ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் - சமந்தா நடித்துள்ள கத்தி படத்தின் படபிடிப்பு காட்சிகள் அனைத்தும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து, படத்தின் இறுதி கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இது அவருக்கு கிடைத்த முதல் பெரிய பட்ஜெட் படமென்பதால் கடந்த 3 மாத காலமாக கத்தி பட வேலைகளிலேயே முழுசாக மூழ்கிக்கிடக்கிறார். மேலும் இதற்காக சில சின்ன பட்ஜெட் படங்களையும் தியாகம் செய்தார் அனிருத்.
ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுதள்ளது. இந்நிலையில் ‘கத்தி’ படத்திற்கு இசையமைக்கும் அனிருத் பின்னணி இசை சேர்க்கும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். இதுகுறித்து, ‘ஹலோ…. ஸ்டுடியோவிலிருந்து… ‘கத்தி’ பின்னணி இசை வேலை இரவு பகலாக போய்க்கொண்டிருக்கிறது… ‘கத்தி’ கூர்யாமையாகிக் கொண்டிருக்கிறது’ என டுவிட் செய்திருக்கிறார் அனிருத்.
முதலில் கத்தி படம் இம்மாதம் தீபாவளி அன்று தான் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
|