LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

அகநானூறு-4

 

76. மருதம்
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, 
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென 
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு 
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை 
அவை புகு பொருநர் பறையின், ஆனாது, 5
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், 
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், 
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், 
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என, 
ஆதிமந்தி பேதுற்று இனைய, 10
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் 
அம் தண் காவிரி போல, 
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.  
'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர் 
77. பாலை
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், 
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப் 
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச் 
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற 
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
5
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ், 
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார், 
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின், 
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த 
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர, 10
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும் 
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப் 
புல் அரை இத்திப் புகர் படு நீழல் 
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, 
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை, 15
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன் 
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த 
திருந்துஇலை எஃகம் போல, 
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.  
தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார் 
78. குறிஞ்சி
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, 
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், 
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, 
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் 
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
5
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், 
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், 
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் 
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென 
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், 10
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் 
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, 
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், 
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! 
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை 15
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று 
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, 
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, 
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, 
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, 20
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, 
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி 
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த 
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? 25
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் 
79. பாலை
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் 
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, 
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், 
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய 
வன் புலம் துமியப் போகி, கொங்கர் 5
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் 
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் 
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் 
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, 
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர 10
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை 
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, 
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் 
கொடு வில் எயினர் கோட் சுரம் படர, 
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, 15
கல் பிறங்கு அத்தம் போகி, 
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.  
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் 
80. நெய்தல்
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் 
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் 
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! 
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை 
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். 
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை 
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் 
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, 
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, 10
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் 
தண் நறும் பைந் தாது உறைக்கும் 
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.  
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் 
81. பாலை
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் 
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், 
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை 
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, 
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் 5
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் 
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை 
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள 
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை 
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த 10
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் 
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் 
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் 
மை எழில் உண்கண் கலுழ 
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? 15
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் 
82. குறிஞ்சி
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் 
கோடை அவ் வளி குழலிசை ஆக, 
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை 
தோடு அமை முழவின் துதை குரல் ஆக, 
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, 5
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, 
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, 
மந்தி நல் அவை மருள்வன நோக்க, 
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் 
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் 10
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, 
செருச் செய் யானை செல் நெறி வினாஅய், 
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, 
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் 
பலர்தில், வாழி தோழி! அவருள், 15
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, 
ஓர் யான் ஆகுவது எவன்கொல், 
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?  
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் 
83. பாலை
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் 
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, 
கறை அடி மடப் பிடி கானத்து அலற, 
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, 
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, 5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, 
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், 
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும் 
கல்லா இளையர் பெருமகன் புல்லி 
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், 10
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, 
எய்த வந்தனவால்தாமே நெய்தல் 
கூம்பு விடு நிகர் மலர் அன்ன 
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.  
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார் 
84. முல்லை
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் 
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி, 
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ, 
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர 
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
5
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, 
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய, 
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் 
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் 
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே, 10
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி, 
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு 
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும் 
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் 
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, 15
வினைவயின் பெயர்க்கும் தானை, 
புனைதார், வேந்தன் பாசறையேமே!  
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன் 
85 . பாலை
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், 
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், 
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் 
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து, 
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
5
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, 
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை 
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் 
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, 
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை 10
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை 
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, 
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், 
வருதும், யாம்' எனத் தேற்றிய 
பருவம்காண் அது; பாயின்றால் மழையே. 15
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் 
86. மருதம்
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை 
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் 
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி 
மனை விளக்குறுத்து, மாலை தொடரி, 
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் 
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, 
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், 
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் 
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, 10
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று 
வால் இழை மகளிர் நால்வர் கூடி, 
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் 
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என, 
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி 15
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, 
வதுவை நல் மணம் கழிந்த பின்றை, 
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, 
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர, 
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், 20
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து 
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ, 
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, 
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின் 
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என, 25
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், 
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, 
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து, 
ஒய்யென இறைஞ்சியோளே மாவின் 
மடம் கொள் மதைஇய நோக்கின், 30
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.  
வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார் 
87. பாலை
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், 
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் 
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, 
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, 
குடுமி நெற்றி நெடு மரச் சேவல் 5
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, 
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் 
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, 
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென, 
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம், 10
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால் 
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற 
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் 
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி, 
தாழ் இருங் கூந்தல் நம் காதலி
15
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.  
வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார் 
88. குறிஞ்சி
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை 
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் 
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் 
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, 
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் 
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் 
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து 
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் 
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, 
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் 
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, 
கொடு விரல் உளியம் கெண்டும் 
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? 15
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் 
89. பாலை
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், 
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, 
உருத்து எழு குரல குடிஞைச் சேவல், 
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய 
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், 5
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து 
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் 
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, 
களரி பரந்த கல் நெடு மருங்கின், 
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் 10
மை படு திண் தோள் மலிர வாட்டி, 
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய 
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த 
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, 
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், 15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் 
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, 
மெல்லென் சேவடி மெலிய ஏக 
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து 
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், 20
இடு மணற் பந்தருள் இயலும், 
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?  
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர் 
90. நெய்தல்
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி 
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் 
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை, 
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ, 
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் 5
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், 
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின், 
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ? 
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது 
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், 10
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர், 
கருங் கட் கோசர் நியமம் ஆயினும், 
'உறும்' எனக் கொள்குநர்அல்லர் 
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.  
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார் 
91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு 
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், 
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் 
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, 
பாசி தின்ற பைங் கண் யானை 5
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, 
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை 
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், 
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் 
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் 10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த 
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், 
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, 
பசி என அறியாப் பணை பயில் இருக்கை, 
தட மருப்பு எருமை தாமரை முனையின், 15
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், 
குடநாடு பெறினும் தவிரலர் 
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.  
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் 
92. குறிஞ்சி
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, 
படு மழை பொழிந்த பானாட் கங்குல், 
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் 
செங் கண் இரும் புலி குழுமும் சாரல் 
வாரல் வாழியர், ஐய! நேர் இறை 5
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் 
காவல் கண்ணினம் தினையே; நாளை 
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் 
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், 
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, 10
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் 
திருமணி விளக்கின் பெறுகுவை 
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் 
93. பாலை
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும், 
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், 
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து; 
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் 
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன 5
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும் 
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்; 
அரண் பல கடந்த, முரண் கொள் தானை, 
வாடா வேம்பின், வழுதி கூடல் 
நாள் அங்காடி நாறும் நறு நுதல் 10
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு, 
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர், 
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை 
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து, 
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப, 15
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல் 
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து, 
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி, 
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை, 
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை 20
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை. 
தெண் நீர் உயர் கரைக் குவைஇய 
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.  
வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார் 
94. முல்லை
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய 
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, 
வான் எனப் பூத்த பானாட் கங்குல், 
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் 
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, 5
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், 
ஐது படு கொள்ளி அங்கை காய, 
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி 
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, 
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் 10
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் 
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து 
ஆர்வம் சிறந்த சாயல், 
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!  
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார் 
95 . பாலை
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், 
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; 
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்; 
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் 
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
5
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற 
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ, 
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க, 
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும் 
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
10
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர் 
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ 
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ, 
நம் உணர்ந்து ஆறிய கொள்கை 
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே? 15
போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் 
96. மருதம்
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, 
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் 
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் 
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி 
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, 5
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை 
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் 
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! 
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து 
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே 10
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், 
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, 
அண்ணல் யானை அடு போர்ச் சோழர், 
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, 
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, 15
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, 
களிறு கவர் கம்பலை போல, 
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே  
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ 
97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை 
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, 
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, 
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, 
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
5
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் 
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் 
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், 
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த 
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு 10
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, 
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் 
வயலை வேலி வியலூர் அன்ன, நின் 
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, 
ஆழல்' என்றி தோழி! யாழ என் 15
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, 
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் 
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, 
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, 
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து 20
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், 
புகை புரை அம் மஞ்சு ஊர, 
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?  
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் 
98. குறிஞ்சி
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன், 
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த 
இனிய உள்ளம் இன்னாஆக, 
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் 
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் 5
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல் 
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி, 
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் 
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ, 
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து, 10
ஓவத்தன்ன வினை புனை நல் இல், 
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் 
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ, 
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து, 
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், 15
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர் 
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா, 
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன் 
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன் 
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், 20
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய 
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக 
ஆடிய பின்னும், வாடிய மேனி 
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை 
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, 25
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி, 
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே, 
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக் 
கான் கெழு நாடன் கேட்பின், 
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே. 30
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார் 
99. பாலை
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன 
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் 
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் 
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் 
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை 5
அதிரல் பரந்த அம் தண் பாதிரி 
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ 
மராஅ மலரொடு விராஅய், பராஅம் 
அணங்குடை நகரின் மணந்த பூவின் 
நன்றே, கானம்; நயவரும் அம்ம; 10
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை 
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், 
பிடி மிடை, களிற்றின் தோன்றும் 
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!  
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ 
100. நெய்தல்
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, 
புரையப் பூண்ட கோதை மார்பினை, 
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, 
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. 
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த 5
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த 
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் 
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, 
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த 
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் 10
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், 
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் 
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை 
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன 
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் 15
வைகுறு விடியல் போகிய எருமை 
நெய்தல் அம் புது மலர் மாந்தும் 
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!  
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார்

76. மருதம்
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, தண் துறை ஊரன் எம் சேரி வந்தென இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அவை புகு பொருநர் பறையின், ஆனாது, 5கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என, ஆதிமந்தி பேதுற்று இனைய, 10சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் அம் தண் காவிரி போல, கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.  

'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர் 

77. பாலை
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப் பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச் சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
5குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ், கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார், பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின், உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர, 10செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும் கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப் புல் அரை இத்திப் புகர் படு நீழல் எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, வானவன் மறவன், வணங்குவில் தடக் கை, 15ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன் பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த திருந்துஇலை எஃகம் போல, அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.  

தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார் 

78. குறிஞ்சி
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
5கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், தேம் பிழி நறவின் குறவர் முன்றில், முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென வாடை தூக்கும் வருபனி அற்சிரம், 10நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை 15வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, 20ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, கடும் பரிப் புரவிக் கை வண் பாரி தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? 25

களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் 

79. பாலை
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய வன் புலம் துமியப் போகி, கொங்கர் 5படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, 'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர 10வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் கொடு வில் எயினர் கோட் சுரம் படர, நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, 15கல் பிறங்கு அத்தம் போகி, நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.  

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் 

80. நெய்தல்
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, 10மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் தண் நறும் பைந் தாது உறைக்கும் புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.  

இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் 

81. பாலை
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் 5மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த 10செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் மை எழில் உண்கண் கலுழ ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? 15

பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார் 

82. குறிஞ்சி
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, 5மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, மந்தி நல் அவை மருள்வன நோக்க, கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் 10உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, செருச் செய் யானை செல் நெறி வினாஅய், புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் பலர்தில், வாழி தோழி! அவருள், 15ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, ஓர் யான் ஆகுவது எவன்கொல், நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?  

தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் 

83. பாலை
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, கறை அடி மடப் பிடி கானத்து அலற, களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, 5பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், 10சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, எய்த வந்தனவால்தாமே நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.  

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார் 

84. முல்லை
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி, தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ, மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
5நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய, நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே, 10எரி புரை பல் மலர் பிறழ வாங்கி, அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும் தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, 15வினைவயின் பெயர்க்கும் தானை, புனைதார், வேந்தன் பாசறையேமே!  

தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன் 

85 . பாலை
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து, ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
5ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, கன்று, பசி களைஇய, பைங் கண் யானை முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, நல் நாள் பூத்த நாகு இள வேங்கை 10நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், வருதும், யாம்' எனத் தேற்றிய பருவம்காண் அது; பாயின்றால் மழையே. 15

தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் 

86. மருதம்
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி மனை விளக்குறுத்து, மாலை தொடரி, கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
5கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, 10புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, 'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி 15பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நல் மணம் கழிந்த பின்றை, கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, 'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர, ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், 20கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என, 25இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து, ஒய்யென இறைஞ்சியோளே மாவின் மடம் கொள் மதைஇய நோக்கின், 30ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.  

வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார் 

87. பாலை
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, குடுமி நெற்றி நெடு மரச் சேவல் 5தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென, குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம், 10நனி நீடு உழந்தனைமன்னே! அதனால் உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி, தாழ் இருங் கூந்தல் நம் காதலி
15நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.  

வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார் 

88. குறிஞ்சி
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் நடுங்கு துயர் களைந்த நன்னராளன் சென்றனன்கொல்லோ தானே குன்றத்து இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, கொடு விரல் உளியம் கெண்டும் வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? 15

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் 

89. பாலை
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, உருத்து எழு குரல குடிஞைச் சேவல், புல் சாய் விடரகம் புலம்ப, வரைய கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், 5சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, களரி பரந்த கல் நெடு மருங்கின், விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் 10மை படு திண் தோள் மலிர வாட்டி, பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், 15வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், 20இடு மணற் பந்தருள் இயலும், நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?  

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர் 

90. நெய்தல்
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை, சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ, இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் 5வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின், 'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ? அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், 10இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர், கருங் கட் கோசர் நியமம் ஆயினும், 'உறும்' எனக் கொள்குநர்அல்லர் நறு நுதல் அரிவை பாசிழை விலையே.  

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார் 

91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, பாசி தின்ற பைங் கண் யானை 5ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் 10கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, பசி என அறியாப் பணை பயில் இருக்கை, தட மருப்பு எருமை தாமரை முனையின், 15முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், குடநாடு பெறினும் தவிரலர் மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.  

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் 

92. குறிஞ்சி
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, படு மழை பொழிந்த பானாட் கங்குல், குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் செங் கண் இரும் புலி குழுமும் சாரல் வாரல் வாழியர், ஐய! நேர் இறை 5நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் காவல் கண்ணினம் தினையே; நாளை மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, 10உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் திருமணி விளக்கின் பெறுகுவை இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.

இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் 

93. பாலை
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும், கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து; ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன 5பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும் செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்; அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி கூடல் நாள் அங்காடி நாறும் நறு நுதல் 10நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு, வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர், நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து, நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப, 15முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல் வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து, மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி, ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை, கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை 20திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை. தெண் நீர் உயர் கரைக் குவைஇய தண் ஆன்பொருநை மணலினும் பலவே.  

வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார் 

94. முல்லை
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, வான் எனப் பூத்த பானாட் கங்குல், மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, 5வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், ஐது படு கொள்ளி அங்கை காய, குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் 10கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து ஆர்வம் சிறந்த சாயல், இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!  

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார் 

95 . பாலை
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்; உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் எவனோ? வாழி, தோழி! பொரிகால்
5பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ, ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க, ஈனல் எண்கின் இருங் கிளை கவரும் சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
10கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ, நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை முன்னர், யாம் என், இதற் படலே? 15

போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் 

96. மருதம்
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, 5அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! 'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே 10செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின், அம் கலுழ் மாமை, அஃதை தந்தை, அண்ணல் யானை அடு போர்ச் சோழர், வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை, இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய, 15ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை, களிறு கவர் கம்பலை போல, அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே  

தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ 

97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
5கொலை வில் ஆடவர் போல, பலவுடன் பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு 10அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்ன, நின் அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, ஆழல்' என்றி தோழி! யாழ என் 15கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து 20இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், புகை புரை அம் மஞ்சு ஊர, நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?  

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் 

98. குறிஞ்சி
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன், துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த இனிய உள்ளம் இன்னாஆக, முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் 5அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல் செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி, கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ, 'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து, 10ஓவத்தன்ன வினை புனை நல் இல், 'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ, கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து, ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், 15வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர் ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா, செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன் வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன் பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், 20என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக ஆடிய பின்னும், வாடிய மேனி பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, 25அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி, வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே, 'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக் கான் கெழு நாடன் கேட்பின், யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே. 30

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார் 

99. பாலை
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை 5அதிரல் பரந்த அம் தண் பாதிரி உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ மராஅ மலரொடு விராஅய், பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே, கானம்; நயவரும் அம்ம; 10கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், பிடி மிடை, களிற்றின் தோன்றும் குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!  

உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ 

100. நெய்தல்
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, புரையப் பூண்ட கோதை மார்பினை, நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த 5கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் 10பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் 15வைகுறு விடியல் போகிய எருமை நெய்தல் அம் புது மலர் மாந்தும் கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!  

தோழி வரைவு கடாயது. - உலோச்சனார்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.