LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

எட்டாம் திருமுறை-20

 

20.திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
(திருப்பெருந்துறையில் அருளியது) 
எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே 
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் 
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் 
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் 
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் 
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே 
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் 
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.
368
அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய் 
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் 
கருனையின் சூரியன் எழவெழ நயனக் 
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் 
திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர் 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே 
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.
369
கூவின பூங்குயில் கூவின கோழி 
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் 
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து 
ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் 
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் 
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.
370
இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால் 
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் 
துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் 
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் 
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் 
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே 
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் 
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.
371
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் 
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் 
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் 
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் 
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா 
சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து 
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் 
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.
372
பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர் 
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் 
மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின் 
வணங்குகின்றார் அணங் கின்மண வாளா 
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் 
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.
373
அது பழச்சுவையென அமுதென அறிதற்கு 
அரிதென எளிதென அமரும் அறியார் 
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே 
எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும் 
மதுவளர் பொழில்திரு உத்தர கோச 
மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா 
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் 
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே.
374
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் 
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் 
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் 
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே 
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் 
திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி 
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் 
ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே.
375
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் 
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே 
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் 
கண்ணகத் தேநின்று களிதரு தேனே 
கடலமு தேகரும் பேவிரும் படியார் 
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் 
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.
376
புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம் 
போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி 
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் 
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் 
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் 
படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும் 
அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் 
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.
377
திருச்சிற்றம்பலம்

 

20.திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

(திருப்பெருந்துறையில் அருளியது) 

எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம்

 

 

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே 

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் 

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் 

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் 

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் 

திருப்பெருந் துறை உறை சிவபெருமானே 

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் 

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

368

 

அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய் 

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் 

கருனையின் சூரியன் எழவெழ நயனக் 

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் 

திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர் 

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே 

அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.

369

 

கூவின பூங்குயில் கூவின கோழி 

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் 

ஓவின தாரகை ஒளியொளி உதயத்து 

ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் 

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் 

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் 

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

370

 

இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால் 

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் 

துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் 

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் 

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் 

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே 

என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் 

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

371

 

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் 

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் 

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் 

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் 

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா 

சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து 

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் 

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

372

 

பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர் 

பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் 

மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின் 

வணங்குகின்றார் அணங் கின்மண வாளா 

செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் 

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் 

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

373

 

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு 

அரிதென எளிதென அமரும் அறியார் 

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே 

எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும் 

மதுவளர் பொழில்திரு உத்தர கோச 

மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா 

எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் 

எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே.

374

 

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் 

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் 

பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் 

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே 

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் 

திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி 

அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் 

ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே.

375

 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் 

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே 

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் 

கண்ணகத் தேநின்று களிதரு தேனே 

கடலமு தேகரும் பேவிரும் படியார் 

எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் 

எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.

376

 

புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம் 

போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி 

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் 

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் 

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் 

படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும் 

அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் 

ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.

377

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 25 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.