|
||||||||
ஐந்தாம் திருமுறை-96 |
||||||||
5.096.மனத்தொகை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
2016 பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின்னுள்ளத்திரள் வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே. 5.096.1
எந்தை பெருமானே! பொன்னும் நினையுமாறு அழகு திகழ்கின்ற புன்சடையின் புறத்தே ஒளியுள்ளதாகிய திரண்ட வெண்பிறை சூடியவனே! நின் உள்ளத்துச் சிறிது அருள் கொண்டு என்னுள்ளத்துள் உளதாகிய இருள் நீங்கிடத் திருவுளம் பற்றியருள்க.
2017 முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
டக்க ணம்மரை யாயரு ளேயலா
தெக்க ணும்மில னெந்தை பிரானிரே. 5.096.2
எந்தை பெருமானே! முக்கண்ணும் உடையாய்! முனிவர்கள் பலர் கூடி எண்ணித் தியானிக்கும் கழலை உடையாய்!புலித்தோலினோடு அழகிய நினது அருளேயல்லாது வேறு எவ்விடத்தும் பொருள் இல்லேன்.
2018 பணியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல கம்முழு தாளினும்
தனியாய் நீசரண் நீசல மேபெரி
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே. 5.096.3
எந்தை பெருமானே! தண்ணியாய்! விரும்புதறைகுரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய்! சரண் நீயே; எனைபால் வஞ்சனையே பெரிது; எனக்கு இனியாய் நீயே.
2019 மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்
குறையு மாயினை கோளர வோடொரு
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை யெந்தை பிரானிரே. 5.096.4
எந்தை பெருமானே! வேதங்களையும் பாடுவீர்; பெரிய முனிவர்களது மயக்கத்தினுக்கு உறையும் ஆயினீர்; கொள்ளும் பாம்பினோடு ஒரு பிறையும் சூடினை என்பதல்லால் வேறு சிறிதும் சொல் இல்லை.
2020 பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
ஆர்ம்மா யாடர வோடன லாடிய
கூத்தா நின்குரை யார்கழ லேயல
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே. 5.096.5
எந்தை பெருமானே! பூத்துச் செறிந்த கொன்றையினை உடையாய்; புலியின் தோலை ஆர்த்துக் கட்டினாய்; ஆடும் பாம்பினோடும் அனலோடும் ஆடும் கூத்தனே! நின் ஒலிக்கும் கழலே அல்லது எனது நா வேறு ஒன்றையும் ஏத்தாது.
2021 பைம்மா லும்மர வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும்
அம்மா லல்லது மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலே னெந்தை பிரானிரே. 5.096.6
எந்தை பெருமானே! படத்தொடு ஒலிக்கும் அரவுடையவனே! பரமனே! இடபத்தின்மேல் அஞ்சனம் தீட்டிய கண்ணுடைய உமாதேவியோடு ஏறும் மைந்தனே! என்றும் அம்மயக்கமல்லது மற்று அடி நாயினேனுக்கு வேறு எம் மயக்கமும் இல்லேன். 'நாயினேன்' என்றும் பாடம்.
2022 வெப்பத் தின்மன மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடு மொண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மில னெந்தை பிரானிரே. 5.096.7
எந்தை பெருமானே! வெப்பத்தின் மனமாசு விளக்கும் செப்பம் உடைமையினால் "சிவன்" என்பவர் தீவினைகளை ஒப்பத் தீர்க்கும் ஒள்ளிய கழலை உடையானாகிய உமக்கல்லது வேறுபற்று இல்லேன்.
2023 திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழு மொண்பொரு ளாயின நீதியென்
புகழு மாறு மலானுன பொன்னடி
இகழு மாறில னெந்தை பிரானிரே. 5.096.8
எந்தை பெருமானே! விளங்குகின்ற சுடர் சூழ்கின்றவனோடு நாள்தோறும் நிகழும் ஒள்ளிய பொருளாயின நீதிகளை என்னே புகழுமாறு! அல்லது உன் பொன்னடிகளை இகழுமாறு இல்லேன்.
2024 கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை
எப்பற் றியறி தற்கரி யாயருள்
அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
எப்பற் றும்மிலே னெந்தை பிரானிரே. 5.096.9
திருமாலால் அறிதற்கரியவனே! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை.
2025 எந்தை யெம்பிரா னென்றவர் மேல்மனம்
எந்தை யெம்பிரா னென்றிறைஞ் சித்தொழு
தெந்தை யெம்பிரா னென்றடி யேத்துவார்
எந்தை யெம்பிரா னென்றடி சேர்வரே. 5.096.10
எந்தை எம்பிரான் என்று மனம் வாக்குக் காயங்களால் வழிபடுவார் இறைவன் திருவடி சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
5.096.மனத்தொகை திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
2016 பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம் மின்னுள்ளத்திரள் வெண்பிறை யாயிறை நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல் என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே. 5.096.1
எந்தை பெருமானே! பொன்னும் நினையுமாறு அழகு திகழ்கின்ற புன்சடையின் புறத்தே ஒளியுள்ளதாகிய திரண்ட வெண்பிறை சூடியவனே! நின் உள்ளத்துச் சிறிது அருள் கொண்டு என்னுள்ளத்துள் உளதாகிய இருள் நீங்கிடத் திருவுளம் பற்றியருள்க.
2017 முக்க ணும்முடை யாய்முனி கள்பலர் தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ டக்க ணம்மரை யாயரு ளேயலா தெக்க ணும்மில னெந்தை பிரானிரே. 5.096.2
எந்தை பெருமானே! முக்கண்ணும் உடையாய்! முனிவர்கள் பலர் கூடி எண்ணித் தியானிக்கும் கழலை உடையாய்!புலித்தோலினோடு அழகிய நினது அருளேயல்லாது வேறு எவ்விடத்தும் பொருள் இல்லேன்.
2018 பணியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை முனியாய் நீயுல கம்முழு தாளினும் தனியாய் நீசரண் நீசல மேபெரி தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே. 5.096.3
எந்தை பெருமானே! தண்ணியாய்! விரும்புதறைகுரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய்! சரண் நீயே; எனைபால் வஞ்சனையே பெரிது; எனக்கு இனியாய் நீயே.
2019 மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக் குறையு மாயினை கோளர வோடொரு பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி திறையுஞ் சொல்லிலை யெந்தை பிரானிரே. 5.096.4
எந்தை பெருமானே! வேதங்களையும் பாடுவீர்; பெரிய முனிவர்களது மயக்கத்தினுக்கு உறையும் ஆயினீர்; கொள்ளும் பாம்பினோடு ஒரு பிறையும் சூடினை என்பதல்லால் வேறு சிறிதும் சொல் இல்லை.
2020 பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள் ஆர்ம்மா யாடர வோடன லாடிய கூத்தா நின்குரை யார்கழ லேயல தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே. 5.096.5
எந்தை பெருமானே! பூத்துச் செறிந்த கொன்றையினை உடையாய்; புலியின் தோலை ஆர்த்துக் கட்டினாய்; ஆடும் பாம்பினோடும் அனலோடும் ஆடும் கூத்தனே! நின் ஒலிக்கும் கழலே அல்லது எனது நா வேறு ஒன்றையும் ஏத்தாது.
2021 பைம்மா லும்மர வாபர மாபசு மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும் அம்மா லல்லது மற்றடி நாயினேற் கெம்மா லும்மிலே னெந்தை பிரானிரே. 5.096.6
எந்தை பெருமானே! படத்தொடு ஒலிக்கும் அரவுடையவனே! பரமனே! இடபத்தின்மேல் அஞ்சனம் தீட்டிய கண்ணுடைய உமாதேவியோடு ஏறும் மைந்தனே! என்றும் அம்மயக்கமல்லது மற்று அடி நாயினேனுக்கு வேறு எம் மயக்கமும் இல்லேன். 'நாயினேன்' என்றும் பாடம்.
2022 வெப்பத் தின்மன மாசு விளக்கிய செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை ஒப்பத் தீர்த்திடு மொண்கழ லாற்கல்ல தெப்பற் றும்மில னெந்தை பிரானிரே. 5.096.7
எந்தை பெருமானே! வெப்பத்தின் மனமாசு விளக்கும் செப்பம் உடைமையினால் "சிவன்" என்பவர் தீவினைகளை ஒப்பத் தீர்க்கும் ஒள்ளிய கழலை உடையானாகிய உமக்கல்லது வேறுபற்று இல்லேன்.
2023 திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும் நிகழு மொண்பொரு ளாயின நீதியென் புகழு மாறு மலானுன பொன்னடி இகழு மாறில னெந்தை பிரானிரே. 5.096.8
எந்தை பெருமானே! விளங்குகின்ற சுடர் சூழ்கின்றவனோடு நாள்தோறும் நிகழும் ஒள்ளிய பொருளாயின நீதிகளை என்னே புகழுமாறு! அல்லது உன் பொன்னடிகளை இகழுமாறு இல்லேன்.
2024 கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை எப்பற் றியறி தற்கரி யாயருள் அப்பற் றல்லது மற்றடி நாயினேன் எப்பற் றும்மிலே னெந்தை பிரானிரே. 5.096.9
திருமாலால் அறிதற்கரியவனே! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை.
2025 எந்தை யெம்பிரா னென்றவர் மேல்மனம் எந்தை யெம்பிரா னென்றிறைஞ் சித்தொழு தெந்தை யெம்பிரா னென்றடி யேத்துவார் எந்தை யெம்பிரா னென்றடி சேர்வரே. 5.096.10
எந்தை எம்பிரான் என்று மனம் வாக்குக் காயங்களால் வழிபடுவார் இறைவன் திருவடி சேர்வர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|