|
||||||||
ஐந்தாம் திருமுறை-13 |
||||||||
5.013.திருவீழிமிழலை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
1195 என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.1
என் உயர்ந்த பொருளே! தேவர் தொழுகின்ற கழலணிந்த நல்ல பொருளே! நலம் தீங்கு பகுத்து அறியும் அறிவு சிறிதும் இல்லாத இயல்பினேன் அடியேன்; எனது செம்பொன்னே! திருவீழிமிழலையுள் அன்பு வடிவாம் பெருமானே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1196 கண்ணி னாற்களி கூரக்கை யால்தொழு
தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.2
இன்பம் மிகும்படி கண்ணினாற்கண்டு, கையால் தொழுது, எண்ணுமாற்றியாது இளைக்கும் எளியேனை, தேவர்கள் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே, குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1197 ஞால மேவிசும் பேநலந் தீமையே
கால மேகருத் தேகருத் தாற்றொழும்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.3
உலகமே! விண்ணே! நன்மையே! தீமையே! காலமே! கருத்தே! கருத்தாற்றொழும் சீலமே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கோலமே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1198 முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.4
முத்தனே! முதல்வா! முகிழ்க்கும் முளையை ஒத்தவனே! ஒப்பற்றவனே! உருவத்திருமேனி உடைய சித்தனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் அத்தனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1199 கருவ னேகரு வாய்த்தௌ வார்க்கெலாம்
ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.5
மூலப்பொருளாக உள்ளவனே! கருவாயுள்ளாய் என்று தௌந்தவர்க்கெல்லாம் ஒப்பற்றவனே! உயிர்ப்பாகவும், உணர்வாகவும் நின்ற செல்வனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குருமூர்த்தியே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1200 காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேயம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.6
ஏழுலகங்களையும் கருணையால் காத்தவனே! அமரர்க்கு ஆப்தனே! அயன்றலையைக் கையில் சேர்த்தவனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கூத்தப்பெருமானே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1201 நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.7
வானவர் தமக்குரிய நீதிப்படி நித்தலும் நியமங்கள் செய்து ஓதியும் அவர்களால் உணரப்படாது நின்ற ஒப்பற்ற வேதியா! விகிர்தனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் ஆதியே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1202 பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய
அழக னேயணி வீழி மிழலையுள்
குழக னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.8
நின்னடியைப் பழகிச் சூடிய பாலனாகிய மார்க்கண்டேயனை வஞ்சனையால் பற்றமுற்பட்ட காலனைச் சாடிய அழகனே!அழகுமிக்க திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குழகனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1203 அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ்
சுண்ட வானவ னேயுணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.9
தேவர்கள் அசுரர்களுடன் கூடிக்கடைதலால் எழுந்த நஞ்சினை உண்ட தேவனே! விரிந்த வான் பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையிற் கோயில் கொண்டவனே! உணர்வு சிறிதும் இல்லேனாகிய அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1204 ஒருத்தன் ஓங்கலைத் தாங்க லுற்றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.10
ஓங்கிய திருக்கயிலையைத் தாங்கிப் பெயர்க்கலுற்ற ஒருத்தனாகிய இராவணனின் வலிகெட அவனை வருத்தியவனே! வஞ்சனை உடையோன் மனத்தின்கண் நிலை பெற்ற திருத்தியவனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் பொருள் வடிவாய் இருப்பவனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
திருச்சிற்றம்பலம்
5.013.திருவீழிமிழலை திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீழியழகர். தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
1195 என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல் நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன் செம்பொ னேதிரு வீழி மிழலையுள் அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.1
என் உயர்ந்த பொருளே! தேவர் தொழுகின்ற கழலணிந்த நல்ல பொருளே! நலம் தீங்கு பகுத்து அறியும் அறிவு சிறிதும் இல்லாத இயல்பினேன் அடியேன்; எனது செம்பொன்னே! திருவீழிமிழலையுள் அன்பு வடிவாம் பெருமானே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1196 கண்ணி னாற்களி கூரக்கை யால்தொழு தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள் அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.2
இன்பம் மிகும்படி கண்ணினாற்கண்டு, கையால் தொழுது, எண்ணுமாற்றியாது இளைக்கும் எளியேனை, தேவர்கள் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே, குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1197 ஞால மேவிசும் பேநலந் தீமையே கால மேகருத் தேகருத் தாற்றொழும் சீல மேதிரு வீழி மிழலையுள் கோல மேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.3
உலகமே! விண்ணே! நன்மையே! தீமையே! காலமே! கருத்தே! கருத்தாற்றொழும் சீலமே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கோலமே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1198 முத்த னேமுதல் வாமுகி ழும்முளை ஒத்த னேயொரு வாவுரு வாகிய சித்த னேதிரு வீழி மிழலையுள் அத்த னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.4
முத்தனே! முதல்வா! முகிழ்க்கும் முளையை ஒத்தவனே! ஒப்பற்றவனே! உருவத்திருமேனி உடைய சித்தனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் அத்தனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1199 கருவ னேகரு வாய்த்தௌ வார்க்கெலாம் ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற திருவ னேதிரு வீழி மிழலையுள் குருவ னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.5
மூலப்பொருளாக உள்ளவனே! கருவாயுள்ளாய் என்று தௌந்தவர்க்கெல்லாம் ஒப்பற்றவனே! உயிர்ப்பாகவும், உணர்வாகவும் நின்ற செல்வனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குருமூர்த்தியே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1200 காத்த னேபொழி லேழையுங் காதலால் ஆத்த னேயம ரர்க்கயன் றன்றலை சேர்த்த னேதிரு வீழி மிழலையுள் கூத்த னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.6
ஏழுலகங்களையும் கருணையால் காத்தவனே! அமரர்க்கு ஆப்தனே! அயன்றலையைக் கையில் சேர்த்தவனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் கூத்தப்பெருமானே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1201 நீதி வானவர் நித்தல் நியமஞ்செய் தோதி வானவ ரும்முண ராததோர் வேதி யாவிகிர் தாதிரு வீழியுள் ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.7
வானவர் தமக்குரிய நீதிப்படி நித்தலும் நியமங்கள் செய்து ஓதியும் அவர்களால் உணரப்படாது நின்ற ஒப்பற்ற வேதியா! விகிர்தனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் ஆதியே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1202 பழகி நின்னடி சூடிய பாலனைக் கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய அழக னேயணி வீழி மிழலையுள் குழக னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.8
நின்னடியைப் பழகிச் சூடிய பாலனாகிய மார்க்கண்டேயனை வஞ்சனையால் பற்றமுற்பட்ட காலனைச் சாடிய அழகனே!அழகுமிக்க திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் குழகனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1203 அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ் சுண்ட வானவ னேயுணர் வொன்றிலேன் விண்ட வான்பொழில் வீழி மிழலையுள் கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.9
தேவர்கள் அசுரர்களுடன் கூடிக்கடைதலால் எழுந்த நஞ்சினை உண்ட தேவனே! விரிந்த வான் பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையிற் கோயில் கொண்டவனே! உணர்வு சிறிதும் இல்லேனாகிய அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
1204 ஒருத்தன் ஓங்கலைத் தாங்க லுற்றானுரம் வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய திருத்த னேதிரு வீழி மிழலையுள் அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே. 5.013.10
ஓங்கிய திருக்கயிலையைத் தாங்கிப் பெயர்க்கலுற்ற ஒருத்தனாகிய இராவணனின் வலிகெட அவனை வருத்தியவனே! வஞ்சனை உடையோன் மனத்தின்கண் நிலை பெற்ற திருத்தியவனே! திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும் பொருள் வடிவாய் இருப்பவனே! அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|