LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-49

 

5.049.திருவெண்காடு 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர். 
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை. 
1558 பண்காட்டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறை சென்னிவைத் தான்திரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே. 5.049.1
அறியாமையை உடைய நெஞ்சமே! பண்ணிசை காட்டி வழிபடுகின்ற, நிலவுலகிற் பொருந்திய தன் அன்பர்களுக்குத் திருக்கடைக்கண் காட்டி அருளி, கண்ணிற்கருமணி போன்றுள்ளவனும், சென்னியின்கண் பெண், பிறை ஆகியவற்றை வைத்தவனும் ஆகிய பெருமானது திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.
1559 கொள்ளி வெந்தழல் லீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தௌளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே. 5.049.2
நெஞ்சே! கொள்ளியாகிய வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும், உமைபங்கரும், வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும், விடையேறிய தௌவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.
1560 ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே. 5.049.3
நெஞ்சே! தன்னால் நோக்கப்படும் அடியார்கள் நாவினில் அருள் தேன் பாயுமாறு நோக்கும் திருவெண்காட்டை அடைவாயாக! உலகீர்! உடல் நோக்கிய சிற்றன்பங்களைவிரும்பி உழலாது. வான்நோக்கும் வழி எதுவோ அதில் நிற்பீர்களாக.
1561 பருவெண் கோட்டுப் பைங்கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை யஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடம்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே. 5.049.4
நெஞ்சமே! பருத்த வெள்ளிய தந்தங்களையும், பசுங்கண்களையும், மதத்தையும் உடைய வேழத்தின் உருவத்தை உமையாள் அஞ்சக் காட்டி நின்றவனும், பெரிய சாம்பலால் வெள்ளிய இடுகாட்டில் தங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாம் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.
1562 பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள் 
கற்ற வன்கய வர்புர மோரம்பால்
செற்ற வன்திரு வெண்கா டடை நெஞ்சே. 5.049.5
நெஞ்சே! உயிர்களாற் பற்றத்தக்கவனும், கங்கை, பாம்பு, பிறையுடன் உற்றவனும் சடையினனும், உயர்ஞானங்கள் கற்றவனும், கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.
1563 கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேயடை நெஞ்சமே. 5.049.6
நெஞ்சமே! உமையாளை ஒருபாகமாய்க் கூடியவரும், விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும். உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக.
1564 தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே. 5.049.7
நெஞ்சே! கங்கை, பாம்பு, மதி ஆகியவற்றை ஒருங்கு தாங்கியவனும். முறுக்குண்ட புன்சடையுடையவனும். கீழவர் புரங்களை எரித்தவனும், நான்கு மறைகளையும், ஆறங்கங்களையும் விரித்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவெண் காட்டை அடைந்து வழிபடுவாயாக.
1565 பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே. 5.049.8
நெஞ்சே! பட்டமும், இண்டைமாலைகளும் கொண்டு அன்பர்கள் "உயர்ந்தவனே! ஆதியே!" என்று சிந்தைசெய்ய நடனமாடும் மூர்த்தியாகவும், ஞானச்சுடராய் நின்ற அட்டமூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக.
1566 ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற் கருள்செயும்.
கான வேடன்றன் வெண்கா டடை நெஞ்சே. 5.049.9
நெஞ்சே! பன்றி வேடம் கொண்ட திருமாலும், பிரமனும் தானவேடத்தை முன் தாழ்ந்து அறிய வலிமையில்லாத ஞானவேடனும், அருச்சுனனுக்கு அருள்செய்யும் காட்டு வேடனும் ஆகிய பெருமானின் திருவெண்காடு அடைந்து வழிபடுவாயாக.
1567 பாலை யாடுவர் பன்மறை யோதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவ ரங்கமே. 5.049.10
பாலைநிலத்தில் ஆடுபவரும், பல மறைகளை ஓதுபவரும், சேல்மீன்போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும், கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இடிழுதவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது.
1568 இராவ ணஞ்செய மாமதி பற்றவை
இராவ ணம்முடை யான்றனை யுள்குமின்
இராவ ணன்றனை யூன்றி யருள்செய்த
இராவ ணன்திரு வெண்கா டடைமினே. 5.049.11
அறிவைப்பற்றியிருக்கும் பற்று இல்லாத படி செய்தற்பொருட்டு அயிராவணத்தை உடைய பெருமானை நினைமின். இராவணனைக் கால்விரலால் ஊன்றி அருள்செய்த அகோர முகத்தினரின் திருவெண்காட்டை அடைவீராக.
திருச்சிற்றம்பலம்

 

5.049.திருவெண்காடு 

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர். 

தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை. 

 

 

1558 பண்காட்டிப்படி யாயதன் பத்தர்க்குக்

கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்

பெண்காட் டிப்பிறை சென்னிவைத் தான்திரு

வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே. 5.049.1

 

  அறியாமையை உடைய நெஞ்சமே! பண்ணிசை காட்டி வழிபடுகின்ற, நிலவுலகிற் பொருந்திய தன் அன்பர்களுக்குத் திருக்கடைக்கண் காட்டி அருளி, கண்ணிற்கருமணி போன்றுள்ளவனும், சென்னியின்கண் பெண், பிறை ஆகியவற்றை வைத்தவனும் ஆகிய பெருமானது திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.

 

 

1559 கொள்ளி வெந்தழல் லீசிநின் றாடுவார்

ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்

வெள்ளி யன்கரி யன்பசு வேறிய

தௌளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே. 5.049.2

 

  நெஞ்சே! கொள்ளியாகிய வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும், உமைபங்கரும், வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும், விடையேறிய தௌவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.

 

 

1560 ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே

வானோக் கும்வழி யாவது நின்மினோ

தானோக் குந்தன் னடியவர் நாவினில்

தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே. 5.049.3

 

  நெஞ்சே! தன்னால் நோக்கப்படும் அடியார்கள் நாவினில் அருள் தேன் பாயுமாறு நோக்கும் திருவெண்காட்டை அடைவாயாக! உலகீர்! உடல் நோக்கிய சிற்றன்பங்களைவிரும்பி உழலாது. வான்நோக்கும் வழி எதுவோ அதில் நிற்பீர்களாக.

 

 

1561 பருவெண் கோட்டுப் பைங்கண்மத வேழத்தின்

உருவங் காட்டிநின் றானுமை யஞ்சவே

பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடம்

திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே. 5.049.4

 

  நெஞ்சமே! பருத்த வெள்ளிய தந்தங்களையும், பசுங்கண்களையும், மதத்தையும் உடைய வேழத்தின் உருவத்தை உமையாள் அஞ்சக் காட்டி நின்றவனும், பெரிய சாம்பலால் வெள்ளிய இடுகாட்டில் தங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாம் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.

 

 

1562 பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்

உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள் 

கற்ற வன்கய வர்புர மோரம்பால்

செற்ற வன்திரு வெண்கா டடை நெஞ்சே. 5.049.5

 

  நெஞ்சே! உயிர்களாற் பற்றத்தக்கவனும், கங்கை, பாம்பு, பிறையுடன் உற்றவனும் சடையினனும், உயர்ஞானங்கள் கற்றவனும், கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.

 

 

1563 கூடி னானுமை யாளொரு பாகமாய்

வேட னாய்விச யற்கருள் செய்தவன்

சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்

காட னாரடி யேயடை நெஞ்சமே. 5.049.6

 

  நெஞ்சமே! உமையாளை ஒருபாகமாய்க் கூடியவரும், விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும். உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக.

 

 

1564 தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்

புரித்த புன்சடை யான்கய வர்புரம்

எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்

விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே. 5.049.7

 

  நெஞ்சே! கங்கை, பாம்பு, மதி ஆகியவற்றை ஒருங்கு தாங்கியவனும். முறுக்குண்ட புன்சடையுடையவனும். கீழவர் புரங்களை எரித்தவனும், நான்கு மறைகளையும், ஆறங்கங்களையும் விரித்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவெண் காட்டை அடைந்து வழிபடுவாயாக.

 

 

1565 பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்

சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே

நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற

அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே. 5.049.8

 

  நெஞ்சே! பட்டமும், இண்டைமாலைகளும் கொண்டு அன்பர்கள் "உயர்ந்தவனே! ஆதியே!" என்று சிந்தைசெய்ய நடனமாடும் மூர்த்தியாகவும், ஞானச்சுடராய் நின்ற அட்டமூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக.

 

 

1566 ஏன வேடத்தி னானும் பிரமனும்

தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா

ஞான வேடன் விசயற் கருள்செயும்.

கான வேடன்றன் வெண்கா டடை நெஞ்சே. 5.049.9

 

  நெஞ்சே! பன்றி வேடம் கொண்ட திருமாலும், பிரமனும் தானவேடத்தை முன் தாழ்ந்து அறிய வலிமையில்லாத ஞானவேடனும், அருச்சுனனுக்கு அருள்செய்யும் காட்டு வேடனும் ஆகிய பெருமானின் திருவெண்காடு அடைந்து வழிபடுவாயாக.

 

 

1567 பாலை யாடுவர் பன்மறை யோதுவர்

சேலை யாடிய கண்ணுமை பங்கனார்

வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு

மாலை யாவது மாண்டவ ரங்கமே. 5.049.10

 

  பாலைநிலத்தில் ஆடுபவரும், பல மறைகளை ஓதுபவரும், சேல்மீன்போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும், கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இடிழுதவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது.

 

 

1568 இராவ ணஞ்செய மாமதி பற்றவை

இராவ ணம்முடை யான்றனை யுள்குமின்

இராவ ணன்றனை யூன்றி யருள்செய்த

இராவ ணன்திரு வெண்கா டடைமினே. 5.049.11

 

  அறிவைப்பற்றியிருக்கும் பற்று இல்லாத படி செய்தற்பொருட்டு அயிராவணத்தை உடைய பெருமானை நினைமின். இராவணனைக் கால்விரலால் ஊன்றி அருள்செய்த அகோர முகத்தினரின் திருவெண்காட்டை அடைவீராக.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.