|
||||||||
ஐந்தாம் திருமுறை-12 |
||||||||
5.012.திருவீழிமிழலை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
1184 கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே. 5.012.1
மனங்கரைந்து கைதொழுவாரையும் காதலித்து அருள்வன்; தன்னை விலக்கி இகழாநின்று எழும் புறச்சமயத்தாரையும் வாடச்செய்யான். இத்தகைய அவன் வரிசையாகிய பூதகணங்களோடு நித்தலும் விரைந்து போவது வீழிமிழலைத் தலத்திற்கே. (வேண்டுதல் வேண்டாமையிலானாகிய முதல்வன், அந்தணர் வழிபடுதலால் அவர்க்கு அருள்புரிய விரைந்து தோன்றுவன் என்றபடி.)
1185 ஏற்று வெல்கொடி யீசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே. 5.012.2
பிற கொடிகளை வென்று மேம்பட்ட ஆனேற்றுக் கொடியையுடைய ஈசன் தனக்குரிய ஆதிரை நாளில், தான் வேறு வேறு கோலங் கொண்டு காட்சியளித்தற்கு இடமாகிய திருவீழிமிழலையில் தாம் சந்தனம் எனக்கொண்டு பூசிவந்த வெள்ளை நீற்றைக் கொள்ளாது மணமுள்ள பொருள்களைச் சூடிக்கொள்வர்; மிக நல்லமதியைச் சூடு வோராகவும் உளர். சந்தன வெள்ளை நீற்றை விரவல் உடையராய் (அணிந்து) நாற்றம் சூடுவர் (நறுமலர் அணிவர்) என்றுரைப்பினும் அமையும்.
1186 புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவ னீசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே. 5.012.3
சூலம் உடையவனும், விடை ஊர்தியனும், வினைகளை வென்றவனும் நாகத்தைப் பூண்டவனும், வெண்மழு வாள் உடையவனும், அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும், இருவினையற்ற மேலோர் தொழும் வீழிமிழலை இறைவனே.
1187 மாடத் தாடு மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும் வீழி மிழலையே. 5.012.4
முதல்வனை மாடத்தும் (விமானத்தும்), ஆடும் மனத்தும் உடன் வைத்தவராகிய திருமாலும், வேத கோஷம் செய்யும் பிரமனும், குருக்ஷத்திரத்தார் பலரும் (பாண்டவர்) , வேதத்தின் மூல பாடம் பேணும் அந்தணர்களும், பழிப்பார் கூறும் பழிப்பு அல்லதாகிய திருவேடம் பூண்ட அடியார்களும், தொழும் (பதி) திருவீழிமிழலையே.
1188 எடுத்த வெல்கொடி யேறுடை யான்தமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது வீழி மிழலைக்கே. 5.012.5
உயர்த்துப் பிடித்த இடபக்கொடியையுடைய சிவபிரானின் அடியவர்கள், கோவணமே உடுப்பது; பிச்சை உணவே உண்பது; கீழ்நின்ற வல்வினைகளையே கெடுப்பது; பந்த பாசங்களை விடுத்துப் போவது வீழிமிழலைக்கே.
1189 குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணு முணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே. 5.012.6
குழலையும், யாழையும் போன்ற மொழியாரை வேட்கையினால் இசையும், உழலும் உடலைத் தீநெறியின்கண் ஊன்றும் நல்லுணர்வற்றவர்களே! நெருப்பை நீர் மடியின்கண் கொண்டு கெடாதீர்; பன்முறையினும் சாற்றினோம், மிழலையான் திருவடி சார விண்ணாளும் திறம் பெறலாம்.
1190 தீரன் தீத்தர ளன்சடைத் தங்கிய
நீர னாடிய நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே. 5.012.7
அறிஞனும், தீத்திரளைக் கையிற்கொண்டாடுபவனும், சடைத் தங்கிய கங்கையனும், ஆடிய திருநீற்றனும், வண்டார்ந்த கொன்றைத்தாரும், குளிர்ந்து மணக்கும் கண்ணியும் மாலையும் உடையவனும், புலன்களை வென்று விளங்கும் வீரனும் வீழிமிழலையிலுள்ள விகிர்தனே.
1191 எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரிய னார்தொழும் வீழி மிழலையே. 5.012.8
எரியைக்கையால் ஏந்தியவரும், யாங்கணும் தங்கி நிற்போரும், நரிகளைப் பரிகளாகக் கொண்டு இடுகாட்டிடை ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் (மகாதேவனும்) தங்கும் இடம் பிறப்போடு கூடிய இறப்பை அகல நினைப்பார் தொழும் தலமாகிய வீழிமிழலை ஆகும்.
1192 நீண்ட சூழ்சடை மேலொர் நிறைமதி
காண்டு சேவடி மேலொர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே. 5.012.9
நீண்டு சூழ்ந்த சடையின்மேல் ஓர் நிலாமதியும், சேவடியின்மேல் கூப்பிடுதூரம் ஒலிக்கும் ஓர் கழலும் கொண்டு, வேண்டுவாராகிய யாம் உள்ள வீதியுட் புகாது வீழிமிழலைக்கே மீண்டு போவர்; இதுவோ அவர்தம் அருள்!
1193 பாலை யாழொடு செவ்வழிப் பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழ லந்தண ராகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே. 5.012.10
மாலைக்காலத்து வானவர் வந்து பாலைப்பண்ணும் செவ்வழிப் பண்ணும் கலந்த பாடல்களைப்பாடி வழிபடும் இடம் அந்த மாலைக்காலத்தே அந்தணர் நிறைந்த நெருப்பை வளர்த்து ஆகுதி செய்யும் தொழிலராய் வழிபடும் திருவீழிமிழலையே ஆம். மாலைக்காலத்தே சுரர்பாடப்பூசுரர் வேட்டு வழிபடும் இடம் என்பது கருத்து.
1194 மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக்
கழல்கொள் காலின் திருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே. 5.012.11
இளமையான ஆனேறுடைய உமைமணாளனது திருக்கயிலாயமலையைச் சுழல ஆர்த்து எடுத்த இராவணனது முடியும் தோளும் இறும்படியாக அவன் தன் கழலணிந்த திருவடியில் உள்ள ஒரு திருவிரலால் ஊன்றுதலும், அவ்வரக்கன் திருவீழிமிழலையானடி வாழ்க என்று வாய்விட்டரற்றினன். அரற்றவே உமைமணாளன் அவனை மேலும் ஒறுக்காமல் விடுவித்தனன்.
திருச்சிற்றம்பலம்
5.012.திருவீழிமிழலை திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீழியழகர். தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
1184 கரைந்து கைதொழு வாரையுங் காதலன் வரைந்து வைதெழு வாரையும் வாடலன் நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும் விரைந்து போவது வீழி மிழலைக்கே. 5.012.1
மனங்கரைந்து கைதொழுவாரையும் காதலித்து அருள்வன்; தன்னை விலக்கி இகழாநின்று எழும் புறச்சமயத்தாரையும் வாடச்செய்யான். இத்தகைய அவன் வரிசையாகிய பூதகணங்களோடு நித்தலும் விரைந்து போவது வீழிமிழலைத் தலத்திற்கே. (வேண்டுதல் வேண்டாமையிலானாகிய முதல்வன், அந்தணர் வழிபடுதலால் அவர்க்கு அருள்புரிய விரைந்து தோன்றுவன் என்றபடி.)
1185 ஏற்று வெல்கொடி யீசன்ற னாதிரை நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார் நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார் வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே. 5.012.2
பிற கொடிகளை வென்று மேம்பட்ட ஆனேற்றுக் கொடியையுடைய ஈசன் தனக்குரிய ஆதிரை நாளில், தான் வேறு வேறு கோலங் கொண்டு காட்சியளித்தற்கு இடமாகிய திருவீழிமிழலையில் தாம் சந்தனம் எனக்கொண்டு பூசிவந்த வெள்ளை நீற்றைக் கொள்ளாது மணமுள்ள பொருள்களைச் சூடிக்கொள்வர்; மிக நல்லமதியைச் சூடு வோராகவும் உளர். சந்தன வெள்ளை நீற்றை விரவல் உடையராய் (அணிந்து) நாற்றம் சூடுவர் (நறுமலர் அணிவர்) என்றுரைப்பினும் அமையும்.
1186 புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான் வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான் நினைய நின்றவ னீசனை யேயெனா வினையி லார்தொழும் வீழி மிழலையே. 5.012.3
சூலம் உடையவனும், விடை ஊர்தியனும், வினைகளை வென்றவனும் நாகத்தைப் பூண்டவனும், வெண்மழு வாள் உடையவனும், அடியவர்கள் ஈசனே என்று நினைய நின்றவனும், இருவினையற்ற மேலோர் தொழும் வீழிமிழலை இறைவனே.
1187 மாடத் தாடு மனத்துடன் வைத்தவர் கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர் பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர் வேடத் தார்தொழும் வீழி மிழலையே. 5.012.4
முதல்வனை மாடத்தும் (விமானத்தும்), ஆடும் மனத்தும் உடன் வைத்தவராகிய திருமாலும், வேத கோஷம் செய்யும் பிரமனும், குருக்ஷத்திரத்தார் பலரும் (பாண்டவர்) , வேதத்தின் மூல பாடம் பேணும் அந்தணர்களும், பழிப்பார் கூறும் பழிப்பு அல்லதாகிய திருவேடம் பூண்ட அடியார்களும், தொழும் (பதி) திருவீழிமிழலையே.
1188 எடுத்த வெல்கொடி யேறுடை யான்தமர் உடுப்பர் கோவண முண்பது பிச்சையே கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை விடுத்துப் போவது வீழி மிழலைக்கே. 5.012.5
உயர்த்துப் பிடித்த இடபக்கொடியையுடைய சிவபிரானின் அடியவர்கள், கோவணமே உடுப்பது; பிச்சை உணவே உண்பது; கீழ்நின்ற வல்வினைகளையே கெடுப்பது; பந்த பாசங்களை விடுத்துப் போவது வீழிமிழலைக்கே.
1189 குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால் உழலை யாக்கையை யூணு முணர்விலீர் தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம் மிழலை யானடி சாரவிண் ணாள்வரே. 5.012.6
குழலையும், யாழையும் போன்ற மொழியாரை வேட்கையினால் இசையும், உழலும் உடலைத் தீநெறியின்கண் ஊன்றும் நல்லுணர்வற்றவர்களே! நெருப்பை நீர் மடியின்கண் கொண்டு கெடாதீர்; பன்முறையினும் சாற்றினோம், மிழலையான் திருவடி சார விண்ணாளும் திறம் பெறலாம்.
1190 தீரன் தீத்தர ளன்சடைத் தங்கிய நீர னாடிய நீற்றன்வண் டார்கொன்றைத் தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன் வீரன் வீழி மிழலை விகிர்தனே. 5.012.7
அறிஞனும், தீத்திரளைக் கையிற்கொண்டாடுபவனும், சடைத் தங்கிய கங்கையனும், ஆடிய திருநீற்றனும், வண்டார்ந்த கொன்றைத்தாரும், குளிர்ந்து மணக்கும் கண்ணியும் மாலையும் உடையவனும், புலன்களை வென்று விளங்கும் வீரனும் வீழிமிழலையிலுள்ள விகிர்தனே.
1191 எரியி னாரிறை யாரிடு காட்டிடை நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர் பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை விரிய னார்தொழும் வீழி மிழலையே. 5.012.8
எரியைக்கையால் ஏந்தியவரும், யாங்கணும் தங்கி நிற்போரும், நரிகளைப் பரிகளாகக் கொண்டு இடுகாட்டிடை ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் (மகாதேவனும்) தங்கும் இடம் பிறப்போடு கூடிய இறப்பை அகல நினைப்பார் தொழும் தலமாகிய வீழிமிழலை ஆகும்.
1192 நீண்ட சூழ்சடை மேலொர் நிறைமதி காண்டு சேவடி மேலொர் கனைகழல் வேண்டு வாரவர் வீதி புகுந்திலர் மீண்டும் போவது வீழி மிழலைக்கே. 5.012.9
நீண்டு சூழ்ந்த சடையின்மேல் ஓர் நிலாமதியும், சேவடியின்மேல் கூப்பிடுதூரம் ஒலிக்கும் ஓர் கழலும் கொண்டு, வேண்டுவாராகிய யாம் உள்ள வீதியுட் புகாது வீழிமிழலைக்கே மீண்டு போவர்; இதுவோ அவர்தம் அருள்!
1193 பாலை யாழொடு செவ்வழிப் பண்கொள மாலை வானவர் வந்து வழிபடும் ஆலை யாரழ லந்தண ராகுதி வேலை யார்தொழும் வீழி மிழலையே. 5.012.10
மாலைக்காலத்து வானவர் வந்து பாலைப்பண்ணும் செவ்வழிப் பண்ணும் கலந்த பாடல்களைப்பாடி வழிபடும் இடம் அந்த மாலைக்காலத்தே அந்தணர் நிறைந்த நெருப்பை வளர்த்து ஆகுதி செய்யும் தொழிலராய் வழிபடும் திருவீழிமிழலையே ஆம். மாலைக்காலத்தே சுரர்பாடப்பூசுரர் வேட்டு வழிபடும் இடம் என்பது கருத்து.
1194 மழலை யேற்று மணாளன் திருமலை சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக் கழல்கொள் காலின் திருவிர லூன்றலும் மிழலை யானடி வாழ்கென விட்டதே. 5.012.11
இளமையான ஆனேறுடைய உமைமணாளனது திருக்கயிலாயமலையைச் சுழல ஆர்த்து எடுத்த இராவணனது முடியும் தோளும் இறும்படியாக அவன் தன் கழலணிந்த திருவடியில் உள்ள ஒரு திருவிரலால் ஊன்றுதலும், அவ்வரக்கன் திருவீழிமிழலையானடி வாழ்க என்று வாய்விட்டரற்றினன். அரற்றவே உமைமணாளன் அவனை மேலும் ஒறுக்காமல் விடுவித்தனன்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|