டெல்லி மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளது குறித்தும், டில்லியை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றி காட்டுவதாக உறுதி அளித்துள்ளது குறித்தும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அன்னா பேசியதாவது, அரசியலில் சேர்வது பாவம் இல்லை; அவரது கட்சிக்கு நிதி எப்படி வருகிறது என்பது பற்றியும், அரசியலில் நிறைந்துள்ள ஊழலுமே எனது கவலை; கெஜ்ரிவால் பல காலம் என்னுடன் இருந்து பணியாற்றி உள்ளார்; அரசியலில் இருக்கும் ஊழலை அவர் சுத்தம் செய்தால் அது மிகப் பெரிய சாதனை; அது மற்ற அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடமாக அமையும் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
|