கோயில் எதிரே வைகை நதி ஓடுகிறது. இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும்
தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. இதை "உத்தரவாகினி' என்பர். காசியில் கங்கை நதியும் இவ்வாறே பாய்வதால், இத்தலத்தை
காசிக்கு நிகரானதாகச் சொல்கிறார்கள்.சிருங்கேரி மடத்தின் 25வது பீடாதிபதி சச்சிதானந்த பாரதி மகாசுவாமிகளின் அவதார தலம் இது. 1623 - 1663
வரையில் சிருங்கேரி மடத்தை நிர்வகித்தவர் இவர். இவரே சிருங்கேரி மடத்தின் முந்தைய 24 பீடாதிபதிகளின் வரலாற்றைத் தொகுத்தவர். மதுரை
மீனாட்சியம்மனைப் போற்றியும் இவர் பாடல்கள் இயற்றியுள்ளார். இவருக்கு இக்கோயில் அருகில் மண்டபம் உள்ளது. ஆவணி மாத ரோகிணி
நட்சத்திரத்தன்று இவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும். அப்போது, இக்கோயிலில் ஏகாதச ருத்ரஜெப யாகத்துடன், சிவன், அம்பிகைக்கு விசேஷ
அபிஷேக, பூஜைகள் நடக்கும்.சமஸ்கிருத மொழிக்கு முதன்முதலாக தமிழில் அகராதி வெளியிட்ட அரங்க கிருஷ்ண சாஸ்திரிகளும் இவ்வூரில்
பிறந்தவரே ஆவார்.ஒருசமயம் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்றில் அடித்து வரப்பட்ட நந்தியும், வலம்புரி சங்கும் கரையில்
ஒதுங்கியது. இந்த நந்தியை சுவாமி சன்னதி முன், பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதோஷ நாட்கள், கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி ஆகிய விசேஷ
காலங்களில் மட்டும், வலம்புரி சங்கில் தீர்த்தம் எடுத்து விஸ்வநாதருக்கு பூஜை செய்கின்றனர். வைகையில் கிடைத்த சங்கரலிங்கம் சன்னதி
பிரகாரத்தில் உள்ளது.சந்திரன், விநாயகர், ஐயப்பன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நவக்கிரகம், காலபைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில்
உள்ளனர். கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி தனிச்சன்னதி அமைப்பில் காட்சி தருகிறார்
கோயில் எதிரே வைகை நதி ஓடுகிறது. இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும் தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. இதை "உத்தரவாகினி' என்பர். காசியில் கங்கை நதியும் இவ்வாறே பாய்வதால், இத்தலத்தை காசிக்கு நிகரானதாகச் சொல்கிறார்கள். சிருங்கேரி மடத்தின் 25வது பீடாதிபதி சச்சிதானந்த பாரதி மகாசுவாமிகளின் அவதார தலம் இது.
1623 - 1663 வரையில் சிருங்கேரி மடத்தை நிர்வகித்தவர் இவர். இவரே சிருங்கேரி மடத்தின் முந்தைய 24 பீடாதிபதிகளின் வரலாற்றைத் தொகுத்தவர். மதுரை மீனாட்சியம்மனைப் போற்றியும் இவர் பாடல்கள் இயற்றியுள்ளார். இவருக்கு இக்கோயில் அருகில் மண்டபம் உள்ளது. ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று இவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும்.
அப்போது, இக்கோயிலில் ஏகாதச ருத்ரஜெப யாகத்துடன், சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். சமஸ்கிருத மொழிக்கு முதன்முதலாக தமிழில் அகராதி வெளியிட்ட அரங்க கிருஷ்ண சாஸ்திரிகளும் இவ்வூரில் பிறந்தவரே ஆவார். |