LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை

 

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் 
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட 
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650 
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் 
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் 
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு 
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651 
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே 
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் 
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் 
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 652 
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை 
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் 
கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம் 
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 653 
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு 
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன் 
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று 
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 654 
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் 
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் 
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து 
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 655 
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் 
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி 
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை 
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 656 
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் 
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை 
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் 
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 657 
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை 
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் 
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த 
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658 
செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும் 
அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ 
ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை 
அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. 659 
படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும் 
குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம் 
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா 
அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 660 
பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி 
வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை 
சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட 
ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 661 

 

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் 

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட 

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650 

 

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் 

சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் 

குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு 

அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651 

 

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே 

மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் 

தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் 

ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 652 

 

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை 

எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் 

கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம் 

அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 653 

 

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு 

நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன் 

உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று 

அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 654 

 

வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் 

கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் 

பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து 

அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 655 

 

தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் 

பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி 

உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை 

ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 656 

 

சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் 

காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை 

மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் 

ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 657 

 

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை 

மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் 

நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த 

அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658 

 

செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும் 

அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ 

ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை 

அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. 659 

 

படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும் 

குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம் 

நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா 

அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 660 

 

பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி 

வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை 

சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட 

ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 661 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.