LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!

சிபிஎஸ்இ கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்தும் வகையில், 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டு உள்ளது. 

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் ‘பாஷாசங்கம்’(மொழிக்கான சங்கம்) ஒரு அதிரடி முடிவை எடுத்து உள்ளது. அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அட்டவணை 8 ல் சேர்க்கப்பட்டு உள்ள 22 மொழிகளை, சிபிஎஸ்இ மாணவ, மாணவியர் அடிப்படை மொழியாக தெரிந்து கொள்ள செய்ய வேண்டும்.

அந்த மொழிகளை  பிரபலப்படுத்துவது, அந்த மொழிகளில் தகவல் தொடர்பு செய்ய குறைந்தபட்சம் 5 வாக்கியங்களை தினமும் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து, அந்தந்த மாநிலத்தின் கல்வித்துறை செயலாளர்களுக்கு பாஷா சங்கம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதேபோல, சிபிஎஸ்இ தலைவருக்கும், கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கும் அனுப்பி உள்ளது. 
இதன்படி இந்திய மொழிகளாகிய 22 மொழிகளையும் தினமும் பள்ளி மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 5 வாக்கியங்கள் கற்றுத் தர வேண்டும். இதுதொடர்பாக ஒரு திட்டத்தை பாஷாசங்கம் வகுத்துக் கொடுத்து உள்ளது. அதன்படி, நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கண்ட மொழிகளை போதிக்க வேண்டும். 

இந்த மொழிகள் தவிர வேறு இந்திய மொழிகள் குறித்து கற்றுத் தர ஆசிரியர்களிடம் மாணவர்களோ, பொதுமக்களோ, பெற்றோரோ கேட்கும்பட்சத்தில், குறிப்பிட்ட அந்த மொழியில் தேர்ந்த ஆட்களை அழைத்து வந்து பள்ளி இறைவணக்க நேரத்தில் தினமும் 5 வாக்கியங்கள் சொல்லித் தரலாம். 

அந்த வகையில் மேற்கண்ட திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தேர்வு செய்து, அந்த பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்க உள்ளது

by Mani Bharathi   on 01 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்! அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு
எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...? எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.