இந்த கோயிலின் தலவிருட்சமான புளிய மரமும், கோயிலும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாயந்தது. பொதுவாக புளிய மரத்தை பற்றி கூறும்போது ""புளி ஆயிரம் பொந்து ஆயிரம்'' என் று கூறுவார்கள். அந்தவகையில் இந்த கோயிலின் தலவிருட்சமான புளிய மரத்தின் பொந்தைப்பார்த்தால் மரமும், கோயிலும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாயந்ததாக கருதப்படுகிறது.
பதஞ்சலி முனிவர் இந்த மரத்தின் அடியில் தவம் புரிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. பெரிய பொந்துடன் காணப்படும் இந்த மரத்தின் அடியில் உள்ள நாகம்மனுக்கு நாகதோஷம் உள்ளவர்கள் பால் ஊற்றி வழிபட்டால் தோஷம் நீங்குவதாக கூறுகிறார்கள்.மேலும், இந்த மரத்தின் திருமண வரம் வேண்டி தாலிக்கயிறும், குழந்தை வரம் வேண்டி பெண்களின் சேலைத்துணியால் தொட்டிலும் கட்டப்படுகின்றன.
இந்த மரத்தின் முற்றிய பெரிய கிளைகள் உடைந்து கீழே விழுந்ததில் இதுவரை மரத்தின் அருகே உள்ள சன்னதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறியது நம்மை ஆச்சரியப்படவைத்தது. |