LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பதினோராம் திருமுறை-41

12.10. திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை



1409     புலனோ டாடித் திரிமனத்தவர்
    பொறிசெய் காமத் துரிசடக்கிய
    புனித நேசத் தொடுத மக்கையர்
    புணர்வி னாலுற் றுரைசெ யக்குடர்
    சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்
    சுடுவெ ணீறிட் டமணகற்றிய
    துணிவி னான்முப் புரமெரித்தவர்
    சுழலி லேபட் டிடுத வத்தினர்
    உலகின் மாயப் பிறவி யைத்தரும்
    உணர்வி லாஅப் பெரும யக்கினை
    ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
    உபரி யாகப் பொருள்ப ரப்பிய
    அலகில் ஞானக் கடலி டைப்படும்
    அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
    அடிய ரேமுக் கருளி னைச்செயும்
    அரைய தேவத் திருவ டிக்களே.     1

1410    
திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
    தெளிதேனொத் தினியசொல் மடவாருர்ப் பசிமுதல்
    வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
    வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
    உருஞானத் திரள்மன முருகாநெக் கழுதுகண்
    உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
    குருவாகக் கொடுசிவ னடிசூடத் திரிபவர்
    குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.     2

1411    
குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
    குரும்பை முலையிடையே செலுந்தகை நன்மடவார்
    அழிந்த பொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
    அளைந்த யருமதுநீ அறிந்திலை கொல்மனமே
    கழிந்த கழிகிடுநாள் இணங்கி தயநெகவே
    கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
    பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
    புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.     3

1412    
இலைமா டென்றிடர் பரியார் இந்திர
    னேஒத் துறுகுறை வற்றாலும்
    நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்
    நீள்சன் மக்கடல் இடையிற்புக்
    கலையார் சென்றரன் நெறியா குங்கரை
    அண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
    சிலைமா டந்திகழ் புகழா மூருறை
    திருநா வுக்கர சென்போரே.     4

1413    
என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை
    இங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்
    முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென
    மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
    வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
    வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்
    அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்
    அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.     5

1414    
பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
    பெட்டியுரை செய்துசோறு சுட்டியுழல் சமண்வாயர்
    கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
    கற்றமதி யினனோசை இத்தரசு புகழ்ஞாலம்
    முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
    கற்றுணையில் வருமாதி ----------------
    பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
    பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.     6

1415    
பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி
    பரசுநா வரசான பரமகா ரணவீசன்
    அதிகைமா நகர்மேவி அருளினால் அமண்மூடர்
    அவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்
    நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை
    நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
    மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம்
    உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.     7

1416    
தாமரைநகும் அகவிதழ் தகுவன
    சாய்பெறுசிறு தளிரினை அனையன
    சார்தருமடி யவரிடர் தடிவன
    தாயினும் நல கருணையை உடையன
    தூமதியினை ஒருபது கொடுசெய்த
    சோதியின்மிகு கதிரினை யுடையன
    தூயனதவ முனிவர்கள் தொழுவன
    தோமறுகுண நிலையின தலையின
    ஓமரசினை மறைகளின் முடிவுகள்
    ஓலிடுபரி சொடுதொடர் வரியன
    ஓவறுமுணர் வொடுசிவ வொளியன
    ஊறியகசி வொடுகவி செய்தபுகழ்
    ஆமரசுயர் அகநெகு மவருள
    னாரரசதி கையினர னருளுவ
    னாமரசுகொ ளரசெனை வழிமுழு
    தாளரசுதன் அடியிணை மலர்களே.     8

1417    
அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
    தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
    கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
    குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
    பிடியாராப் பெறுதற் கரிதாகச் சொலும்அப்
    பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
    செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
    றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.     9

1418    
சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
    திரியும் பத்தியிற் சிறந்தவர்
    திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
    திகழும் பைம்பொடித் தவண்டணி
    கவசம் புக்குவைத் தரன்கழல்
    கருதுஞ் சித்தனிற் கவன்றிய
    கரணங் கட்டுதற் கடுத்துள
    களகம் புக்கநற் கவந்தியன்
    அவசம் புத்தியிற் கசிந்துகொ
    டழுகண் டத்துவைத் தளித்தனன்
    அனகன் குற்றமற் றபண்டிதன்
    அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
    பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
    படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
    பசுபந் தத்தினைப் பரிந்தடு
    பரிசொன் றப்பணிக் குநன்றுமே.     10

1419    
நன்று மாதர நாவினுக் கரைசடி
    நளினம் வைத்துயின் அல்லால்
    ஒன்று மாவது கண்டிலம் உபாயமற்
    றுள்ளன வேண்டோமால்
    என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
    இகபரத் திடைப்பட்டுப்
    பொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற்
    பொறியிலைம் புலனோடே.     11


திருச்சிற்றம்பலம்


பதினோராம் திருமுறை முற்றிற்று.

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.