ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன. ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது. அந்த சமயத்தில் சூரிய, சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக கூறுகிறார்கள்.
எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர். இங்கு உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில், ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.பழனி மலை முருகனை போகர் இந்த மலையிலிருந்து தான் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ளார். எனவே இந்த ஐவர்மலையை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.
ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன. |