LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

கலைசைக்கோவை - அறத்தொடு நிற்றல்

கையறுதோழி கண்ணீர் துடைத்தல்.
304. வெண்ணீ றணியுங் கலைசைத் தியாகரை மேவலர்போற்
கண்ணீர் மழைபொழி தற்கொரு காரணங் கண்டிலமால்
பண்ணீர் மொழிமயி லேவிளை யாடும்பொற் பாவைதன்னைத்
தெண்ணீர்த் திரைகொண்டு போயின தோவென்னை செப்புகவே. 1

தலைவி கலுழ்தற்காரணங் கூறல்.
305.
கனக்கறைக் கண்டர் கலசத் தியாகர் கலைசையன்னாய்
வனக்கணிக் கீழ்வந் தெனைப்புணர்ந் தேகிய மன்னவரை
எனக்குமுன் காட்டிய கண்மலர் காண்பதற் கின்றவரைத்
தனக்கெனைக் காட்டிடென் றேயழுங் காரணந் தானிதுவே. 2

தலைவன் தெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தமைகூறல்.
306.
நலம்பர வுந்தென் கலைசைத் தியாகர்நன் னாட்டுவரிக்
கலம்பர வுந்துறைத் தெய்வத்தின் முன்னின்று கையெடுத்துப்
புலம்பரன் பாகத் தெளித்தவை யாவும் பொறியிலியேன்
சலம்பர வாவண்ண மெய்யாக நம்பினன் சாலவுமே. 3

தலைவி தலைமகன் இகந்தமை இயம்பல்.
307.
மறைமொழி வாயர் கலைசைத் தியாகர்வண் பாலிநதித்
துறைமொழி யேநற் கரிநமக் கென்றன்பர் சொல்லியொரு
குறைமொழி யாமல் விடுத்திகந் தார்நற் குணப்பெரியோர்
நிறைமொழி குன்றிற்குன் றாததுண் டோமண்ணினேரிழையே. 4

பாங்கி இயற்பழித்துரைத்தல்.
308.
நற்றேவர் சூழுங் கலைசைத் தியாகர் நயந்ததெண்ணீர்
உற்றே றியநந்தி யோடையின் வாய்நின்று மொண்டுறைவர்
பற்றேக யானக லேனென் றுரைத்தும் பரிந்தழநீ
எற்றே துறந்தன ரேயவர் போலில்லை யேதிலரே. 5

தலைமகள் இயற்பட மொழிதல்.
309.
காயிலைச் சூலர் கலசத் தியாகர் கலைசையன்னம்
சேயிதழ்த் தாமரை மேல்வீற் றிருந்து சிறையளிகள்
வாயினிற் பாட மகிழ்தொண்டை நாட்டன்பர் வன்கொடியர்
ஆயினு மாக வவரே யெனைப்புரந் தாள்பவரே. 6

தெய்வம் பொறைகொளச் செல்குவ மென்றல்.
310.
இதம்புரி மெய்யன்பர் சொற்பிற ழாத்தன்மை யின்மையினால்
சிதம்பர வீசர் கலசா புரியரைச் சேரலர்போற்
கதம்புரி யேறெய்வ மேயென்று சென்று கனபலிதூஉய்ப்
பதம்பர வக்கட வேமிரு வேமும் பணிமொழியே. 7

தலைவி இல்வயிற் செறித்தமை சொல்லல்.
311.
அனம்போ னடைச்சி கலைசைத் தியாகருக் கன்புசெயார்
தனம்போ லிருத்திமற் றைம்பொறி வாயிற் சரித்தல்செயார்
மனம்போற் றடுத்தென்னை வைத்தன ளாலன்னை வாரமிலாக்
கனம்போற் கருங்குழ லாரலர் தூற்றுதல் கண்டுகொண்டே. 8

செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறல்.
312.
தங்காப்பு மாசுணத் தால்வனை கின்ற சதுரரென்றும்
மங்காப் புகழ்கூர் கலைசைத் தியாகர் வரையணங்கே
பைங்காப் புடைநின் றொருவன்பின் னூழையின் பால்வரக்கண்
டங்காப் புடன்காப் படைத்தே னெனமோ யறைந்தனளே. 9

செவிலி தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல்.
313.
தெளிவார்க் கருளுங் கலைசைத் தியாகரைச் சேர்கிலர்போல்
ஒளிவாள் விழிபிறி தாய்முத் துறைக்க வுறைபுனற்கு
மிளிவார் முலைபசும் பொன்பூத் துடம்பும் விளிர்த்ததனால்
அளிவா ழளகத்தி னாட்குற்ற தீதென் றறிகிலனே. 10

பாங்கி வெறிவிலக்கல்.
314.
இவருடை யாருயி ருண்ணிய வோபலி யேற்றுமுன்சேர்ந்
தவருடை யார்வத் தழுந்திவ ணோயட வோமுருகே
கவருடை நெஞ்சத்தெம் மில்லத்துள் வந்த கருத்தெவனோ
துவருடை யாளர் கலைசைத் தியாகர் சுடர்வரைக்கே. 11

செவிலி தோழியை வினாதல்.
315.
பொன்னுற்ற மார்பன் பணிகோ விருந்த புரத்திலென்றும்
மன்னுற் றருளுஞ் சிதம்பர வீசர் வரையின்மின்னே
துன்னுற்ற மாதர்முன் சூர்தடிந் தானைச் சுடர்மரக்காற்
பின்னுற்ற நாளனை யென்னையிவ் வாறுகொல் பேசியதே. 12

தோழி பூத்தருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
316.
வாமம் பெறுநின் மகட்கொரு பூவண்ண வண்டுகொண்ட
நாமங்கொள்போதொன்றுன்கண்ணிற்கொள்வாயென்றொர் நம்பிவந்து
சேமந் தழைதரத் தந்தான் கலைசைத் தியாகர்வெற்பிற்
காமஞ் சரிகொய்து யாம்விளை யாடிய காலையிலே. 13

புனறருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
317.
குருமணி யன்னநின் கன்னியைம் பாற்குக் கொழித்திடுந்தன்
கருமண லொப்புறல் கண்டிவ ளாடிடுங் காற்கந்தள்ளத்
திருமணிப் பாலியிற் பாய்ந்தெடுத் தானொரு செம்மலுமைக்
கொருமண வாளர் கலைசைத் தியாகரை யுள்கிவந்தே. 14

இதுவுமது.
318.
தன்னிடைத்தோன்றிய சைவலக் கொத்தையுன்றையலைம்பால்
வென்னிடச் செய்ததென் றாடிடுங் காலம் விரைந்திழுக்கப்
பொன்னுடை யானிற் சுனைவீழ்ந் தெடுத்துப் புரந்தனனோர்
கன்னெடுந் தோளன் கலைசைத் தியாகர் கனவரைக்கே. 15

களிறுதருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
319.
தொடையார் குழலி நடைக்கிடை தன்பிடி சோர்தல்கண்டவ்
விடையானை யொன்று கனன்றிவண் முன்வரு மேல்வையென்னை
உடையார் கலைசைத் தியாகர்முன்னாக முரித்தெனவேற்
படையாலவ் வானையைக் கீண்டளித் தானொரு பார்த்திபனே. 16

தலைமகள்வேற்றுமை கண்டு நற்றாய் செவிலியை வினாதல்.
320.
வண்டமிழ் கூருங் கலைசைத் தியாகர் மலைவனிதாய்
பெண்டன்மை யம்ம முழுதிழந் தாளென் பெருமகண்முன்
கண்டகண் ணுக்கின்று வேற்றுருக் காட்டிக் கடக்கரிதான்
உண்டவெள் ளிற்கனி போலான காரண மோர்ந்துரையே. 17

செவிலி நற்றாய்க்கு முன்னிலைமொழியால் அறத்தொடுநிற்றல்.
321.
மருவில்வஞ் சூடுங் கலைசைத் தியாகர் வரைப்புனத்திற்
பொருவிறற்போதகம்வந்ததுண்டோவென்றுபோந்துவினாய்த்
தருவு மதிலணை வல்லியும் போலநின் றையன்முலை
ஒருவிதி கூட்ட முயங்கின ராலன் றொருசெல்வரே. 18

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.