|
||||||||
ஞானக்குறள்-திருவருட்பால்-கலை ஞானம் |
||||||||
3சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது. 131
3அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு. 132
3அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு. 133
3ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம். 134
3தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து. 135
3கூடகமான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து. 136
3வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று. 137
3பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து. 138
3இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம். 139
சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு. 140
3சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்முத்திக்கு மூல மது. 131 |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|