LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்பட்டு உள்ளது. 

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.  பல்வேறு காரணங்களால் இத்திட்டம் முழுமையாக செயல்படாமல் உள்ளது.

முக்கூடல் அருகே பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளிக்கு தேவையான பொருட்களை அவ்வப்போது நன்கொடையாக வழங்கி வருகிறது.

இதுவரை 2 கம்ப்யூட்டர்கள், 2 லேப்டாப்கள், இரும்பு அலமாரி, ஒலிபெருக்கி போன்றவை ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து, பள்ளிக்கு வழங்கி உள்ளது.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ‘ஸ்மார்ட்’ வகுப்பறை துவங்க நிதி ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன்படி தற்போது நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் ரூ.35 ஆயிரம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளியில் ஏற்படுத்தியது.

இதன் அறிமுக கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சங்கரம்மாள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளிக்கு மாவட்டத்தின் தூய்மை பள்ளி விருது கிடைத்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதியதாக துவக்கப்பட்டுள்ள ‘ஸ்மார்ட்’ வகுப்பறையில் தற்போது 8ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் படக்காட்சிகளுடன் விளக்கி கற்பிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

by Mani Bharathi   on 11 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது
5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி  வழங்கும் மத்திய அரசு 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி வழங்கும் மத்திய அரசு
தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
புதுச்சேரியில்  மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு
சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை -  மத்தியக் கல்வி அமைச்சகம் 6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை - மத்தியக் கல்வி அமைச்சகம்
ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம் ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம்
12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.