நெடுவரைப் பொங்கர்ப் புனம்எரி கார்அகில் கரும்புகை வானம் கையுறப் பொதிந்து தருநிழல் தேவர் தம்உடல் பனிப்பப் படர்ந்தெறி கங்கை விடும்குளிர் அகற்றும் பொன்னம் பொருப்ப! நின்உளத் தியையின் (5)
கனல்தலைப் பழுத்த திரள்பரல் முரம்பு வயல்வளை கக்கிய மணிநிரைப் பரப்பே அதர்விரிந் தெழுந்த படர்புகை நீழல் பொதுளிய காஞ்சி மருதணி நிழலே! தீவாய்ப் புலிப்பற் சிறுகுரல் எயிற்றியர் (10)
கழுநீர் மிலையும் வயல்மா தினரே அயற்புலம் அறியும் எயினர் மாத்துடி நடுநகர்க் கிரட்டும் களிஅரி கிணையே! இருள்கவர் புலன்எனச் சுழல்தரும் சூறை மதுமலர் அளைந்த மலையக் காலே (15)
எழுசிறை தீயும் எருவையும் பருந்தும் குவளையம் காட்டுக் குருகொடு புதாவே வலியழி பகடு வாய்நீர்ச் செந்நாய் தழைமடி மேதியும் பிணர்இடங் கருமே பட்டுலர் கள்ளி நெற்றுடை வாகை (20)
சுருள்விரி சாலியும் குலைஅரம் பையுமே வடதிரு ஆல வாய்திரு நடுவூர் வெள்ளி யம்பலம் நள்ளாறு இந்திரை பஞ்சவ னீச்சரம் அஞ்செழுத்து அமைத்த சென்னி மாபுரம் சேரன் திருத்தளி (25)
கன்னிசெங் கோட்டம் கரியோன் திருவுறை விண்ணுடைத் துண்ணும் கண்ணிலி ஒருத்தன் மறிதிரைக் கடலுள் மாவெனக் கவிழ்ந்த களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல் பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன் (30)
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த அருவிஅம் சாரல் ஒருபரங் குன்றம் சூழ்கொள இருந்த கூடலம் பெருமான் முழுதும் நிறைந்த இருபதம் புகழார் போம்வழி என்னும் கடுஞ்சுரம் மருதம் மாமை ஊரும் மணிநிறத்து இவட்கே. (36)
|