|
||||||||
ஐந்தாம் திருமுறை-80 |
||||||||
5.080.திருஅன்பில்ஆலந்துறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்திவாகீசர்.
தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
1865 வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை யன்பிலா லந்துறைக்
கோன்எஞ் செல்வனைக் கூறிட கிற்றியே. 5.080.1
நெஞ்சே! வானத்தைச் சேர்ந்த பிறை மதியைச் சூடிய மைந்தனாகிய சிவபெருமானை நினையும் வல்லமை உடையை இல்லை; நீ கெடுவாய், பஞ்சகவ்வியத் திருவபிஷேகம் கொள்வானாகிய திரு அன்பில் ஆலந்துறைக்கோனாம் எம் செல்வனைக் கூறிடும் வல்லமை பெறுவாயாக.
1866 கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொரு ளன்பிலா லந்துறை
நார ணற்கரி யானொரு நம்பியே. 5.080.2
அன்பிலாலந்துறையில் திருமாலுக்கும் அரியாராகிய ஒப்பற்ற நம்பி, உலககாரணரும், கருத்தில் உள்ளவரும்,பிரமகபாலம் கொண்ட கையினரும், யானை உரிபோர்த்த மணாளரும், வேதப்பொருள் ஆயவரும் ஆவர்.
1867 அன்பின் ஆனஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்
அன்பி லானையம் மானையள் ளூறிய
அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே. 5.080.3
அன்பினால் பஞ்சகவ்வியம் ஐந்துடன் திரு முழுக்குக் கொண்டவனும், எலும்புடைய யானையின் உரியை உரித்துக்களைந்தவனும் ஆகிய, அன்பில் ஆலந்துறையில் உள்ள அம்மானை, நெஞ்சில் அள்ளூறி அன்பினால் நினைந்தவர்களே அறிந்தவர்கள்.
1868 சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை
பங்க னாரடி பாவியேன் நானுய்ய
அங்க ணனெந்தை யன்பிலா லந்துறைச்
செங்க ணாரடிச் சேரவும் வல்லனே. 5.080.4
உள்ளதும் ஐயம்; சாவதேமெய்; ஆதலால் உமை பங்கரும், அழகிய கண்ணை உடையவரும், எந்தையும், அன்பிலாலந் துறையில் சிவந்த கண்ணை உடையவருமாகிய பெருமான் அடிகளைப் பாவியேன் நான் உய்யச் சேரவும் வல்லனே!.
1869 கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்க ரையின ரன்பிலா லந்துறை
நக்கு ருவரும் நம்மை யறிவரே. 5.080.5
கொக்கிறகை உடையவரும், குளிர் மதிப் பிறையினைச் சடையிற் கொண்டவரும், சினம்மிக்கு அரக்கர் முப்புரங்களை எரித்தல் செய்தவரும், அக்கினை அரைக்கசைத்தவருமாகிய அன்பிலாலந்துறையில் திகம்பர உருவினராம் இறைவர் நம்மை அறிவர்.
1870 வெள்ள முள்ள விரிசடை நந்தியைக்
கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ள லார்வய லன்பிலா லந்துறை
உள்ள வாறறி யார்சில ரூமரே. 5.080.6
கங்கையாகிய வெள்ளம் உள்ள விரிசடையோடு கூடிய நந்தியாகிய பெருமானைக் கள்ளமுள்ள மனத்தவர் காணும் திறமை இல்லாதவர்கள்; சேறு நிறைந்த வயலை உடைய அன்பிலாலந்துறையின்கண் உள்ளவாறு சில ஊமையர் அறியார்.
1871 பிறவி மாயப் பிணக்கி லழுந்தினும்
உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே
அறவ னெம்பிரா னன்பிலா லந்துறை
மறவா தேதொழு தேத்தி வணங்குமே. 5.080.7
பிறவியாகிய பொய்ப்பிணக்கில் அழுந்தினாலும் உறவெல்லாவற்றையும் சிந்தித்து எண்ணி மகிழாமல், அறவடிவாகிய எம்பெருமானது அன்பிலாலந்துறையை மறவாது தொழுது ஏத்தி வணங்குவீராக.
1872 நுணங்கு நூலயன் மாலு மிருவரும்
பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா
அணங்க னெம்பிரா னன்பிலா லந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே. 5.080.8
நுண்ணிய நூல் பல கற்ற பிரமனும் திருமாலுமாகிய இருவரும் மாறுபட்டு எங்கும் திரிந்து இளைத்தும் காணும் திறமையற்றனர்; அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன் அன்பிலாலந்துறையை நும் வினைகள் மாய்ந்து அறும் வண்ணம் வணங்குவீராக.
1873 பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக்
கையன் மாருரை கேளா தெழுமினோ
ஐய னெம்பிரா னன்பிலா லந்துறை
மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே. 5.080.9
எல்லாப் பொய்யும் உரைக்கும் சமணரும், சாக்கியருமாகிய சிறுமை உடையவர்கள் பேச்சைக் கேளாது எழுமின்; ஐயனும் எம்பெருமானும் அன்பிலாலந்துறையில் எழுந்தருளியுள்ள மெய்யனுமாகிய இறைவன் சேவடி ஏத்துவார் மெய்யர் ஆவர்.
1874 இலங்கை வேந்த னிருபது தோளிற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்க லெம்பிரா னன்பிலா லந்துறை
வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே. 5.080.10
இலங்கை அரசனாம் இராவணன் இருபது தோள்களும் இற்றுச் சுழலும்படியாகத் திருக்கயிலைமாமலை மேல் திருவிரலை ஊன்றியவன் ஆகிய கொன்றைமாலையணிந்த பெருமானுடைய அன்பிலாலந்துறையை வலங்கொண்டு வழிபடுவாரைத் தேவர்கள் வலம் கொண்டு வணங்கிப் போற்றுவர்.
திருச்சிற்றம்பலம்
5.080.திருஅன்பில்ஆலந்துறை திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சத்திவாகீசர். தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
1865 வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை ஆனஞ் சாடியை யன்பிலா லந்துறைக் கோன்எஞ் செல்வனைக் கூறிட கிற்றியே. 5.080.1
நெஞ்சே! வானத்தைச் சேர்ந்த பிறை மதியைச் சூடிய மைந்தனாகிய சிவபெருமானை நினையும் வல்லமை உடையை இல்லை; நீ கெடுவாய், பஞ்சகவ்வியத் திருவபிஷேகம் கொள்வானாகிய திரு அன்பில் ஆலந்துறைக்கோனாம் எம் செல்வனைக் கூறிடும் வல்லமை பெறுவாயாக.
1866 கார ணத்தர் கருத்தர் கபாலியார் வார ணத்துரி போர்த்த மணாளனார் ஆர ணப்பொரு ளன்பிலா லந்துறை நார ணற்கரி யானொரு நம்பியே. 5.080.2
அன்பிலாலந்துறையில் திருமாலுக்கும் அரியாராகிய ஒப்பற்ற நம்பி, உலககாரணரும், கருத்தில் உள்ளவரும்,பிரமகபாலம் கொண்ட கையினரும், யானை உரிபோர்த்த மணாளரும், வேதப்பொருள் ஆயவரும் ஆவர்.
1867 அன்பின் ஆனஞ்ச மைந்துட னாடிய என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன் அன்பி லானையம் மானையள் ளூறிய அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே. 5.080.3
அன்பினால் பஞ்சகவ்வியம் ஐந்துடன் திரு முழுக்குக் கொண்டவனும், எலும்புடைய யானையின் உரியை உரித்துக்களைந்தவனும் ஆகிய, அன்பில் ஆலந்துறையில் உள்ள அம்மானை, நெஞ்சில் அள்ளூறி அன்பினால் நினைந்தவர்களே அறிந்தவர்கள்.
1868 சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை பங்க னாரடி பாவியேன் நானுய்ய அங்க ணனெந்தை யன்பிலா லந்துறைச் செங்க ணாரடிச் சேரவும் வல்லனே. 5.080.4
உள்ளதும் ஐயம்; சாவதேமெய்; ஆதலால் உமை பங்கரும், அழகிய கண்ணை உடையவரும், எந்தையும், அன்பிலாலந் துறையில் சிவந்த கண்ணை உடையவருமாகிய பெருமான் அடிகளைப் பாவியேன் நான் உய்யச் சேரவும் வல்லனே!.
1869 கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர் மிக்க ரக்கர் புரமெரி செய்தவர் அக்க ரையின ரன்பிலா லந்துறை நக்கு ருவரும் நம்மை யறிவரே. 5.080.5
கொக்கிறகை உடையவரும், குளிர் மதிப் பிறையினைச் சடையிற் கொண்டவரும், சினம்மிக்கு அரக்கர் முப்புரங்களை எரித்தல் செய்தவரும், அக்கினை அரைக்கசைத்தவருமாகிய அன்பிலாலந்துறையில் திகம்பர உருவினராம் இறைவர் நம்மை அறிவர்.
1870 வெள்ள முள்ள விரிசடை நந்தியைக் கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார் அள்ள லார்வய லன்பிலா லந்துறை உள்ள வாறறி யார்சில ரூமரே. 5.080.6
கங்கையாகிய வெள்ளம் உள்ள விரிசடையோடு கூடிய நந்தியாகிய பெருமானைக் கள்ளமுள்ள மனத்தவர் காணும் திறமை இல்லாதவர்கள்; சேறு நிறைந்த வயலை உடைய அன்பிலாலந்துறையின்கண் உள்ளவாறு சில ஊமையர் அறியார்.
1871 பிறவி மாயப் பிணக்கி லழுந்தினும் உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே அறவ னெம்பிரா னன்பிலா லந்துறை மறவா தேதொழு தேத்தி வணங்குமே. 5.080.7
பிறவியாகிய பொய்ப்பிணக்கில் அழுந்தினாலும் உறவெல்லாவற்றையும் சிந்தித்து எண்ணி மகிழாமல், அறவடிவாகிய எம்பெருமானது அன்பிலாலந்துறையை மறவாது தொழுது ஏத்தி வணங்குவீராக.
1872 நுணங்கு நூலயன் மாலு மிருவரும் பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா அணங்க னெம்பிரா னன்பிலா லந்துறை வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே. 5.080.8
நுண்ணிய நூல் பல கற்ற பிரமனும் திருமாலுமாகிய இருவரும் மாறுபட்டு எங்கும் திரிந்து இளைத்தும் காணும் திறமையற்றனர்; அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன் அன்பிலாலந்துறையை நும் வினைகள் மாய்ந்து அறும் வண்ணம் வணங்குவீராக.
1873 பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக் கையன் மாருரை கேளா தெழுமினோ ஐய னெம்பிரா னன்பிலா லந்துறை மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே. 5.080.9
எல்லாப் பொய்யும் உரைக்கும் சமணரும், சாக்கியருமாகிய சிறுமை உடையவர்கள் பேச்சைக் கேளாது எழுமின்; ஐயனும் எம்பெருமானும் அன்பிலாலந்துறையில் எழுந்தருளியுள்ள மெய்யனுமாகிய இறைவன் சேவடி ஏத்துவார் மெய்யர் ஆவர்.
1874 இலங்கை வேந்த னிருபது தோளிற்று மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன் அலங்க லெம்பிரா னன்பிலா லந்துறை வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே. 5.080.10
இலங்கை அரசனாம் இராவணன் இருபது தோள்களும் இற்றுச் சுழலும்படியாகத் திருக்கயிலைமாமலை மேல் திருவிரலை ஊன்றியவன் ஆகிய கொன்றைமாலையணிந்த பெருமானுடைய அன்பிலாலந்துறையை வலங்கொண்டு வழிபடுவாரைத் தேவர்கள் வலம் கொண்டு வணங்கிப் போற்றுவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|