ஆவுடையார் கோயில் அருகே உள்ள பொய்யாளம்மன் கோயிலில் அம்பாளே பிரசவம் பார்க்கும் அதிசயம் நடந்து வருகிறது.அறிவியலில் ஒருபுறம் அதிசயங்கள் நடந்து கொண்டிருக்க ஆன்மிகம் அதனுடன் பெரும் போட்டி போடுகிறது. அதிசயங்களை எல்லாம் மிஞ்சும் ஒரு அதிசயம் இப்போதும் ஆவுடையார் கோயில் அருகே உள்ள பொய்யாளம்மன் கோயிலில் நடந்து வருகிறது.
அதுதான் அம்பாளே பிரசவம் பார்க்கும் அதிசயம்.இன்றுவரை ஒரு பிரசவம் காரணமாக ஒரு உயிருக்கு கூட சேதம் ஏற்பட்டதில்லை. இந்த அம்மனை நம்பிய பிரசவங்கள் பொய்த்ததில்லை என்பதால் தான், அம்மனுக்கு "பொய்யாளம்மன்' என பெயர் வந்தது எனவும் கூறுகிறனர். |