LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- கிறிஸ்தவ பண்டிகைகள்

கிறிஸ்து ஜெயந்தி

 

வரலாற்றின் மாமனிதர்:
 வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார். 
அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' ஆவார்.
 அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார்
 அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்' எனப்பட்டார்
 அவர் யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் உலகத்தை ஜெயித்தார்
 அவர் எந்தக் குற்றமும் புரிந்ததில்லை எனினும் சிலுவையில் அறைப்பட்டார்
 அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் எனினும் என்றும் ஜீவிக்கிறவராக உயிர்தெழுந்தார், பரிசுத்த ஆவியாய் நமக்குள் இருக்கிறார்.
 
அனைத்தும் செய்யும் ஆண்டவர் :
""கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்'' (சங்.138:8) என்ற 
வசனத்தை வாசித்திருப்பீர்கள். ஆம்..அவரால் எதையும் செய்ய முடியும் என்பதற்குரிய சாட்சியைப் பாருங்கள்.
ஒரு இளம்பெண்ணுக்கு திருமணமாக மிகவும் தாமதமானது. அவளுக்கு திருமணம் நடத்த முயற்சி எடுக்க ஒருவரும் இல்லை. இதனால், அவள் அழுதபடியே 
ஒரு போதகரிடம் முறையிட்டு அழுதாள். போதகர் அவளிடம், மேற்கண்ட வசனத்தை வாசித்துக் காட்டியதுடன், ""எனக்காக யாவையும் செய்து முடிக்கும் 
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தினமும் நூறு முறை சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்து,'' என்றார்.
மூன்று மாதங்கள் கழிந்தன. அவள் திருமண அழைப்பிதழுடன் போதகரைக் காண வந்தாள். ""போதகரே! எனக்காக கர்த்தர் உண்மையாகவே யாவையும் செய்து 
முடித்தார்,'' என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
ஆதாம் ஏவாளை தோட்டத்தில் வைக்கும் முன்னர், கர்த்தர் அவர்களுக்காக சூரியன், சந்திரன், காற்று, உணவு. தண்ணீர்
பறவைகள், மிருகங்கள், கனிவகைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்திருந்தார். அதையெல்லாம் கண்டபோது, ஆதாமின் உள்ளம் எவ்வளவு 
நன்றியோடு பொங்கி, ""எனக்காக என் தேவன் எத்தனை மேன்மைகளைச் செய்து முடித்திருக்கிறார்,'' என்று ஸ்தோத்தரித்திருக்கும்.
அதுபோலவே, கர்த்தர் நமக்காக எல்லாவற்றையும் சிலுவையில் செய்து, ""முடிந்தது'' என்றார். பாவமன்னிப்புண்டாக்கினார்.நித்திய ஜீவனை ஏற்படுத்தினார். 
அது மட்டுமல்ல, நமக்காக பரலோகத்திலும் அவர் யாவையும் செய்து முடித்திருக்கிறார்.   "உன் தேவனாகிய உன்னை மென்மேலும் ஆசிர்வதிப்பார்" என்ற 
வசனத்தின்படி, நம் தேவனாகிய கர்த்தர், கூடவே இருந்து நம்மை என்றென்றும் ஆசிர்வதித்து கொண்டே இருக்கிறார்.நமக்காக யாவையும் செய்து முடிக்கும் 
நம் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதகா. 

வரலாற்றின் மாமனிதர்:

 

     வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார். அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' ஆவார். அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார். அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்',  யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் உலகத்தை ஜெயித்தார், அவர் எந்தக் குற்றமும் புரிந்ததில்லை எனினும் சிலுவையில் அறைப்பட்டார் அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் எனினும் என்றும் ஜீவிக்கிறவராக உயிர்தெழுந்தார், பரிசுத்த ஆவியாய் நமக்குள் இருக்கிறார். 

 

அனைத்தும் செய்யும் ஆண்டவர் :

 

     "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்'' (சங்.138:8) என்ற வசனத்தை வாசித்திருப்பீர்கள். ஆம்..அவரால் எதையும் செய்ய முடியும் என்பதற்குரிய சாட்சியைப் பாருங்கள். ஒரு இளம்பெண்ணுக்கு திருமணமாக மிகவும் தாமதமானது. அவளுக்கு திருமணம் நடத்த முயற்சி எடுக்க ஒருவரும் இல்லை. இதனால், அவள் அழுதபடியே 
ஒரு போதகரிடம் முறையிட்டு அழுதாள். போதகர் அவளிடம், மேற்கண்ட வசனத்தை வாசித்துக் காட்டியதுடன், "எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று தினமும் நூறு முறை சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்து,'' என்றார்.

 

      மூன்று மாதங்கள் கழிந்தன. அவள் திருமண அழைப்பிதழுடன் போதகரைக் காண வந்தாள். "போதகரே! எனக்காக கர்த்தர் உண்மையாகவே யாவையும் செய்து முடித்தார்,'' என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.ஆதாம் ஏவாளை தோட்டத்தில் வைக்கும் முன்னர், கர்த்தர் அவர்களுக்காக சூரியன், சந்திரன், காற்று, உணவு. தண்ணீர்பறவைகள், மிருகங்கள், கனிவகைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்திருந்தார். அதையெல்லாம் கண்டபோது, ஆதாமின் உள்ளம் எவ்வளவு நன்றியோடு பொங்கி, ""எனக்காக என் தேவன் எத்தனை மேன்மைகளைச் செய்து முடித்திருக்கிறார்,'' என்று ஸ்தோத்தரித்திருக்கும்.

 

 பாவமன்னிப்பு :

 

     அதுபோலவே, கர்த்தர் நமக்காக எல்லாவற்றையும் சிலுவையில் செய்து, ""முடிந்தது'' என்றார். பாவமன்னிப்பு உண்டாக்கினார். நித்திய ஜீவனை ஏற்படுத்தினார். அது மட்டுமல்ல, நமக்காக பரலோகத்திலும் அவர் யாவையும் செய்து முடித்திருக்கிறார்.  "உன் தேவனாகிய உன்னை மென்மேலும் ஆசிர்வதிப்பார்" என்ற வசனத்தின்படி, நம் தேவனாகிய கர்த்தர், கூடவே இருந்து நம்மை என்றென்றும் ஆசிர்வதித்து கொண்டே இருக்கிறார்.நமக்காக யாவையும் செய்து முடிக்கும் நம் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 

by Swathi   on 09 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.