|
||||||||
ஐந்தாம் திருமுறை-73 |
||||||||
5.073.திருமங்கலக்குடி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புராணவரதேசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
1800 தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே. 5.073.1
மணம் உடைய மலரைச்சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியோடு மங்கலக்குடியில் மேவிய மணவாளன், தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் பின் நிறைந்த அருள் புரிந்தவன்.
1801 காவி ரியின் வடகரைக் காண்தகு
மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத்
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே. 5.073.2
காவிரியின் வடகரையில் காணத்தக்க மாமரங்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில், திருமாலாகிய தேவும், பிரமனும் தேடி அறியவியலாத தூய எரிவிடும் சுடரை உடைய சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் இறைவன்.
1802 மங்க லக்குடி யீசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே. 5.073.3
மங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு, சக்கரதாரியாகிய திருமாலும், பிரமனும், அகத்தியனும் அருச்சித்தார்கள்.
1803 மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி
நஞ்ச மாரமு தாக நயந்துகொண்
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே. 5.073.4
நீண்ட கடல் சூழ்ந்த மங்கலக்குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய (பெருவீரனாகிய ) பெருமான், ஆலகாலவிடத்தைச் செறிந்த அமுதமாக விரும்பி உட்கொண்டு, பஞ்சகவ்வியம் ஆடலை விரும்பி அடியேனுடைய நெஞ்சத்தை ஆலயமாகக்கொண்டு நிலை பெற்றான்.
1804 செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே. 5.073.5
செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியில், அருட்செல்வம் நிறைந்த சிவ ஒழுக்கம் உடையவராய்ச் செல்வம் மல்கும் செழித்த மறையோர் தொழத் திருவருட்செல்வனாகிய பெருமான் உமாதேவியோடும் திகழ்வது திருக்கோயிலிலாகும்.
1805 மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரு முரைக்கவல் லார்களும்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே. 5.073.6
நிலைபெற்ற புகழை உடைய மங்கலக்குடியில் நிலைபெற்ற பின்னுதல் உடைய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை எண்ணுவாரும், சொல்லும் வல்லமை உடையாரும், நன்னெறித் தொடர்பு எய்தத் துன்னுவார் ஆவர்.
1806 மாத ரார்மரு வும்மங் கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 5.073.7
பெண்கள் பொருந்துகின்ற மங்கலக்குடியின் ஆதிநாயகன், தேவர்கள் தலைவன்; வேதநாயகன்; வேதியர்நாயகன்; பூதநாயகன்; புண்ணியமூர்த்தி ஆவன்.
1807 வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே. 5.073.8
வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான், மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன்.
1808 கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேச மேது மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங் கலக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே. 5.073.9
மங்கலக்குடி இறைவன், தம் சிறுமை நோக்கிக் கூசாதவர்களும், குண்டர்களும், நற்குணமில்லாதவர்களும், அன்புசிறிதும் இல்லாதவர்களும், கீழானவர்களும், குற்றம் உடையவர்களுமாகிய சமணரோடு என்னை வேறுபடுக்க, உய்ந்தேன்.
1809 மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே. 5.073.10
மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும், தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான்.
திருச்சிற்றம்பலம்
5.073.திருமங்கலக்குடி திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - புராணவரதேசுவரர். தேவியார் - மங்களநாயகியம்மை.
1800 தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி அங்க லக்கழித் தாரருள் செய்தவன் கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு மங்க லக்குடி மேய மணாளனே. 5.073.1
மணம் உடைய மலரைச்சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியோடு மங்கலக்குடியில் மேவிய மணவாளன், தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் பின் நிறைந்த அருள் புரிந்தவன்.
1801 காவி ரியின் வடகரைக் காண்தகு மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித் தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத் தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே. 5.073.2
காவிரியின் வடகரையில் காணத்தக்க மாமரங்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில், திருமாலாகிய தேவும், பிரமனும் தேடி அறியவியலாத தூய எரிவிடும் சுடரை உடைய சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் இறைவன்.
1802 மங்க லக்குடி யீசனை மாகாளி வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர் சங்கு சக்கர தாரி சதுர்முகன் அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே. 5.073.3
மங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு, சக்கரதாரியாகிய திருமாலும், பிரமனும், அகத்தியனும் அருச்சித்தார்கள்.
1803 மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி நஞ்ச மாரமு தாக நயந்துகொண் டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே. 5.073.4
நீண்ட கடல் சூழ்ந்த மங்கலக்குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய (பெருவீரனாகிய ) பெருமான், ஆலகாலவிடத்தைச் செறிந்த அமுதமாக விரும்பி உட்கொண்டு, பஞ்சகவ்வியம் ஆடலை விரும்பி அடியேனுடைய நெஞ்சத்தை ஆலயமாகக்கொண்டு நிலை பெற்றான்.
1804 செல்வம் மல்கு திருமங் கலக்குடி செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச் செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச் செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே. 5.073.5
செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியில், அருட்செல்வம் நிறைந்த சிவ ஒழுக்கம் உடையவராய்ச் செல்வம் மல்கும் செழித்த மறையோர் தொழத் திருவருட்செல்வனாகிய பெருமான் உமாதேவியோடும் திகழ்வது திருக்கோயிலிலாகும்.
1805 மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர் உன்னு வாரு முரைக்கவல் லார்களும் துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே. 5.073.6
நிலைபெற்ற புகழை உடைய மங்கலக்குடியில் நிலைபெற்ற பின்னுதல் உடைய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை எண்ணுவாரும், சொல்லும் வல்லமை உடையாரும், நன்னெறித் தொடர்பு எய்தத் துன்னுவார் ஆவர்.
1806 மாத ரார்மரு வும்மங் கலக்குடி ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன் வேத நாயகன் வேதியர் நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 5.073.7
பெண்கள் பொருந்துகின்ற மங்கலக்குடியின் ஆதிநாயகன், தேவர்கள் தலைவன்; வேதநாயகன்; வேதியர்நாயகன்; பூதநாயகன்; புண்ணியமூர்த்தி ஆவன்.
1807 வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி விண்ட தாதையைத் தாளற வீசிய சண்ட நாயக னுக்கருள் செய்தவன் துண்ட மாமதி சூடிய சோதியே. 5.073.8
வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான், மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன்.
1808 கூசு வாரலர் குண்டர் குணமிலர் நேச மேது மிலாதவர் நீசர்கள் மாசர் பால்மங் கலக்குடி மேவிய ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே. 5.073.9
மங்கலக்குடி இறைவன், தம் சிறுமை நோக்கிக் கூசாதவர்களும், குண்டர்களும், நற்குணமில்லாதவர்களும், அன்புசிறிதும் இல்லாதவர்களும், கீழானவர்களும், குற்றம் உடையவர்களுமாகிய சமணரோடு என்னை வேறுபடுக்க, உய்ந்தேன்.
1809 மங்க லக்குடி யான்கயி லைம்மலை அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன் தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந் தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே. 5.073.10
மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும், தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|