|
||||||||
ஐந்தாம் திருமுறை-61 |
||||||||
5.061.திருஅரிசிற்கரைப்புத்தூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர்.
தேவியார் - அழகம்மை.
1680 முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே. 5.061.1
மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் "திருவடி போற்றி" என்று கூறுவோரெல்லாம், பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு, பொருந்திய வன்மை உடையதாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள்.
1681 பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே. 5.061.2
வெண்பிறையாகிய தலைக் கண்ணியணிந்த சடையுடைய எம்பெருமானே என்று கூறி, தம்முடைய குற்றங்களை எண்ணி உணர்ந்த நல்லடியார்கள் கண்ட வணக்கத்துக்குரியவரே! மிகுதியாகக் கருத்தில் எண்ணி உருகாத மனத்தை உடையவர்களைப் புறக்கணித்திடுகின்ற புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே! (எம்மையாண்டருள்க).
1682 அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும்பர விப்பணி வார்க்கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. 5.061.3
அரிசிலாற்றுக்கரையின்மேல் உள்ள அழகு நிறைந்த மதிலை உடைய நம் திருப்புத்தூர்ப் புனிதரை, வணங்கவேண்டிய முறைமைப்படிப் பரவிப் பணிவார்க்கெல்லாம் குற்றமற்ற நன்னெறி தோன்றும்; காண்பீராக.
1683 வேத னைமிகு வீணையில் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை
நாத னைநினைந் தென்மனம் நையுமே. 5.061.4
வேதங்கள் ஓதுபவனை, வீணையில் மிகுகின்ற கீதங்கள் உடையவனை, மணம் வீசுகின்ற கொன்றையாகிய அழகிய போதினை அணிந்தவனை, அரிசிற் புனல் சூழ்ந்த புத்தூரில் உள்ள நாதனை, என் மனம் நினைந்து நெகிழ்கின்றது.
1684 அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் விட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே. 5.061.5
கோங்கின் அரும்புபோன்ற முலையுடைய பெண்களோடு கூடித் துன்பங்கள் மிகுந்த வாழ்க்கையின்மேல் விருப்பம் சேர்கின்ற நிலையைவிட்டு நீங்கி, நல்ல பக்தி கொண்டு, திருப்புத்தூரில் உள்ள இறைவனைச் சிந்திக்கச்சிந்திக்கக் கரும்புச் சாற்றைவிடத் தித்திக்கும்; காண்பீராக.
1685 பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப்
பூம்புன லும்பொ திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்தடி போற்றிட நாள்தொறும்
சாம்ப லென்பு தனக்கணி யாகுமே. 5.061.6
பாம்பும், பிறையும், பொலிவுள்ள கங்கைநதியும் படர்ந்த செஞ்சடையின்கண் பொதிந்த புத்தூரில் உள்ள புனிதர், நாள்தொறும் நாம் பணிந்து, தன் திருவடியைப் போற்றிட, தான் சாம்பலையும், எலும்பையும் தமக்கு அணியாக்கொள்வர்.
1686 கனல்அங் கைதனி லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே. 5.061.7
புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் தம் அழகிய கையினில் தீயையேந்தி, வெவ்விய காட்டிடை நெருப்புப் பொருந்திய இடத்திடை எய்தி நின்று ஆடும் இயல்பினர்; பாடும் இயல்பினர்; பின்னுதற்குரிய அழகிய செஞ்சடைமேல் பிறையும் கங்கையும் சூடும் இயல்பினர்.
1687 காற்றி னுங்கடி தாகி நடப்பதோர
ஏற்றி னும்மிசைந் தேறுவ ரென்பொடு
நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப்
போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே. 5.061.8
புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர். காற்றைவிட விரைந்து நடப்பதாகிய ஒப்பற்ற இடபத்தினும் மனம் ஒத்து ஏறுவர்; எலும்பும் திருநீறும் அணிவர்; 'தம்மையே நினைவாகிப் போற்றி என்று வழிபடுவார்க்கு அன்பர் ஆவர்.
1688 முன்னும் முப்புரஞ் செற்றன ராயினும்
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம்
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே. 5.061.9
புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர், முன்னும் மூன்று புரங்களைச் சினந்தவராயினும், வருந்தித் தம்மையடைந்தவர்க்கெல்லாம் அன்னம் போல்வர்; விரிந்த சடை ஒளி விளங்கும் மின்னலென உடையவர்; திருமேனி செம்பொன்னென உடையவர் ஆவர்.
1689 செருத்த னால்தன தேர்செல வுய்த்திடும்
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே. 5.061.10
பொழில்கள் நிறைந்த புத்தூர்த் தலத்திறைவர், பொருதற்குத் தன்னுடைய தேர் செல்லுமாறு செலுத்துகின்ற கருத்தொடு கூடியவனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கலுற்ற போது, அவன் உடலும் பருத்த தோள்களும் சிதைந்து கெடும் படியாகத் தம் திருப்பாதத்து ஒரு திருவிரலைப் பொருத்தியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
5.061.திருஅரிசிற்கரைப்புத்தூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர். தேவியார் - அழகம்மை.
1680 முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப் புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம் பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே. 5.061.1
மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் "திருவடி போற்றி" என்று கூறுவோரெல்லாம், பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு, பொருந்திய வன்மை உடையதாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள்.
1681 பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய் உறக்க ணித்துரு காமனத் தார்களைப் புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே. 5.061.2
வெண்பிறையாகிய தலைக் கண்ணியணிந்த சடையுடைய எம்பெருமானே என்று கூறி, தம்முடைய குற்றங்களை எண்ணி உணர்ந்த நல்லடியார்கள் கண்ட வணக்கத்துக்குரியவரே! மிகுதியாகக் கருத்தில் எண்ணி உருகாத மனத்தை உடையவர்களைப் புறக்கணித்திடுகின்ற புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே! (எம்மையாண்டருள்க).
1682 அரிசி லின்கரை மேலணி யார்தரு புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் பரிசொடும்பர விப்பணி வார்க்கெலாம் துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. 5.061.3
அரிசிலாற்றுக்கரையின்மேல் உள்ள அழகு நிறைந்த மதிலை உடைய நம் திருப்புத்தூர்ப் புனிதரை, வணங்கவேண்டிய முறைமைப்படிப் பரவிப் பணிவார்க்கெல்லாம் குற்றமற்ற நன்னெறி தோன்றும்; காண்பீராக.
1683 வேத னைமிகு வீணையில் மேவிய கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம் போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை நாத னைநினைந் தென்மனம் நையுமே. 5.061.4
வேதங்கள் ஓதுபவனை, வீணையில் மிகுகின்ற கீதங்கள் உடையவனை, மணம் வீசுகின்ற கொன்றையாகிய அழகிய போதினை அணிந்தவனை, அரிசிற் புனல் சூழ்ந்த புத்தூரில் உள்ள நாதனை, என் மனம் நினைந்து நெகிழ்கின்றது.
1684 அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல் விருப்புச் சேர்நிலை விட்டுநல் விட்டமாய்த் திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக் கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே. 5.061.5
கோங்கின் அரும்புபோன்ற முலையுடைய பெண்களோடு கூடித் துன்பங்கள் மிகுந்த வாழ்க்கையின்மேல் விருப்பம் சேர்கின்ற நிலையைவிட்டு நீங்கி, நல்ல பக்தி கொண்டு, திருப்புத்தூரில் உள்ள இறைவனைச் சிந்திக்கச்சிந்திக்கக் கரும்புச் சாற்றைவிடத் தித்திக்கும்; காண்பீராக.
1685 பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப் பூம்புன லும்பொ திந்தபுத் தூருளான் நாம்ப ணிந்தடி போற்றிட நாள்தொறும் சாம்ப லென்பு தனக்கணி யாகுமே. 5.061.6
பாம்பும், பிறையும், பொலிவுள்ள கங்கைநதியும் படர்ந்த செஞ்சடையின்கண் பொதிந்த புத்தூரில் உள்ள புனிதர், நாள்தொறும் நாம் பணிந்து, தன் திருவடியைப் போற்றிட, தான் சாம்பலையும், எலும்பையும் தமக்கு அணியாக்கொள்வர்.
1686 கனல்அங் கைதனி லேந்திவெங் காட்டிடை அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர் பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே. 5.061.7
புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் தம் அழகிய கையினில் தீயையேந்தி, வெவ்விய காட்டிடை நெருப்புப் பொருந்திய இடத்திடை எய்தி நின்று ஆடும் இயல்பினர்; பாடும் இயல்பினர்; பின்னுதற்குரிய அழகிய செஞ்சடைமேல் பிறையும் கங்கையும் சூடும் இயல்பினர்.
1687 காற்றி னுங்கடி தாகி நடப்பதோர ஏற்றி னும்மிசைந் தேறுவ ரென்பொடு நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப் போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே. 5.061.8
புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர். காற்றைவிட விரைந்து நடப்பதாகிய ஒப்பற்ற இடபத்தினும் மனம் ஒத்து ஏறுவர்; எலும்பும் திருநீறும் அணிவர்; 'தம்மையே நினைவாகிப் போற்றி என்று வழிபடுவார்க்கு அன்பர் ஆவர்.
1688 முன்னும் முப்புரஞ் செற்றன ராயினும் அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம் மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம் பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே. 5.061.9
புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர், முன்னும் மூன்று புரங்களைச் சினந்தவராயினும், வருந்தித் தம்மையடைந்தவர்க்கெல்லாம் அன்னம் போல்வர்; விரிந்த சடை ஒளி விளங்கும் மின்னலென உடையவர்; திருமேனி செம்பொன்னென உடையவர் ஆவர்.
1689 செருத்த னால்தன தேர்செல வுய்த்திடும் கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல் பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல் பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே. 5.061.10
பொழில்கள் நிறைந்த புத்தூர்த் தலத்திறைவர், பொருதற்குத் தன்னுடைய தேர் செல்லுமாறு செலுத்துகின்ற கருத்தொடு கூடியவனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கலுற்ற போது, அவன் உடலும் பருத்த தோள்களும் சிதைந்து கெடும் படியாகத் தம் திருப்பாதத்து ஒரு திருவிரலைப் பொருத்தியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|