|
||||||||
இரட்டைக் கும்மி |
||||||||
எண்சீர் அடிகள் இரட்டி வருவதால்
இரட்டைக் கும்மியென் றியம்பப் பெறுமே
கருத்து : எண்சீரடிகள் (இரண்டு ஒரு தொடையாய் வருவதினும்) இரு மடங்காக வருவதால் அக்கும்மிப் பாடல் இரட்டைக் கும்மி என்று வழங்கப்படும்.
விளக்கம் : கும்மியில் எண்சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் வருமென்று மேலே கூறப்பட்டது) (நூ.38) இங்கு அதன் இரு மடங்காக வரும் கும்மி என்று கூறப்படுகின்றது.
காட்டு : இரட்டைக் கும்மி
தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள்
திருநட்ட மாடும்சி வனுடனே
தேவிசி வகாமி நாயகி அந்தத்
திருநீல பத்தன்நெ றிஉரைக்கச்
சொல்லச்செ விதனில் கேட்டாள் நாளும்
சோதித்த வன்தன்னை ச் சூதாக்கிச்
சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும்
சுகந்தனில் வாழநி னைத்திடென் றான் (திருநீ.பள்ளு.தொடை284)
இதன் ஒரு கண்ணி பொதுவான கும்மியின் கண்ணியைப் போல் இரண்டு மடங்கு பெரிதாக அமைவதால் இப்பெயர் பெற்றது போலும். இதன் ஓரடியில்16 சீர்கள் இருக்கின்றன. தனிச்சொல் காணப்படவில்லை.
42.
எடுப்பு முடிப்புடன் இயலும் கும்மியும்
ஓரடிக் கும்மியும் உளவா கும்மே.
கருத்து : எண் சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் நடக்கும் இரண்டடிக் கண்ணிகள் கொண்ட கும்மிப் பாடல்கள் அல்லாமல் எடுப்பு முடிப்புகளுடன் நடக்கும் கும்மிப் பாடல்களும் உள்ளன.
விளக்கம் : இதுவரை கண்டவை வெறும் கண்ணிகளாகவே இயங்கும் கும்மிகள். கும்மிகளில் எடுப்பு, முடிப்புகளுடன் அமைந்தவையும் உண்டு.
காட்டு :
எடுப்பு
கொம்மியடி பெண்கள் கொம்மியடி - இரு
கொங்கை குலுங்கவே கொம்மியடி
நம்மையாளும் பொன்னம்பல வாணனை
நாடிக் கொம்மிய டியுங்கடி - பதம்
பாடிக் கொம்மிய டியுங்கடி (கொம்மி)
முடிப்பு
காம மகற்றிய தூயனடி - சிவ
காம சவுந்தரி நேயனடி
மாமறை யோது செவ் வாயனடி - மணி
மன்றெனு ஞானவா காயனடி (கொம்மி)
(திருவருட்பா.2964-2966)
கண்ணிக்கு வேண்டிய இரண்டடிகள் இன்றி ஓரடியே ஒரு கண்ணியாகவும் வரும் கும்மிகள் ஓரடிக்கும்மி என்று பெயர் பெறும்.
காட்டு : ஒரடிக் கும்மி வக்காவும் கொக்கும்வ ருகுது பார் - நல்ல வங்கார சாமிகு ளந்தேடி. (தொடை.ப.292.மேற்)
எண்சீர் அடிகள் இரட்டி வருவதால் இரட்டைக் கும்மியென் றியம்பப் பெறுமே கருத்து : எண்சீரடிகள் (இரண்டு ஒரு தொடையாய் வருவதினும்) இரு மடங்காக வருவதால் அக்கும்மிப் பாடல் இரட்டைக் கும்மி என்று வழங்கப்படும்.
விளக்கம் : கும்மியில் எண்சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் வருமென்று மேலே கூறப்பட்டது) (நூ.38) இங்கு அதன் இரு மடங்காக வரும் கும்மி என்று கூறப்படுகின்றது.
காட்டு : இரட்டைக் கும்மி தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள் திருநட்ட மாடும்சி வனுடனே தேவிசி வகாமி நாயகி அந்தத் திருநீல பத்தன்நெ றிஉரைக்கச் சொல்லச்செ விதனில் கேட்டாள் நாளும் சோதித்த வன்தன்னை ச் சூதாக்கிச் சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும் சுகந்தனில் வாழநி னைத்திடென் றான் (திருநீ.பள்ளு.தொடை284) இதன் ஒரு கண்ணி பொதுவான கும்மியின் கண்ணியைப் போல் இரண்டு மடங்கு பெரிதாக அமைவதால் இப்பெயர் பெற்றது போலும். இதன் ஓரடியில்16 சீர்கள் இருக்கின்றன. தனிச்சொல் காணப்படவில்லை.
42. எடுப்பு முடிப்புடன் இயலும் கும்மியும் ஓரடிக் கும்மியும் உளவா கும்மே. கருத்து : எண் சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் நடக்கும் இரண்டடிக் கண்ணிகள் கொண்ட கும்மிப் பாடல்கள் அல்லாமல் எடுப்பு முடிப்புகளுடன் நடக்கும் கும்மிப் பாடல்களும் உள்ளன.
விளக்கம் : இதுவரை கண்டவை வெறும் கண்ணிகளாகவே இயங்கும் கும்மிகள். கும்மிகளில் எடுப்பு, முடிப்புகளுடன் அமைந்தவையும் உண்டு.
காட்டு : எடுப்பு கொம்மியடி பெண்கள் கொம்மியடி - இரு கொங்கை குலுங்கவே கொம்மியடி நம்மையாளும் பொன்னம்பல வாணனை நாடிக் கொம்மிய டியுங்கடி - பதம் பாடிக் கொம்மிய டியுங்கடி (கொம்மி)
முடிப்பு காம மகற்றிய தூயனடி - சிவ காம சவுந்தரி நேயனடி மாமறை யோது செவ் வாயனடி - மணி மன்றெனு ஞானவா காயனடி (கொம்மி) (திருவருட்பா.2964-2966) கண்ணிக்கு வேண்டிய இரண்டடிகள் இன்றி ஓரடியே ஒரு கண்ணியாகவும் வரும் கும்மிகள் ஓரடிக்கும்மி என்று பெயர் பெறும்.
காட்டு : ஒரடிக் கும்மி வக்காவும் கொக்கும்வ ருகுது பார் - நல்ல வங்கார சாமிகு ளந்தேடி. (தொடை.ப.292.மேற்)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|