இது ஒரு குடவரைக் கோயில். இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் "அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை' எனக்கூறி சிறிதுவெல்லத்தை எடுத்துவைத்துவிட்டு தேடினால் உடனே கிடைத்துவிடும். காமதேனுவுக்கு தேவேந்திரனால் சாபம் ஏற்பட்டு தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து சேர்ந்தது. கபில மகரிஷி, மங்கள மகரிஷி ஆகியோரை சேவித்து அனுகிரகம் பெற்று தினந்தோறும் காசி போய் கங்கை நீரை கொண்டு வந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து விட்டு மீதியை பாறையை கீறி அதில்விட்டு விடு என்று சொல்கிறார்கள்.
பசுவின் பக்தியை சோதிக்க ஈஸ்வரன் புலியின் ரூபம் எடுத்து திருவேங்கை வாசல் வந்து சோதிக்கிறார். பசுவின் பக்தியை அறிந்து சாப்பிட்டுவிடுவேன் என்று இறைவன் பயமுறுத்தினார். பசுவோ விரத பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என காமதேனு, புலியிடம் சொல்லி இங்குள்ள சுவாமியை வணங்கி விட்டு மீண்டும் செல்ல அங்கு திருவேங்கைவாசலில் காமதேனுவுக்கு மோட்சம் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகச் சிறந்த குடைவறைக் கோயிலாக இன்றும் திகழ்கிறது. |