LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

இன்னா நாற்பது

 

கடவுள் வாழ்த்து
முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா; 
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.
நூல்
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின். 1
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல். 4
சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
மறை இன்றிச் செய்யும் வினை. 5
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;
இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,
கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
மாற்றம் அறியான் உரை. 7
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,
நயம் இல் மனத்தவர் நட்பு. 8
கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா;
வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;
வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
பண் இல் புரவிப் பரிப்பு. 9
பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;
அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா,
பொருள் இல்லார் வண்மை புரிவு. 10
உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;
இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
கடன் உடையார் காணப் புகல். 11
தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா;
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,
முலை இல்லாள் பெண்மை விழைவு. 12
மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;
பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,
பிணி அன்னார் வாழும் மனை. 13
வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;
துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா;
புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,
உணர்வார் உணராக்கடை. 14
புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;
கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா;
இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,
பல்லாருள் நாணுப் படல். 15
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
எண் இலான் செய்யும் கணக்கு. 16
ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,
ஈன்றாளை ஓம்பா விடல். 17
உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;
மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;
சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,
மன வறியாளர் தொடர்பு. 18
குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;
நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல் வழி. 19
மாரி நாள் கூவும் குயலின் குரல் இன்னா;
வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;
மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னா
மூரி எருத்தால் உழவு. 20
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;
பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;
மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,
ஒத்து இலாப் பார்ப்பான் உரை. 21
யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,
கான் யாறு இடையிட்ட ஊர். 22
சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;
அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா,
நிறை இலான் கொண்ட தவம். 23
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு. 24
நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா
நட்ட கவற்றினால் சூது. 25
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;
'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல். 26
பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;
கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;
வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,
இளமையுள் மூப்புப் புகல். 27
கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;
இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,
கல்லாதான் கோட்டி கொளல். 28
குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;
தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;
அறவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,
செறிவு இலான் கேட்ட மறை. 29
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;
கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;
ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,
கடும் புலி வாழும் அதர். 30
பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா;
மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா,
தண்மை இலாளர் பகை. 31
தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;
முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;
நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா,
தொன்மை உடையார் கெடல். 32
கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா;
முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா;
வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா,
கள்ள மனத்தார் தொடர்பு. 33
ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;
விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;
இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,
கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு. 34
எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;
குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,
அழகுடையான் பேதை எனல். 35
பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;
நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா;
வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா,
கெடும் இடம் கைவிடுவார் நட்பு. 36
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா;
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;
அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,
சிறியார் மேல் செற்றம் கொளல். 37
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;
மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா;
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா,
திறன் இலான் செய்யும் வினை. 38
கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா;
கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா;
கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா,
மடுத்துழிப் பாடா விடல். 39
அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா
அடக்க, அடங்காதார் சொல். 40
இன்னா நாற்பது முற்றும்.


கடவுள் வாழ்த்து

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா; பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,சத்தியான் தாள் தொழாதார்க்கு.
நூல்

பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,மந்திரம் வாயா விடின். 1
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னாகாப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,பெரு வலியார்க்கு இன்னா செயல். 4
சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,மறை இன்றிச் செய்யும் வினை. 5
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,மாற்றம் அறியான் உரை. 7
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,நயம் இல் மனத்தவர் நட்பு. 8
கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா;வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,பண் இல் புரவிப் பரிப்பு. 9
பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா,பொருள் இல்லார் வண்மை புரிவு. 10
உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,கடன் உடையார் காணப் புகல். 11
தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா;வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,முலை இல்லாள் பெண்மை விழைவு. 12
மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,பிணி அன்னார் வாழும் மனை. 13
வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா;புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,உணர்வார் உணராக்கடை. 14
புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா;இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,பல்லாருள் நாணுப் படல். 15
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,எண் இலான் செய்யும் கணக்கு. 16
ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,ஈன்றாளை ஓம்பா விடல். 17
உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,மன வறியாளர் தொடர்பு. 18
குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,கலத்தல் குலம் இல் வழி. 19
மாரி நாள் கூவும் குயலின் குரல் இன்னா;வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னாமூரி எருத்தால் உழவு. 20
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,ஒத்து இலாப் பார்ப்பான் உரை. 21
யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,கான் யாறு இடையிட்ட ஊர். 22
சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா,நிறை இலான் கொண்ட தவம். 23
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,யாம் என்பவரோடு நட்பு. 24
நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னாநட்ட கவற்றினால் சூது. 25
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,பெரியார்க்குத் தீய செயல். 26
பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,இளமையுள் மூப்புப் புகல். 27
கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,கல்லாதான் கோட்டி கொளல். 28
குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;அறவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,செறிவு இலான் கேட்ட மறை. 29
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,கடும் புலி வாழும் அதர். 30
பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா;மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா,தண்மை இலாளர் பகை. 31
தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா,தொன்மை உடையார் கெடல். 32
கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா;முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா;வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா,கள்ள மனத்தார் தொடர்பு. 33
ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு. 34
எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,அழகுடையான் பேதை எனல். 35
பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா;வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா,கெடும் இடம் கைவிடுவார் நட்பு. 36
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா;துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,சிறியார் மேல் செற்றம் கொளல். 37
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா;வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா,திறன் இலான் செய்யும் வினை. 38
கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா;கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா;கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா,மடுத்துழிப் பாடா விடல். 39
அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னாஅடக்க, அடங்காதார் சொல். 40

இன்னா நாற்பது முற்றும்.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.