|
||||||||
ககர ஆகார வருக்கம் |
||||||||
காரி யெனும்பெயர் சனியுஞ் சாத்தனுங்
கருமையுங் காகமுங் கரிக்கு ருவியும்
வடுகக் கடவுளுந் தெய்வேந் திரனும்
கடுவுமோர் வள்ளலுங் கருதப் பெறுமே. ....459
கால மெனும்பெயர் விடியற் காலமும்
விடிந்த பிற்காலமு முக்கா லமுமாம். ....460
காலெனும் பெயரே காற்றுங் கூற்றுந்
தாளும் பொழுதுந் தறியு மளவையும்
வழியுந் தேரி னுருளும் வாய்க்காலும்
பெலமு மலர்க்காம்பு மிடமும் பிள்ளையும்
முளையு மெனவே மொழிந்தனர் புலவர். ....461
காள மெனும்பெயர் கருமையு நஞ்சும்
ஊது சின்னத்தின் வருக்கமு முரைப்பர். ....462
காரெனும் பெயரே மாரிக் காலமும்
கறுவிய கருமங் கடைமுடி வளவும்
தவிராச் சினமு நீருங் கருங்குரங்கும்
உழவின் பருவமு மேகமுங் கூந்தலுங்
கருமையு மிருளும் வெள்ளாடுங் கருதுவர். ....463
காஞ்சி யெனும்பெயர் காஞ்சி நன்னகரமும்
மேகலைப் பெயருமோர் பண்ணுமோர் மரமுமாம். ...464
காண்டை யெனும்பெயர் கற்பா ழியினொடு
தவத்தோ ரிடமுஞ் சாற்றப் பெறுமே. ....465
காந்தார மெனும்பெய ரிசையுங் காடுமாம். ....466
காமர மெனும்பெய ரிசைப் பொதுப்பெயரும்
அத்த நாளு மோரிசையு மடுப்புமாம். ....467
காளை யெனும்பெயர் பாலைக் கதிபனும்
இளமையோன் பெயரு மெருதும் இயம்புவர். ....468
காய மெனும்பெயர் கறியின் கரிப்பும்
ஆகமும் விசும்பும் பெருங்கா யமுமாம். ....469
காத்திர மெனும்பெயர் களிற்றின் முற்காலும்
ஆக்கையுங் கனமும் கோப முமாமே. ....470
காசெனும் பெயரே மணியின் கோவையும்
குற்றமுங் காசின் விகற்பமும் கூறுவர். ....471
காவி யெனும்பெயர் கள்ளும் குவளையும்
காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....472
காழக மெனும்பெயர் கருநிறந் தூசுமாம். ....473
கான மெனும்பெயர் காடு மிசையுமாம். ....474
காகுளி யெனும்பெயர் மந்த விசையொடு
நாசியி னெழுமொலி தவிசு நவிலுவர். ....475
கான லெனும்பெயர் கடற்கரைச் சோலையும்
மலைசார் சோலைப்பெயரு நல்லொளியும்
பேய்த்தேர்ப் பெயரும் பேசப் பெறுமே. ....476
காவெனும் பெயரே காடிமலர்ச் சோலையும்
துலாமுங் காத்தலுந் தோட்சுமைப் பெயருமாம். ....477
காசை யெனும்பெயர் புற்பிடிப் பெயரும்
நாணலும் காசை மரமு நவிலுவர். ....478
காண மெனும்பெயர் பொன்னும் பொற்காசும்
பரியூ ணுஞ்செக்கு மோர்கட் செந்துமாம். ....479
காம்பு எனும்பெயர் மலர்க்காம்பு மூங்கிலும்
பட்டின் விகற்பமும் பகரப் பெறுமே. ....480
காழெனும் பெயரே மணியின் கோவையு
மரத்தின் வயிரமும் விதையும் பரலுமாம். ....481
காழிய ரெனும்பெயர் கடற்கழிப் பரதரும்
ஈரங் கோலியர் பெயரும் இயம்புவர். ....482
கானெனும் பெயரே காடு மணமுமாம். ....483
காப்ப, எனும்பெயர் வெண்ணீருங் காவலும்
தூசுங் கதவும் சொல்லுவர் புலவர். ....484
காத லெனும்பெயர் விருப்பமுங் கோறலும். ....485
காலிலி யெனும்பெய ரருணனும் சனியும்
பாம்பு மெனவே பகரப் பெறுமே. ....486
காண்ட மெனும்பெயர் காடுந் தீர்த்தமுந்
தூசு நூன்முடிவும் படைக்கலப் பொதுவும்
அம்புங் கோலு மணிகலச் செப்பும்
குதிரை யுங்கமண் டலமு மியம்புவர். ....487
காதை யெனும்பெயர் கதையொடு சொல்லுமாம். ....488
காம னெனும்பெயர் கணைவேள் பெயரும்
ஐந்தரு விறைவன் பெயரு மாமே. ....489
காம ரெனும்பெயர் கட்ட ழகுடனே
விருப்பமு மெனவே விளம்புவர் புலவர். ....490
காம மெனும்பெயர் விரகமும் விருப்பும். ....491
காரி யெனும்பெயர் சனியுஞ் சாத்தனுங் கருமையுங் காகமுங் கரிக்கு ருவியும் வடுகக் கடவுளுந் தெய்வேந் திரனும் கடுவுமோர் வள்ளலுங் கருதப் பெறுமே. ....459
கால மெனும்பெயர் விடியற் காலமும் விடிந்த பிற்காலமு முக்கா லமுமாம். ....460
காலெனும் பெயரே காற்றுங் கூற்றுந் தாளும் பொழுதுந் தறியு மளவையும் வழியுந் தேரி னுருளும் வாய்க்காலும் பெலமு மலர்க்காம்பு மிடமும் பிள்ளையும் முளையு மெனவே மொழிந்தனர் புலவர். ....461
காள மெனும்பெயர் கருமையு நஞ்சும் ஊது சின்னத்தின் வருக்கமு முரைப்பர். ....462
காரெனும் பெயரே மாரிக் காலமும் கறுவிய கருமங் கடைமுடி வளவும் தவிராச் சினமு நீருங் கருங்குரங்கும் உழவின் பருவமு மேகமுங் கூந்தலுங் கருமையு மிருளும் வெள்ளாடுங் கருதுவர். ....463
காஞ்சி யெனும்பெயர் காஞ்சி நன்னகரமும் மேகலைப் பெயருமோர் பண்ணுமோர் மரமுமாம். ...464
காண்டை யெனும்பெயர் கற்பா ழியினொடு தவத்தோ ரிடமுஞ் சாற்றப் பெறுமே. ....465
காந்தார மெனும்பெய ரிசையுங் காடுமாம். ....466
காமர மெனும்பெய ரிசைப் பொதுப்பெயரும் அத்த நாளு மோரிசையு மடுப்புமாம். ....467
காளை யெனும்பெயர் பாலைக் கதிபனும் இளமையோன் பெயரு மெருதும் இயம்புவர். ....468
காய மெனும்பெயர் கறியின் கரிப்பும் ஆகமும் விசும்பும் பெருங்கா யமுமாம். ....469
காத்திர மெனும்பெயர் களிற்றின் முற்காலும் ஆக்கையுங் கனமும் கோப முமாமே. ....470
காசெனும் பெயரே மணியின் கோவையும் குற்றமுங் காசின் விகற்பமும் கூறுவர். ....471
காவி யெனும்பெயர் கள்ளும் குவளையும் காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....472
காழக மெனும்பெயர் கருநிறந் தூசுமாம். ....473
கான மெனும்பெயர் காடு மிசையுமாம். ....474
காகுளி யெனும்பெயர் மந்த விசையொடு நாசியி னெழுமொலி தவிசு நவிலுவர். ....475
கான லெனும்பெயர் கடற்கரைச் சோலையும் மலைசார் சோலைப்பெயரு நல்லொளியும் பேய்த்தேர்ப் பெயரும் பேசப் பெறுமே. ....476
காவெனும் பெயரே காடிமலர்ச் சோலையும் துலாமுங் காத்தலுந் தோட்சுமைப் பெயருமாம். ....477
காசை யெனும்பெயர் புற்பிடிப் பெயரும் நாணலும் காசை மரமு நவிலுவர். ....478
காண மெனும்பெயர் பொன்னும் பொற்காசும் பரியூ ணுஞ்செக்கு மோர்கட் செந்துமாம். ....479
காம்பு எனும்பெயர் மலர்க்காம்பு மூங்கிலும் பட்டின் விகற்பமும் பகரப் பெறுமே. ....480
காழெனும் பெயரே மணியின் கோவையு மரத்தின் வயிரமும் விதையும் பரலுமாம். ....481
காழிய ரெனும்பெயர் கடற்கழிப் பரதரும் ஈரங் கோலியர் பெயரும் இயம்புவர். ....482
கானெனும் பெயரே காடு மணமுமாம். ....483
காப்ப, எனும்பெயர் வெண்ணீருங் காவலும் தூசுங் கதவும் சொல்லுவர் புலவர். ....484
காத லெனும்பெயர் விருப்பமுங் கோறலும். ....485
காலிலி யெனும்பெய ரருணனும் சனியும் பாம்பு மெனவே பகரப் பெறுமே. ....486
காண்ட மெனும்பெயர் காடுந் தீர்த்தமுந் தூசு நூன்முடிவும் படைக்கலப் பொதுவும் அம்புங் கோலு மணிகலச் செப்பும் குதிரை யுங்கமண் டலமு மியம்புவர். ....487
காதை யெனும்பெயர் கதையொடு சொல்லுமாம். ....488
காம னெனும்பெயர் கணைவேள் பெயரும் ஐந்தரு விறைவன் பெயரு மாமே. ....489
காம ரெனும்பெயர் கட்ட ழகுடனே விருப்பமு மெனவே விளம்புவர் புலவர். ....490
காம மெனும்பெயர் விரகமும் விருப்பும். ....491
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|