LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-16

 

5.016.திருப்பேரெயில் 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
1222 மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே. 5.016.1
பேரெயில் தலத்து இறைவர், மறையை ஓதுவர்; மான்குட்டியை யேந்திய கையினர்; திருநீலகண்டர்; கபாலத்தைக் கொண்ட கையினர்; எத்துறையும் போகுவர்; தூய வெண்ணீற்றினர்; பிறையும் சூடும் இயல்பினராவர்.
1223 கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணங்கி லாநெறி கண்டுகொண் டாரையும்
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே. 5.016.2
பேரெயில் தலத்து இறைவர். கல்லாதவரையும், கற்று வல்லவரையும், வணங்காத நெறியைக் கட்டிப் பேசும் வீணரையும், தணக்கும் இயல்புடையவர்; எப்பொருளையும் தணிப்பவர் (ஒடுக்குவர்); பிணக்கும் இயல்பினரும் ஆவர்.
1224 சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே. 5.016.3
பேரெயில் தலத்து இறைவர், மழை சொரிவிப்பார்; திங்களைச் சூழ்கதிர் விரிவிப்பார்; ஞாயிற்றின் கண் பொருந்தியவிளங்கொளியை எரிவிப்பார்; எப் பொருளையும் தணிவிப்பார், அவற்றைப் பிரிவிக்கும் இயல்பினரும் ஆவர்.
1225 செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே. 5.016.4
பேரெயில் தலத்து இறைவர் மேருமலை வில்லால் முப்புரங்களை அழியச் செய்வார்; தீர்த்தங்களை மிகுவிப்பார்; பல பத்தர்களின் ஊழ்வினை அறுவிப்பார்; அதுவன்றியும் நல்வினை பெறும்படியும் செய்வார்.
1226 மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோ ரைந்தலை பாம்பரைச்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே. 5.016.5
பேரெயில் தலத்து இறைவர் அன்பர்களால் அன்றி மற்றையவரால் அறியப்படாத இயல்புடையவர்; மழுவாளை உடையார்; ஓர் ஐந்தலைப்பாம்பைப் பற்றி ஆட்டி அரையிற் சுற்றியவர்; தூநெறியால் மிகுகின்ற பெற்றியும் உடையவர்.
1227 திருக்கு வார்சூழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யால்தனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே. 5.016.6
பேரெயில் தலத்து இறைவர், வளைந்த நீண்ட குழலாளை உடைய செல்வராகிய தம்மடியை இருக்குவேதம் முதலிய மெய்ம்மொழிகளால் ஏத்துவார்களின் துயரைச் சுருக்குவார்; அவை தோன்றுகின்ற நெறி அறுமாறு அருளைப் பெருக்குவார்.
1228 முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனின் தானோர் தலைமகன்
என்னை யாளுமி றையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே. 5.016.7
பேரெயில் தலத்து இறைவர் எனின் அவர், முன்னே தோன்றியவர்; மயிலை ஊர்தியாக உடைய முருகவேளின் தாதையார், ஒப்பற்ற முதல்வர்; என்னையாளும் இறைவரும் எம்பிரானுமாவர்; புதியரிற் புதியரும் அவரே.
1229 உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கு மன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே. 5.016.8
பேரெயில் தலத்து இறைவர், உழைத்தும், துள்ளியும், தம் உள்ளத்துள்ளே உருவத்தை இழைத்தும் எந்தையே! பிரானே! என்று இரவும் பகலும் இடைவிடாது அழைக்கும் அன்பர்கள் இயற்றிய பிழைகளை நீக்கும் தன்மை உடையவராவர்.
1230 நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவநங் கன்திறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே. 5.016.9
கங்கை உலாவிய நிமிர்ந்த புன்சடையா என்று போற்றாத அழகு பொருந்திய மன்மதன் திறலைவாட்டிய பெரும்புகழ் உடையவர்; கச்சுப் பொருந்திய அழகிய மென்முலையாளொடும் பேரெயிலில் வீற்றிருந்தவர்.
1231 பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே. 5.016.10
பேரெயில் தலத்து இறைவர், படுதம் என்று கூறப்பெறும் கூத்தைத் தாளம் பொருந்த ஆடுபவர்; அம்பறாத்தூணி உடையவராய் (வேடராய்) வந்து அருச்சுனர்க்கு அருள் செய்தவர்; பிரமசாரியாய் வந்து (வாமனாவதார காலத்து) மண்ணளந்தவனாகிய திருமால் பிரமன் என்போரால் பேணப் பட்ட பெருமை உடையவர்.
1232 மதத்த வாளரக் கன்மணிப் புட்பகம்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே. 5.016.11
பேரெயில் தலத்து இறைவர் செருக்குடைய வாள் அரக்கன் இவர்ந்து வந்த புட்பக விமானத்தைத் திருமலை தடுக்கஉடனே பதைத்து அத்திருமலையின் கீழ்ப்புகுந்து அங்கு ஆர்த்து எடுத்தபோது, அவன் முடிபத்தும் சிதையும் படியாக ஊன்றியவர்.
திருச்சிற்றம்பலம்

 

5.016.திருப்பேரெயில் 

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

 

 

1222 மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்

கறைகொள் கண்ட முடைய கபாலியார்

துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்

பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே. 5.016.1

 

  பேரெயில் தலத்து இறைவர், மறையை ஓதுவர்; மான்குட்டியை யேந்திய கையினர்; திருநீலகண்டர்; கபாலத்தைக் கொண்ட கையினர்; எத்துறையும் போகுவர்; தூய வெண்ணீற்றினர்; பிறையும் சூடும் இயல்பினராவர்.

 

 

1223 கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்

வணங்கி லாநெறி கண்டுகொண் டாரையும்

தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும்

பிணக்கு வாரவர் பேரெயி லாளரே. 5.016.2

 

  பேரெயில் தலத்து இறைவர். கல்லாதவரையும், கற்று வல்லவரையும், வணங்காத நெறியைக் கட்டிப் பேசும் வீணரையும், தணக்கும் இயல்புடையவர்; எப்பொருளையும் தணிப்பவர் (ஒடுக்குவர்); பிணக்கும் இயல்பினரும் ஆவர்.

 

 

1224 சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை

விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி

எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும்

பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே. 5.016.3

 

  பேரெயில் தலத்து இறைவர், மழை சொரிவிப்பார்; திங்களைச் சூழ்கதிர் விரிவிப்பார்; ஞாயிற்றின் கண் பொருந்தியவிளங்கொளியை எரிவிப்பார்; எப் பொருளையும் தணிவிப்பார், அவற்றைப் பிரிவிக்கும் இயல்பினரும் ஆவர்.

 

 

1225 செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்

உறுவிப் பார்பல பத்தர்க ளூழ்வினை

அறுவிப் பாரது வன்றியும் நல்வினை

பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே. 5.016.4

 

  பேரெயில் தலத்து இறைவர் மேருமலை வில்லால் முப்புரங்களை அழியச் செய்வார்; தீர்த்தங்களை மிகுவிப்பார்; பல பத்தர்களின் ஊழ்வினை அறுவிப்பார்; அதுவன்றியும் நல்வினை பெறும்படியும் செய்வார்.

 

 

1226 மற்றை யாரறி யார்மழு வாளினார்

பற்றி யாட்டியோ ரைந்தலை பாம்பரைச்

சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு

பெற்றி யாரவர் பேரெயி லாளரே. 5.016.5

 

  பேரெயில் தலத்து இறைவர் அன்பர்களால் அன்றி மற்றையவரால் அறியப்படாத இயல்புடையவர்; மழுவாளை உடையார்; ஓர் ஐந்தலைப்பாம்பைப் பற்றி ஆட்டி அரையிற் சுற்றியவர்; தூநெறியால் மிகுகின்ற பெற்றியும் உடையவர்.

 

 

1227 திருக்கு வார்சூழற் செல்வன சேவடி

இருக்கு வாய்மொழி யால்தனை யேத்துவார்

சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்

பெருக்கு வாரவர் பேரெயி லாளரே. 5.016.6

 

  பேரெயில் தலத்து இறைவர், வளைந்த நீண்ட குழலாளை உடைய செல்வராகிய தம்மடியை இருக்குவேதம் முதலிய மெய்ம்மொழிகளால் ஏத்துவார்களின் துயரைச் சுருக்குவார்; அவை தோன்றுகின்ற நெறி அறுமாறு அருளைப் பெருக்குவார்.

 

 

1228 முன்னை யார்மயி லூர்தி முருகவேள்

தன்னை யாரெனின் தானோர் தலைமகன்

என்னை யாளுமி றையவ னெம்பிரான்

பின்னை யாரவர் பேரெயி லாளரே. 5.016.7

 

  பேரெயில் தலத்து இறைவர் எனின் அவர், முன்னே தோன்றியவர்; மயிலை ஊர்தியாக உடைய முருகவேளின் தாதையார், ஒப்பற்ற முதல்வர்; என்னையாளும் இறைவரும் எம்பிரானுமாவர்; புதியரிற் புதியரும் அவரே.

 

 

1229 உழைத்துந் துள்ளியு முள்ளத்து ளேயுரு

இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்

அழைக்கு மன்பின ராய அடியவர்

பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே. 5.016.8

 

  பேரெயில் தலத்து இறைவர், உழைத்தும், துள்ளியும், தம் உள்ளத்துள்ளே உருவத்தை இழைத்தும் எந்தையே! பிரானே! என்று இரவும் பகலும் இடைவிடாது அழைக்கும் அன்பர்கள் இயற்றிய பிழைகளை நீக்கும் தன்மை உடையவராவர்.

 

 

1230 நீரு லாநிமிர் புன்சடை யாவெனா

ஏரு லாவநங் கன்திறல் வாட்டிய

வாரு லாவன மென்முலை யாளொடும்

பேரு ளாரவர் பேரெயி லாளரே. 5.016.9

 

  கங்கை உலாவிய நிமிர்ந்த புன்சடையா என்று போற்றாத அழகு பொருந்திய மன்மதன் திறலைவாட்டிய பெரும்புகழ் உடையவர்; கச்சுப் பொருந்திய அழகிய மென்முலையாளொடும் பேரெயிலில் வீற்றிருந்தவர்.

 

 

1231 பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்

தூணி யார்விச யற்கருள் செய்தவர்

மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்

பேணி யாரவர் பேரெயி லாளரே. 5.016.10

 

  பேரெயில் தலத்து இறைவர், படுதம் என்று கூறப்பெறும் கூத்தைத் தாளம் பொருந்த ஆடுபவர்; அம்பறாத்தூணி உடையவராய் (வேடராய்) வந்து அருச்சுனர்க்கு அருள் செய்தவர்; பிரமசாரியாய் வந்து (வாமனாவதார காலத்து) மண்ணளந்தவனாகிய திருமால் பிரமன் என்போரால் பேணப் பட்ட பெருமை உடையவர்.

 

 

1232 மதத்த வாளரக் கன்மணிப் புட்பகம்

சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்

பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி

பிதக்க வூன்றிய பேரெயி லாளரே. 5.016.11

 

  பேரெயில் தலத்து இறைவர் செருக்குடைய வாள் அரக்கன் இவர்ந்து வந்த புட்பக விமானத்தைத் திருமலை தடுக்கஉடனே பதைத்து அத்திருமலையின் கீழ்ப்புகுந்து அங்கு ஆர்த்து எடுத்தபோது, அவன் முடிபத்தும் சிதையும் படியாக ஊன்றியவர்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.