LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கல்வி என்று எதைச்சொல்ல

கல்வி என்று எதைச்சொல்ல

----------------------------------------------------

அறியாப்பருவத்தில் நான்

அறியாமல் செய்த பிழைதான்

இந்தக்காலத்தில் அதை

ஈவ் டீசிங் என்கிறார்கள்

சகதோழி செய்த புகாரொன்றில் கோபமுற்று

ஆசிரியர் அடித்த காயமொன்று வடுவாகி

கையில் நிலைத்தது நினைவுகளாய்

 

அடித்ததில் வெகுண்டெழுந்து நான்

வகுப்பறையை உடைக்கவில்லை

மண்டியிட்டு அப்போதே

மன்னிப்பும் கேட்டுவிட்டேன்

பள்ளிகள் கோவிலென்றும்

படைத்தவனும் பாடம்சொல்பவனும்

சரிநிகர் சமானமென்றும்

சொல்லிவளர்த்த காலமது

 

 என்ன தப்பு செஞ்சே என்று

அப்பா அடித்த அடி இன்னும்

கனவில் வந்தால் கலங்குகிறேன்

எந்த வாத்தி அடிச்சான் என்று

வரிந்துகட்டிக் கிளம்பிவிடும்

அப்பாக்கள் இல்லை அந்த நாளில்

 

பாலியல் குற்றத்தில் போக்சோவில கைதாகி

சிறைபோகும் ஆசிரியர் செய்திகள் தினம்பார்த்து

அடிவயிறு கலங்குகிறேன்

 

பள்ளி சென்றுவரும் என்

பருவமகளை நினைக்கும்போதெல்லாம்

ஏக்கமாய் தடவிக்கொள்கிறேன்

கையில் தடித்திருக்கும் அந்த வடுவை

 

அந்த ஆசிரியரும் அந்த அப்பாவும்

அந்த மாணவனும் வழக்கொழிந்துவிட்ட சமூகத்தில்

கல்வி என்று எதைச்சொல்ல

 

 

by Pranavan   on 26 Apr 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.