இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின்
முகத்தில் படுவதும் தலத்தின் சிறப்பு.சபரிமலையைப் போலவே காப்பு கட்டுதலுடன் 10 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுகிறது.இங்குள்ள மூலவருக்கு முன்னால்
தத்வமஸி என்று எழுதப்பட்டிருக்கும். மூலவரைப் போலவே உற்சவ மூர்த்தியும் இருப்பது கூடுதல் சிறப்பு. இவ்விரு விக்ரகங்களும் சென்னை பரங்கிப்
பேட்டையிலும், மற்ற விக்ரகங்கள் காஞ்சி சங்கராபுரத்திலும் வடிவமைக்கப்பட்டவை. கார்த்திகை, மார்கழியில் தினமும் இங்கு கணபதி ஹோமம் நடைபெறும்.
மற்ற மாதங்களில் சனிக்கிழமை மட்டும் கணபதி ஹோமம் நடைபெறும். கைகளிலும், கால்களிலும் சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு ராமேசுவரத்திற்கு
பாதயாத்திரையாக வந்த சங்கிலி சித்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தவம் இருந்த இடம். அரசமரம், ஆலமரம், இத்திமரம் மூன்றும் மும்மூர்த்திகளாக
இத்திருத்தலத்தில் இருப்பது சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. இக்கோயில் வளாகத்தில் எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. பக்தர்கள் ரூ.1 நன்கொடையாக
கொடுத்தாலும் ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்திட ஆலயத்தின் உள்ளே தியான மண்டபம் உள்ளது. தினசரி மூன்று கால பூஜை
நடைபெறுகிறது. பூஜை வேளைகளின் போது ஏதேனும் ஒரு பூஜையிலாவது ஸ்ரீஐயப்பன் கருடனாக வந்து வானத்தில் வட்டமிடுவதைக் காண கண்கோடி
வேண்டும்.
இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படுவதும் தலத்தின் சிறப்பு. சபரிமலையைப் போலவே காப்பு கட்டுதலுடன் 10 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுகிறது. இங்குள்ள மூலவருக்கு முன்னால் தத்வமஸி என்று எழுதப்பட்டிருக்கும். மூலவரைப் போலவே உற்சவ மூர்த்தியும் இருப்பது கூடுதல் சிறப்பு.
இவ்விரு விக்ரகங்களும் சென்னை பரங்கிப் பேட்டையிலும், மற்ற விக்ரகங்கள் காஞ்சி சங்கராபுரத்திலும் வடிவமைக்கப்பட்டவை. கார்த்திகை, மார்கழியில் தினமும் இங்கு கணபதி ஹோமம் நடைபெறும். மற்ற மாதங்களில் சனிக்கிழமை மட்டும் கணபதி ஹோமம் நடைபெறும். கைகளிலும், கால்களிலும் சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு ராமேசுவரத்திற்கு பாதயாத்திரையாக வந்த சங்கிலி சித்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தவம் இருந்த இடம்.
அரசமரம், ஆலமரம், இத்திமரம் மூன்றும் மும்மூர்த்திகளாக இத்திருத்தலத்தில் இருப்பது சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. இக்கோயில் வளாகத்தில் எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. பக்தர்கள் ரூ.1 நன்கொடையாக கொடுத்தாலும் ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்திட ஆலயத்தின் உள்ளே தியான மண்டபம் உள்ளது. தினசரி மூன்று கால பூஜை நடைபெறுகிறது. |