LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-6

 

5.006.திருவாரூர் 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
1122 எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்தொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்ச லென்னுமா ரூரனே. 5.006.1
மூன்று பொழுதினும் பிரமன் தொழ நின்றவனும், புகழ்ந்து போற்றத்தக்க செம்பொன்னின் வண்ணமேனி உடையவனும், உயிர் உடம்பைவிட்டு நீங்கும் அப்போதைக்கு அஞ்சல் என்று அபயங் கொடுப்பவனுமாகிய சிவபெருமானை எப்போதும் சிறுபொழுதும் நீர் மறவாது இருக்க. (சே - போதும் எனப்பிரித்து விடையின்மீது இவர்ந்து வரும் எனினும் அமையும்)
1123 சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்
அடைகி லாஅர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போலிடு காடரா ரூரரே. 5.006.2
மருங்கில்மட்டுமின்றிச் சடையின்மேலும் ஒரு தையலை வைத்தவரும், அரவை அரையிற் கட்டியவரும், இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர்.
1124 விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர்க் கருளுமா ரூரரே. 5.006.3
வெண்தலையே இரக்கும் கலனாகக் கொண்டு வீடுகள்தோறும் பலிதேரும் இளமையுடையவரும், துண்டாகிய வெள்ளிய பிறை முடிவைத்த இறையவரும், தேவர்களுக்கு அருளும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
1125 விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
அடைவர் போலரங் காகவா ரூரரே. 5.006.4
திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர்; வெண்தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார்; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர்.
1126 துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையொர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையில் திசைமுழு
தளக்குஞ் சிந்தையர் போலுமா ரூரரே. 5.006.5
திருவாரூர்ப் பெருமான், துளையுள்ள துதிக்கை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்தவர்; வளையணிந்த கையாளாகிய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்தெய்தியவர்; அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்; உலகமே உருவமா (விச்சுவரூபியா)க நின்றாடுவார் என்பது கருத்து.
1127 பண்ணி னின்மொழி யாளையொர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர் போலுமா ரூரரே. 5.006.6
பண்ணையொத்த இனிய மொழியாளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விசும்பில் விளங்கும் பிறையினைச் சூடி, திருநீற்றுப் பொடியினைத் திருமேனியிற் பூசிச் சுடலையினை அண்மித் திருவாரூர்ப் பெருமான் ஆடுவர்.
1128 மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு வாங்கங் கனன்மழு மான்தனோ
டட்ட மாம்புய மாகுமா ரூரரே. 5.006.7
தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய (திருமாலாகிய) விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார், கட்டுவாங்கம், சுடர்ந்தெரியும் கனல், மழு, மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர்.
1129 தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி யெல்லியு ளாடு மிறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதுமா ரூரரே. 5.006.8
பிறைத் திங்கள் விளங்கும் சடையினரும், கனலைக் கரத்தேந்தி நள்ளிருளில் நட்டம் ஆடும் இறைவரும், காமனைச் சினந்து நோக்கிய கண்ணினரும், ஆராய்ந்த நான்மறைகளால் ஓதப்பெறும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
1130 உண்டு நஞ்சுகண்டத்து ளடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்டவாண ரடையுமா ரூரரே. 5.006.9
நஞ்சினை உண்டு கண்டத்துள் அடக்கியவரும், இண்டை மாலையைத் தம் செஞ்சடையுள் வைத்த இயல்பினரும், கோவணத்தை ஆடையாகக் கொண்டவரும், மிகுந்த எரியைக் கரத்தில் உடையவரும், தேவர்கள் அடைந்து வழிபடும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
1131 மாலு நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆல முண்டழ காயவா ரூரரே. 5.006.10
திருமாலும் நான்முகனும் அறிய இயலாதவரும், காலனைக் கடந்திட்டுச் சூலமும், மானும், மழுவும் ஏந்திய கையினரும், ஆலம் உண்டதனால் அழகுபெற்று விளங்கிய கண்டத்தையுடைய வரும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
திருச்சிற்றம்பலம்

 

5.006.திருவாரூர் 

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 

தேவியார் - கரும்பனையாளம்மை. 

 

 

1122 எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்

முப்போ தும்பிர மன்தொழ நின்றவன்

செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்

அப்போ தைக்கஞ்ச லென்னுமா ரூரனே. 5.006.1

 

  மூன்று பொழுதினும் பிரமன் தொழ நின்றவனும், புகழ்ந்து போற்றத்தக்க செம்பொன்னின் வண்ணமேனி உடையவனும், உயிர் உடம்பைவிட்டு நீங்கும் அப்போதைக்கு அஞ்சல் என்று அபயங் கொடுப்பவனுமாகிய சிவபெருமானை எப்போதும் சிறுபொழுதும் நீர் மறவாது இருக்க. (சே - போதும் எனப்பிரித்து விடையின்மீது இவர்ந்து வரும் எனினும் அமையும்)

 

 

1123 சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்

அடைகி லாஅர வைஅரை யார்த்தவர்

படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா

அடைவர் போலிடு காடரா ரூரரே. 5.006.2

 

  மருங்கில்மட்டுமின்றிச் சடையின்மேலும் ஒரு தையலை வைத்தவரும், அரவை அரையிற் கட்டியவரும், இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர்.

 

 

1124 விண்ட வெண்டலை யேகல னாகவே

கொண்ட கம்பலி தேருங் குழகனார்

துண்ட வெண்பிறை வைத்த இறையவர்

அண்ட வாணர்க் கருளுமா ரூரரே. 5.006.3

 

  வெண்தலையே இரக்கும் கலனாகக் கொண்டு வீடுகள்தோறும் பலிதேரும் இளமையுடையவரும், துண்டாகிய வெள்ளிய பிறை முடிவைத்த இறையவரும், தேவர்களுக்கு அருளும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.

 

 

1125 விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி

கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்

உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை

அடைவர் போலரங் காகவா ரூரரே. 5.006.4

 

  திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர்; வெண்தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார்; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர்.

 

 

1126 துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்

வளைக்கை யாளையொர் பாக மகிழ்வெய்தித்

திளைக்குந் திங்கட் சடையில் திசைமுழு

தளக்குஞ் சிந்தையர் போலுமா ரூரரே. 5.006.5

 

  திருவாரூர்ப் பெருமான், துளையுள்ள துதிக்கை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்தவர்; வளையணிந்த கையாளாகிய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்தெய்தியவர்; அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்; உலகமே உருவமா (விச்சுவரூபியா)க நின்றாடுவார் என்பது கருத்து.

 

 

1127 பண்ணி னின்மொழி யாளையொர் பாகமா

விண்ணி னார்விளங் கும்மதி சூடியே

சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின்

அண்ணி யாடுவர் போலுமா ரூரரே. 5.006.6

 

  பண்ணையொத்த இனிய மொழியாளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விசும்பில் விளங்கும் பிறையினைச் சூடி, திருநீற்றுப் பொடியினைத் திருமேனியிற் பூசிச் சுடலையினை அண்மித் திருவாரூர்ப் பெருமான் ஆடுவர்.

 

 

1128 மட்டு வார்குழ லாளொடு மால்விடை

இட்ட மாவுகந் தேறு மிறைவனார்

கட்டு வாங்கங் கனன்மழு மான்தனோ

டட்ட மாம்புய மாகுமா ரூரரே. 5.006.7

 

  தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய (திருமாலாகிய) விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார், கட்டுவாங்கம், சுடர்ந்தெரியும் கனல், மழு, மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர்.

 

 

1129 தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்

ஏந்தி யெல்லியு ளாடு மிறைவனார்

காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்

ஆய்ந்த நான்மறை யோதுமா ரூரரே. 5.006.8

 

  பிறைத் திங்கள் விளங்கும் சடையினரும், கனலைக் கரத்தேந்தி நள்ளிருளில் நட்டம் ஆடும் இறைவரும், காமனைச் சினந்து நோக்கிய கண்ணினரும், ஆராய்ந்த நான்மறைகளால் ஓதப்பெறும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.

 

 

1130 உண்டு நஞ்சுகண்டத்து ளடக்கியங்

கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்

கொண்ட கோவண ஆடையன் கூரெரி

அண்டவாண ரடையுமா ரூரரே. 5.006.9

 

  நஞ்சினை உண்டு கண்டத்துள் அடக்கியவரும், இண்டை மாலையைத் தம் செஞ்சடையுள் வைத்த இயல்பினரும், கோவணத்தை ஆடையாகக் கொண்டவரும், மிகுந்த எரியைக் கரத்தில் உடையவரும், தேவர்கள் அடைந்து வழிபடும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.

 

 

1131 மாலு நான்முக னும்மறி கிற்கிலார்

கால னாய அவனைக் கடந்திட்டுச்

சூல மான்மழு வேந்திய கையினார்

ஆல முண்டழ காயவா ரூரரே. 5.006.10

 

  திருமாலும் நான்முகனும் அறிய இயலாதவரும், காலனைக் கடந்திட்டுச் சூலமும், மானும், மழுவும் ஏந்திய கையினரும், ஆலம் உண்டதனால் அழகுபெற்று விளங்கிய கண்டத்தையுடைய வரும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.