ....150
ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம். ....151
ஆறெனும் பெயரே வழியும் நதியுமோர் எண்ணும் எனவே இயம்புவர் புலவர். ....152
ஆலையம் எனும்பெயர் தேவர் கோயிலும் நகரமும் யானைக் கூடமும் நவிலுவர். ....153
ஆரை எனும்பெயர் கொத்தளிப்பாய் புரிசையாம் நீர்செறி யாரையின் பெயரு நிகழ்த்துவர். ....154
ஆடவர் எனும்பெயர் ஆண்பாற் பொதுவும் இளைஞர் பெயரும் இயம்பப் பெறுமே. ....155
ஆர்வல ரெனும்பெயர் அன்புடை யோனும் கணவனும் எனவே கருதுவர் புலவர். ....156
ஆக மெனும்பெயர் தேகமு மார்புமாம். ....157
ஆகார மெனும்பெயர் அசனமு நெய்யுந் தேகமும் எனவே செப்பப் பெறுமே. ....158
ஆம்பல் எனும்பெயர் ஆனையுங் குமுதமும் இசையின் குழலும் கள்ளு மூங்கிலும் ஒலியின் பெயரும் உரைத்தனர் புலவர். ....159
ஆரம் எனும்பெயர் அத்தி மரமும் அணிகலப் பொதுவுந் தரளமு மாலையும் சந்தன முமணி வடமும் பதக்கமும். ....160
ஆடல் எனும்பெயர் வென்றியு நடனமும் உரையா டலுமென வுரைத்தனர் புலவர். ....161
ஆர்ப்பெனும் பெயரே ஆரவா ரித்தலும் அமருஞ் சிரிப்பும் ஆகும் என்ப. ....162
ஆரெனும் பெயரே யாத்தியும் கூர்மையும் தேராழி யுறுப்பு நிறைவும் செப்புவர். ....163
ஆசெனும் பெயரே அற்பமும் குற்றமும் மெய்புகு கருவியும் விரைவுமோர் கவியுமாம். ....164
ஆற்ற லெனும்பெயர் ஆண்மையு மிகுதியும் பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும் ஞானமும் உண்டாக் குதலும் நவிலுவர். ....165
ஆடெனும் பெயரே யாட்டின் விகற்பமும் மேடவி ராசியும் வென்றியும் விளம்புவர். ....166
ஆகுலம் எனும்பெயர் சத்த வொலியுடன் வருத்தமும் எனவே வழங்கப் பெறுமே. ....167
ஆர்த லெனும்பெயர் உண்டலும் நிறைதலும் அணிதலின் பெயரு மாகு மென்ப. ....168
ஆணையெனும் பெயரி லாஞ்சனையு முண்மையும் சத்திய வசனமும் ஏவலும் சாற்றுவர். ....169
ஆசினி யெனும்பெயர் மாவயி ரத்தொடு பலாவினோர் விகற்பமும் விசும்பும் பகருவர். ....170
ஆக்கம் எனும்பெயர் அன்புசெய மிலாபம் பாக்கிய வியல்பும் பயில்பூந் திருவுமாம். ....171
ஆரி எனும்பெயர் அழகும் கதவுமாம். ....172
ஆணம் எனும்பெயர் அன்பும் குழம்புமாம். ....173
ஆகு வெனும்பெயர் எலியின் விகற்பமும் மூடிகப் பெயரும் மொழியப் பெறுமே. ....174
ஆதித் தியரெனும் பெயர்விண் ணவரும் சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர். ....175
ஆவரணம் எனும்பெயர் அரணமு மறைவும் சட்டையுங் கவசமும் தடையும் துகிலுமாம். ....176
ஆதன் எனும்பெயர் அறிவிலோன் பெயரும் சீவனும் எனவே செப்பப் பெறுமே. ....177
ஆங்கெனும் பெயரே யவ்விடப் பெயரும் அசைச்சொற் பெயரும் உவமையு மாமே. ....178
ஆயம் எனும்பெய ரரிவையர் கூட்டமும் ஆதா யத்தொடு கவற்றின் றாயமுமாம். ....179
ஆயல் எனும்பெயர் ஆய்தலும் வருத்தமும். ....180
ஆய்தல் எனும்பெயர் தேர்தலு நுணுக்கமும். ....181
ஆலல் எனும்பெயர் நடனமும் ஒலியுமாம். ....182
ஆலெனும் பெயரே யசைச்சொலும் புனலும் பழமரப் பெயரும் பகருவர் புலவர். ....183
ஆனி எனும்பெயர் கெடுதலின் பெயரும் மாதத்தி லொன்று மூலநாட் பெயருமாம். ....184
ஆனகம் எனும்பெயர் துந்துமிப் பெயரும் படகமும் எனவே பகர்ந்தனர் புலவர். ....185
ஆனியம் எனும்பெயர் நாளும் பொழுதுமாம். ....186
ஆசுகம் எனும்பெயர் அம்பும் காற்றுமாம். ....187
ஆவி எனும்பெயர் வாவியும் உயிரும் புகையு நாற்றமு மூச்சும் புகலுவர். ....188
ஆவெனும் பெயரே இரக்கக் குறிப்பும் உயிரும் பசுவும் உரைக்கப் பெறுமே. ....189
ஆடகம் எனும்பெயர் துவரையும் பொன்னுமாம். ....190
ஆம்பிரம் எனும்பெயர் தேமாப் பெயரும் புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர். ....191
ஆரியர் எனும்பெயர் அறிவுடை யோரும் ஆரிய தேசத் தவரு மாமே. ....192
ஆணி யெனப்பெயர் எழுத்தாணியும் அழகும் ஆணி மானவிகற்பமும் சயனமு மாமே. ....193
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|