LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- கட்டுரைகள்

அறிவியல் தமிழ்

அறிவியல் தமிழ்

திரு. இரா. ராஜராஜன்,சென்னை,இந்தியா

தமிழ் மொழியானது கலை, கலாச்சாரம்,இலக்கியம், இறைமை, அறிவியல் என்ற மானுடத்தின் அனைத்துத் தேவைகளையும் கொண்ட மொழி என்பதைத் தாண்டி இன்ன பிற பன்முகக் கூறுகளைக் கொண்ட மொழி மட்டுமல்ல, நுண்ணிய அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய மொழியும் நம் தமிழ் மொழி 

நிலம், நீர், தீ, காற்று என்ற இயற்கைக் கூறுகளெல்லாம் தோன்றி, மனித இனம் என்று தோன்றியதோ அன்றே தோன்றிய  மொழி, உயர்தனிச் செம்மொழி, உலக மொழிகளில் தலை சிறந்த மொழி என்பவையெல்லாம் நம் பெருமைக்குரிய உண்மைகள் என்றாலும், இம்மொழியின் தன்மை, தொன்மை, முதன்மை இவற்றை அடியொற்றி நோக்குகின்ற போது இது அறிவியலுடன் இணைந்த மொழிதான் என்றாலும், தற்போது ஆங்கில வடிவில் உலவி வரும் அறிவியல் கலைச்  சொற்களையும், ஆங்கிலத்தில் சொல்லி, படித்து, எழுதிப் பழகிப் போன அறிவியல் நிரூபணங்களையும், பல்வேறு அறிவியல் எடுகோள்கள், கருத்துகள் இவற்றைத் தெள்ளத் தெளிவாகப், படித்து, எழுதிட இயலவில்லை என்ற பொதுவான கருத்து நிலவி வருவது உண்மையே.

உள்ளத்தால் உணர்ந்து தமிழ் வழியாக அறிவியலைப் படித்தால் சிந்தனை  சக்தியும், ஆக்கமும் பெருகும் என்ற குரல் ஆங்காங்கே ஓங்கி ஒலித்தாலும், உலகளாவிய பார்வையில், உலக நாடுகளுடன் செய்தித் தொடர்பிற்கு பொது ஊடகமாக ஆங்கிலம் உருவாக்கப்பட்டு விட்ட நிலையில், முற்றிலும், தமிழில் அறிவியலைக் கொணர்வதில் தயக்கம் இருப்பது உண்மை. ஆனால், தமிழ் அறிவியலைத் தன்னுள் கொண்ட ஒரு அறிவியல் மொழி என்பதில் மாற்றுக்கருத்து  இல்லை.

தமிழில் அறிவியல் உள்ளிட்ட அத்துணைப் பிரிவுகளும் தொன்று தொட்டு உள்ளன என்பது மட்டுமல்ல, அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையும் உள்ளது என்பதை அறிய வேண்டும்.

பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Evolution Theory ) சார்லஸ் டார்வின் தந்ததை உணர்ந்து போற்றுகிறோம் ; தவறில்லை; ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இதே கோட்பாட்டை,

 “ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே 

  இரண்டறிவு அதுவே அதனோடு நாவே 

 மூன்றறிவு அதுவே அவற்றோடு மூச்சே 

 நான்கறிவு அதுவே அவற்றோடு கண்ணே 

 ஐந்தறிவு அதுவே அவற்றோடு செவியே 

 ஆறறிவு அதுவே அவற்றோடு மனமே

 

என்ற தொல்காப்பியர் தந்த தொல்காப்பியம் உள்ளடக்கிய அறிவியலை உணர்ந்தோமா?

எப்படி நாம் வாழுகின்ற இந்தப் பூமிப்பந்து தோன்றியிருக்கக் கூடும். அண்ட சராசரங்கள் உருவாகியிருக்கக் கூடும் என்பதைச் சொல்லுகின்ற Big Bang Theory அதாவது,

"விண்ணுலகில் அனைத்துப் பொருட்களும் ஒரே ஒரு மிக அடர்த்தியான நெருப்புக் கோளமாக இருந்திருக்க வேண்டும். இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்த நெருப்புக் கோலம் வெடித்துச் சிதறி, பல திசைகளிலும் வியாபித்து, அவைதான் கோள்களாகவும், வெண்மீன்களாகவும், பால் வழி மண்டலங்களாகவும் மாறியுள்ளன" என்ற செய்தியில் சொல்லப்படும் துகள்களின் இயக்கத்தின் ஐந்து நிலைகளை 

அமிழ்தல் (With drawing )

இமிழ்தல் (Over flowing )

குமிழ்தல்  (Clustering around in order )

உமிழ்தல்  ( emitting )

தமிழ்தல்  (resulting in a well defined form )

என்று தமிழில் விளக்கப்படுகிறது.

பூமியானது முழுமையான இறுதி வடிவம் பெற்றதைக் குறிக்கும். "தமிழ்தல்" என்ற அறிவியல் சொல்லில் இருந்து பெற்றது தான் தமிழ் என்பது வியப்பிற்குரிய உண்மை மட்டுமல்ல. தமிழை விட இனிக்கும் செய்தியன்றோ!

(இனிமை தொடரும்…)

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
நீர் உடும்பு நீர் உடும்பு
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது
சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்! சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !! உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.