LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

அரசியலமைப்பு சட்ட தினம்: பள்ளி- கல்லூரி மாணவர்கள் 5.50 லட்சம் பேர் ஒரே நேரத்தில் உறுதி ஏற்பு!

அரசியலமைப்பு சட்ட தினத்தை முனனிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில, பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 5.50 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்றனர். 

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ம் தேதி, அரசியலமைப்பு சட்ட தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு அரசியலமைப்பு சட்ட தினம் கடைபிடிக்கப்பட்டது

இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியன இணைந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் அமைப்பு உறுதிமொழி ஏற்புக்கு ஏற்பாடு செய்திருந்தன.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 2,154 பள்ளிகளிலும், 112 தனியார் பள்ளிகள், 145 கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும், 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் அரசியலமைப்பு உறுதிமொழியை ஏற்று சாதனை படைத்தனர்.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி கலந்து கொண்டார்.

இதில் பயிற்சி கலெக்டர் பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்றனர்.

அதேபோல், கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.  அந்த வீடியோ பதிவை இணையதள முகவரி மூலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கு அனுப்பி வைத்தனர்.

by Mani Bharathi   on 29 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...? எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.