LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது

அல்சீமர் எனப்படும் மறதி, சிந்திக்கும் திறன் இழத்தல் போன்ற மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கில் இருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கி உள்ளது. 
தூக்கமின்மை, மன அழுத்தம், ஞாபக மறதி, சிந்தனை இழத்தல்(அல்சீமர்) போன்ற நோய்கள் உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் முதல்  முறையாக உருவாக்கி உள்ளனர்.
 இதுகுறித்த கட்டுரை சீனாவில் இருந்து வெளியாகும் ‘நேஷனல் சயின்ஸ் ரிவியூ’ என்ற ஆங்கில இதழில் வெளியாகி உள்ளது. இந்த குளோனிங் குரங்கு குட்டிகள் சீனாவின் ஷாங்காய் நகரில்  உள்ள மூளை அறிவியல் மையத்தில் பிறந்துள்ளன. இன்குபேட்டரில் இந்த குரங்கு குட்டிகள் இருக்கும் படமும் வெளியிடப்பட்டு உள்ளது. 
மருத்துவ ஆராய்ச்சிக்காக, ஒரே விதமான மரபணு பின்னணியுள்ள குரங்கு குட்டிகளை உருவாக்கி உள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நோய்கள், மனித நோய்களுடன் தொடர்பு உடையவை. 
முன்பு அல்சீமர் நோய்  ஆராய்ச்சிக்கு எலிகள் மற்றும் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இவைகள் மனித செயல்பாடுகளில் முற்றிலும் மாறுபட்டவையாக இருப்பதால் இந்த ஆராய்ச்சி எதிர்பார்த்த, முழுமையான பலனை அளிக்கவில்லை. அதனால் மனித உடல்  தன்மையுடன் ஒத்துள்ள குரங்குகள் மூலம் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
இதற்காக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  அதிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்கு குட்டிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. 
சீனாவில் கடந்த 2017ம் ஆண்டு குளோனிங் முறையில் ஜாங், ஜாங், ஹூவா, ஹூவாவா என்ற இரண்டு குரங்குகள் உருவாக்கப்பட்டன. விலங்கு ஆராய்ச்சியில் பின்பற்றப்படும் சர்வதேச நெறிமுறையுடன் இந்த மருத்துவ  ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. 
இதுகுறித்து இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மியூமிங் பூ கூறும் போது, ‘‘எதிர் காலத்தில் மனித மூளை நோய்களை ஆய்வு செய்வதோடு, அதற்கான மருந்துகள் குளோனிங் முறையில்  உருவாக்கப்படும் குரங்குகளிடம் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் எண்ணிக்கை குறையும்’’ என்றார்.

by Mani Bharathi   on 27 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
நீர் உடும்பு நீர் உடும்பு
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்! சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !! உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.