LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

இரட்டைக் கும்மி

 

எண்சீர் அடிகள் இரட்டி வருவதால்
இரட்டைக் கும்மியென் றியம்பப் பெறுமே
கருத்து : எண்சீரடிகள் (இரண்டு ஒரு தொடையாய் வருவதினும்) இரு மடங்காக வருவதால் அக்கும்மிப் பாடல் இரட்டைக் கும்மி என்று வழங்கப்படும். 
விளக்கம் : கும்மியில் எண்சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் வருமென்று மேலே கூறப்பட்டது) (நூ.38) இங்கு அதன் இரு மடங்காக வரும் கும்மி என்று கூறப்படுகின்றது. 
காட்டு : இரட்டைக் கும்மி
தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள்
திருநட்ட மாடும்சி வனுடனே
தேவிசி வகாமி நாயகி அந்தத் 
திருநீல பத்தன்நெ றிஉரைக்கச் 
சொல்லச்செ விதனில் கேட்டாள் நாளும்
சோதித்த வன்தன்னை ச் சூதாக்கிச்
சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும்
சுகந்தனில் வாழநி னைத்திடென் றான் (திருநீ.பள்ளு.தொடை284)
இதன் ஒரு கண்ணி பொதுவான கும்மியின் கண்ணியைப் போல் இரண்டு மடங்கு பெரிதாக அமைவதால் இப்பெயர் பெற்றது போலும். இதன் ஓரடியில்16 சீர்கள் இருக்கின்றன. தனிச்சொல் காணப்படவில்லை. 
42.
எடுப்பு முடிப்புடன் இயலும் கும்மியும்
ஓரடிக் கும்மியும் உளவா கும்மே.
கருத்து : எண் சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் நடக்கும் இரண்டடிக் கண்ணிகள் கொண்ட கும்மிப் பாடல்கள் அல்லாமல் எடுப்பு முடிப்புகளுடன் நடக்கும் கும்மிப் பாடல்களும் உள்ளன. 
விளக்கம் : இதுவரை கண்டவை வெறும் கண்ணிகளாகவே இயங்கும் கும்மிகள். கும்மிகளில் எடுப்பு, முடிப்புகளுடன் அமைந்தவையும் உண்டு. 
காட்டு :
எடுப்பு
கொம்மியடி பெண்கள் கொம்மியடி - இரு
கொங்கை குலுங்கவே கொம்மியடி
நம்மையாளும் பொன்னம்பல வாணனை
நாடிக் கொம்மிய டியுங்கடி - பதம்
பாடிக் கொம்மிய டியுங்கடி (கொம்மி)
முடிப்பு
காம மகற்றிய தூயனடி - சிவ
காம சவுந்தரி நேயனடி
மாமறை யோது செவ் வாயனடி - மணி
மன்றெனு ஞானவா காயனடி (கொம்மி)
(திருவருட்பா.2964-2966)
கண்ணிக்கு வேண்டிய இரண்டடிகள் இன்றி ஓரடியே ஒரு கண்ணியாகவும் வரும் கும்மிகள் ஓரடிக்கும்மி என்று பெயர் பெறும். 
காட்டு : ஒரடிக் கும்மி வக்காவும் கொக்கும்வ ருகுது பார் - நல்ல வங்கார சாமிகு ளந்தேடி. (தொடை.ப.292.மேற்) 

 

எண்சீர் அடிகள் இரட்டி வருவதால்

இரட்டைக் கும்மியென் றியம்பப் பெறுமே

கருத்து : எண்சீரடிகள் (இரண்டு ஒரு தொடையாய் வருவதினும்) இரு மடங்காக வருவதால் அக்கும்மிப் பாடல் இரட்டைக் கும்மி என்று வழங்கப்படும். 

 

விளக்கம் : கும்மியில் எண்சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் வருமென்று மேலே கூறப்பட்டது) (நூ.38) இங்கு அதன் இரு மடங்காக வரும் கும்மி என்று கூறப்படுகின்றது. 

 

காட்டு : இரட்டைக் கும்மி

தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள்

திருநட்ட மாடும்சி வனுடனே

தேவிசி வகாமி நாயகி அந்தத் 

திருநீல பத்தன்நெ றிஉரைக்கச் 

சொல்லச்செ விதனில் கேட்டாள் நாளும்

சோதித்த வன்தன்னை ச் சூதாக்கிச்

சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும்

சுகந்தனில் வாழநி னைத்திடென் றான் (திருநீ.பள்ளு.தொடை284)

இதன் ஒரு கண்ணி பொதுவான கும்மியின் கண்ணியைப் போல் இரண்டு மடங்கு பெரிதாக அமைவதால் இப்பெயர் பெற்றது போலும். இதன் ஓரடியில்16 சீர்கள் இருக்கின்றன. தனிச்சொல் காணப்படவில்லை. 

 

42.

எடுப்பு முடிப்புடன் இயலும் கும்மியும்

ஓரடிக் கும்மியும் உளவா கும்மே.

கருத்து : எண் சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் நடக்கும் இரண்டடிக் கண்ணிகள் கொண்ட கும்மிப் பாடல்கள் அல்லாமல் எடுப்பு முடிப்புகளுடன் நடக்கும் கும்மிப் பாடல்களும் உள்ளன. 

 

விளக்கம் : இதுவரை கண்டவை வெறும் கண்ணிகளாகவே இயங்கும் கும்மிகள். கும்மிகளில் எடுப்பு, முடிப்புகளுடன் அமைந்தவையும் உண்டு. 

 

காட்டு :

எடுப்பு

கொம்மியடி பெண்கள் கொம்மியடி - இரு

கொங்கை குலுங்கவே கொம்மியடி

நம்மையாளும் பொன்னம்பல வாணனை

நாடிக் கொம்மிய டியுங்கடி - பதம்

பாடிக் கொம்மிய டியுங்கடி (கொம்மி)

 

முடிப்பு

காம மகற்றிய தூயனடி - சிவ

காம சவுந்தரி நேயனடி

மாமறை யோது செவ் வாயனடி - மணி

மன்றெனு ஞானவா காயனடி (கொம்மி)

(திருவருட்பா.2964-2966)

கண்ணிக்கு வேண்டிய இரண்டடிகள் இன்றி ஓரடியே ஒரு கண்ணியாகவும் வரும் கும்மிகள் ஓரடிக்கும்மி என்று பெயர் பெறும். 

 

காட்டு : ஒரடிக் கும்மி வக்காவும் கொக்கும்வ ருகுது பார் - நல்ல வங்கார சாமிகு ளந்தேடி. (தொடை.ப.292.மேற்) 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.