பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் எந்திரன் 2.0 படத்தின் படபிடிப்பு வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதலில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலிவுட்டை சேர்ந்த அக்ஷய் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
வில்லன் என்று சொன்னாலும், இந்த படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன் ஆகிய ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என படக்குழுவினர் எண்ணினார். ஆனால், அவர்களுடனான பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனதால் அக்ஷய் குமாரை சந்தித்திருக்கிறார்கள். ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்றதும் ஓகே என சம்மதித்து விட்டாராம் அக்ஷய். அதனால் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் தரப்பும் முடிவு செய்தார்களாம். அக்ஷய் குமார் கேட்ட சம்பளம் இந்தப் படத்திற்காக ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட அதிகம் எனவும் ரஜினியும் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக் கொண்டாதாகவும் சொல்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தினர்.
|