LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

எட்டாம் திருமுறை-35

 

35.அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்
(தில்லையில் அருளியது) 
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் 
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி 
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு 
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் 
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம் 
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன 
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் 
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற 
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா 
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518
கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் 
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு 
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் 
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால் 
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு 
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520
வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன் 
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன் 
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும் 
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் 
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் 
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி 
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் 
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் 
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா 
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் 
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச் 
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது 
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் 
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு 
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா 
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525
திருச்சிற்றம்பலம்

 

35.அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்

(தில்லையில் அருளியது) 

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

 

 

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் 

கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி 

மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு 

அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516

 

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் 

இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம் 

திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன 

அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

 

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் 

என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற 

என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா 

அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518

 

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்

வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் 

துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு 

அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519

 

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் 

துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால் 

திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு 

அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520

 

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன் 

தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன் 

தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும் 

ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521

 

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் 

புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் 

முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி 

அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522

 

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் 

வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் 

செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா 

அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523

 

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் 

நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச் 

செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது 

அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524

 

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் 

நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு 

வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா 

ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 25 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.