இங்குள்ள அம்மன் மங்களாம்பிகை மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், அம்மனுக்கு செம்பருத்தி மாலை, கிரீடம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.மூலவர்
உமாபதீஸ்வரர் கிழக்கு பார்த்து, பக்தர்களிடம் கருணைகொண்டு அருள் மழை பொழிகிறார். அம்பாள் மங்களாம்பிகை மேற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு
கருணை செய்கிறாள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்று இத்தலத்து அம்பாளுக்கு
பெயர் ஏற்பட்டது. இவளுக்கு வெள்ளிக் கிழமைகளில் 108 செம்பருத்தி பூக்களை மாலையாக அணிவிப்பவருடைய குலம் வாழையபடி வாழையாய் வம்ச விருத்தி
அடையும். செம்பருத்திப் பூ கிரீடம் செய்து தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மங்களாம்பிகைக்கு அணிவிப்பவர்கள் குபேரனை ஒத்தசெல்வந்தன் ஆகி விடுவான்
என்று பவிஷ்யோத்ரா பிருமாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய உமாபதீஸ்வரர் கோயிலில், சுவாமி,
அம்பாளுக்கு 11 வாரம் மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் மனஅமைதி கிடைக்கிறது. உமாபதியின் தரிசனத்தால் பெரும் பாவங்கள்அகலும்.
இங்குள்ள அம்மன் மங்களாம்பிகை மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், அம்மனுக்கு செம்பருத்தி மாலை, கிரீடம் படைத்து வழிபடுவதும் சிறப்பு. மூலவர் உமாபதீஸ்வரர் கிழக்கு பார்த்து, பக்தர்களிடம் கருணைகொண்டு அருள் மழை பொழிகிறார். அம்பாள் மங்களாம்பிகை மேற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு கருணை செய்கிறாள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்று இத்தலத்து அம்பாளுக்கு பெயர் ஏற்பட்டது.
இவளுக்கு வெள்ளிக் கிழமைகளில் 108 செம்பருத்தி பூக்களை மாலையாக அணிவிப்பவருடைய குலம் வாழையபடி வாழையாய் வம்ச விருத்தி அடையும். செம்பருத்திப் பூ கிரீடம் செய்து தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மங்களாம்பிகைக்கு அணிவிப்பவர்கள் குபேரனை ஒத்தசெல்வந்தன் ஆகி விடுவான் என்று பவிஷ்யோத்ரா பிருமாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய உமாபதீஸ்வரர் கோயிலில், சுவாமி, அம்பாளுக்கு 11 வாரம் மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் மனஅமைதி கிடைக்கிறது. |