|
||||||||
இசைத்தமிழ் |
||||||||
இசைத்தற் கெனவே இயன்ற பாக்கள்
இசைத்தமிழ் எனப் பெயர் இயம்பப் பெறுமே.
கருத்து : பண்ணோடும் பண்ணுடன் சேர்ந்த தாளத்தோடும் இசைத்தற்காகவே பாடிப்பாடி உருவாக்கப் பெற்ற பாடல்கள் யாமும் இசைத்தமிழ் என்று சொல்லப்படும்.
விளக்கம் : தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள்:
இயற்றமிழ் என்பது நினைத்த கருத்தை உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு நடப்பது, பேச்சும், உரையும் செய்யுளும் இதில் அடங்கும். இயற்றமிழ்ச் செய்யுளை இயற்பா என்பர். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியன இயற்பாக்கள் எனப்படும்.
இசைத்தமிழ் என்பது இசையின்பம் அளித்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு நடப்பது; சொற்பொருள் இன்பங்களையும் கொடுக்கக் கூடியது. இசைத்தமிழ் நூல்கள்; தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பனுவலில் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி ஆகியன; திருப்புகழ் முதலியன.
இசைத்தமிழ்ப் பாடல்கள்: கலிப்பா* பரிபாடல்* பாவினங்கள்* வண்ணப்பா, சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி முதலியன. இவையாவும் இசைத்தற்கெனவே இயன்ற பாக்கள். ஆகவே இசைத்தமிழ் என்று வழங்கப்பட்டன.
------------------------------------------------------------------------------------------------------------
*இனிப் பிற நூலாசிரியர் விரித்துக் கூறியன இசைநூலின் பாவினம் ஆமாறு கூறுதலின்’ என்று கூறுகின்றார். இதனால் பாவினங்கள் இசைநூலுக்கு உரியவை என்பது தெளிவாகும். பேராசிரியர், அவையாவ: நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும், வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின, (தொ.பொ.செய்.1 80.பேரா.உரை) என்று விளக்குகிறார்.
கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன (தொ.பொ.செய்.242. பேரா.உரை)
------------------------------------------------------------------------------------------------------------
முதல் ஏகாரம் தேற்றம், இறுதி ஏகாரம் ஈற்றசை.
பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப்
பாட்டின்இயல பண்ணத் திய்யே (தொ.பொ.செய்.இளம்.173)
என்ற நூற்பா, பண்ணை நத்திவரும் பண்ணத்திகளை இசைப்பாடல்களைப் பற்றியது. இதன் உரையில் இளம் பூரணர்,
------
இசைத்தற் கெனவே இயன்ற பாக்கள் இசைத்தமிழ் எனப் பெயர் இயம்பப் பெறுமே. கருத்து : பண்ணோடும் பண்ணுடன் சேர்ந்த தாளத்தோடும் இசைத்தற்காகவே பாடிப்பாடி உருவாக்கப் பெற்ற பாடல்கள் யாமும் இசைத்தமிழ் என்று சொல்லப்படும்.
விளக்கம் : தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள்:
இயற்றமிழ் என்பது நினைத்த கருத்தை உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு நடப்பது, பேச்சும், உரையும் செய்யுளும் இதில் அடங்கும். இயற்றமிழ்ச் செய்யுளை இயற்பா என்பர். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியன இயற்பாக்கள் எனப்படும்.
இசைத்தமிழ் என்பது இசையின்பம் அளித்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு நடப்பது; சொற்பொருள் இன்பங்களையும் கொடுக்கக் கூடியது. இசைத்தமிழ் நூல்கள்; தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பனுவலில் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி ஆகியன; திருப்புகழ் முதலியன.
இசைத்தமிழ்ப் பாடல்கள்: கலிப்பா* பரிபாடல்* பாவினங்கள்* வண்ணப்பா, சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி முதலியன. இவையாவும் இசைத்தற்கெனவே இயன்ற பாக்கள். ஆகவே இசைத்தமிழ் என்று வழங்கப்பட்டன.
*இனிப் பிற நூலாசிரியர் விரித்துக் கூறியன இசைநூலின் பாவினம் ஆமாறு கூறுதலின்’ என்று கூறுகின்றார். இதனால் பாவினங்கள் இசைநூலுக்கு உரியவை என்பது தெளிவாகும். பேராசிரியர், அவையாவ: நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும், வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின, (தொ.பொ.செய்.1 80.பேரா.உரை) என்று விளக்குகிறார். கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன (தொ.பொ.செய்.242. பேரா.உரை)
முதல் ஏகாரம் தேற்றம், இறுதி ஏகாரம் ஈற்றசை. பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப் பாட்டின்இயல பண்ணத் திய்யே (தொ.பொ.செய்.இளம்.173) என்ற நூற்பா, பண்ணை நத்திவரும் பண்ணத்திகளை இசைப்பாடல்களைப் பற்றியது. இதன் உரையில் இளம் பூரணர்,
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|