LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

கந்தர் அந்தாதி-2

 

செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்
செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்
செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு
செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே. 46
போர் புரியும் திறமும், மத்தகமும், கோபமும் உடைய, அயிராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்ட, தேவசேனையின், மணம் வீசுவதும் இறுமாப்பும், பூந்தாதுகளும் உடைய, தன பாரத்தில், மூழ்கும், கடப்ப மாலை அணிந்த முருகனே, இவ்வுலகத்தில் (வினையால் ஏற்படும்), பிற சமய நூல்களின் கர்வத்தை, வெல்லுகின்ற, வேதாகம நூல்களை, சிருஷ்டித்தவனே, தாமரை மலர்களில் உதித்த பிரம்மாக்களும், அழிந்து, தேவர்களின் சா£ரத்தை விடுகின்ற, உகாந்த காலத்திலும், நான் நித்யத்வம் அடையும் பொருட்டு, இப்பிரபஞ்சத்தில் முடிவான பொருள் எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும். ..
திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ
திடம்படு கத்துந் திரித்தம்பு வாலி யுரத்தும்பத்துத்
திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம
திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே. 47
உறுதிநிலை அழியும், யுகாந்த காலத்திலும், அழிவில்லாமல் இருப்பீர்கள், பூர்வ வினையால் நமக்கு ஏற்படும், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் ஈஷனாத்ரயங்களையும் (மண், பெண், பொன்), ஓயாமல் சோதிட நூல்களை பார்த்து, சதா பிதற்றுவதையும், மாற்றி, தன்பாணங்களை, வாலியின் மார்பின் மீதும், இராவணனுடைய உறுதியான பத்து தலைகளின் மீதும், பிரயோகித்த ஸ்ரீராமனின், மருமகனே, பகை கொண்ட, முப்புரங்களையும், தான் தோன்றிய இடத்திலேயே, விழுந்து அழியும்படி, உயர்ந்த மேருமலையை, வளைத்த சிவபெருமானின், மைந்தனே, என்று துதியுங்கள். ..
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே. 48
அழகுடனும், மிகுந்த காதலுடனும், கானாறு பாய்கின்ற, வள்ளிக் காட்டில் வாழ்ந்த, வள்ளியுடன், காந்தர்வ மணம் புரிந்த, செந்தில் குமரக்கடவுளே, வலிமையில் மேம்பட்ட, பகைமை உடைய, இராக்கதர்களை அழித்தவனே, செந்நிறமான தெய்வமே, என்று துதித்தால், செவ்வாய், புதன், சந்திரன், பிரகஸ்பதி, வியாழன், ஆதித்தன், அவனுடைய பிள்ளையாகிய சனீஸ்வரன், (இவர்களின் வக்கிரத்தால் ஏற்படும்) நமது சித்தத்தை மாறுபடச் செய்யும், தீமை இல்லாது போகும். ..
சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்
சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்
சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்
சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே. 49
தனது ஐந்து சிரங்களில் ஒன்றை இழந்தவரும், மற்ற தேவர்களைக் காட்டிலும் நிலையான வாழ்க்கையை உடையவருமாகிய, ஆதி காடவுளுமாகி பிரம்மனும் அவனின் பிதாவாகிய திருமாலும், அடிமுடி தேடி கண்டு பிடிக்க முடியாத பரமசிவனின், குமாரனே, நல்ல முறையில் ஒலி செய்யும், சதங்கை, சிரேஷ்டமான, மணிகள், வெட்சி மாலை (இவைகளை எல்லாம் அணிந்த), அழகிய உனது திருவடிகளில், சிவந்த என் இருதயம், தியானித்து ஒருமைப்படும்ப, எனக்கு அருள வேண்டும், தற்போது, முன் செய்த தீ வினையாகிய, சேற்றில், கரை சேறுவதற்கு வழி தெரியாமல், உழலுகின்ற, இச் ஜீவ வாழ்க்கை, பொய்யானது. ..
சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா
சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி
சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி
சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே. 50
பொய்யாக உள்ள, நாம் காண்கின்ற கனவைப் போன்றது, இந்த பிரபஞ்ச வாழ்க்கை, என்ற மன உறுதியை நல்கும், தவ சித்திகளின் வலிமையை (நாடாமல்), மன்மதனுடைய காம நூல் வழியில், கெட்டுப்போன எனக்கு, இனிமேலாவது, வெட்சி மாலை அணிந்த, சிறந்த, அற்புதமான அழகுடைய, பெருத்த தனபாரமுடைய, மயில் போன்ற வள்ளியின், மணாளனே, இந்த பிறப்பாகிய பந்தம் நீங்க, மோட்சப் பேறானது பரிபூரணமாக கிட்டும்படி, எனக்கு அருள வேண்டும் ..
சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புரா
சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா
சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா
சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே. 51
கொண்டையையும், தூவியையும் உடைய, பெரிய, மயிலை வாகனமாக உடையவனே, கிரவுஞ்ச மலையையும், முழங்குகின்ற, சமுத்திரத்தினிடத்தில், ஒழுங்கான, மேல் கிளைகளை உடைய, மா மரமாக நின்ற சூரபத்மனையும், இருளுக்கு இடமாகிய மாயையும், விலக்கி, போர் செய்து, நான்கு முகத்தை உடைய பிரம்மன், பிரணவப் பொருள் தெரியாமல் வேதத்தைக் கற்ற குற்றத்திற்காக, அவனைக் கோபித்து, பெரும் மகிழ்ச்சியை, அழகுக்கு இருப்பிடமான, தேவ லோகத்தில், விளைவித்தவனே, கொடிய போரில் வல்லவனாகிய (பாண்டிய மன்னனின்), குமாரியின்*, குதிரை முகத்தை, தீர்த்தவனே, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, மயிலைப் போன்ற அழகுடைய தேவயானையின், கலவி இன்பத்தை விட, நக்கீரர் சொல்லிய திருமுருகாற்றுப்படை, உனக்கு இனிமையாக இருந்தது போலும். ..
தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத்
தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்
தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல்
தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே. 52
தித்தி தொந்தி என்கிற தாள வரிசைகளுக்கு ஏற்ப, நடனம் புரிகின்ற, சிவபெருமானின், செவிகளாகிய, வரிசையான புலனிடத்து, நுழையும்படி, பிரணவப்பொருளை, அச்சிவனின் கலக்கம் ஒழியும்படி, உபதேசம் செய்த, குமாரனே, தேன் பண்டங்களின் இனிமையினால், இனிப்புற்று இருக்கும், வயிற்றை உடைய (கணபதிக்கு), தம்பியே, கருப்பையில் உண்டாகிற ஜீவனுக்கும், அழிந்து போகிற, தோலாகிய இந்தப் பைக்கும், சம்பந்தம் ஏற்பட்டு பிறப்பு உண்டாவதற்கு, காரணம், நான் முப்பிறவியில் செய்த, கருமங்களாகிய, கொடிய தளைகள் தானோ? ..
தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர்
தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான்
தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்
தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே. 53
கரத்தில் அக்னியையும், தோளில் வில்வ மாலையையும், சிரசின்கண் கங்கா நதியையும், புனைந்திருக்கும் சிவபெருமானின், பாலகனே, இருண்ட, (ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர்) இவைகளால் உண்டாகிய சமுத்திரம், வரண்டு போகும்படி, வில் வித்தையை காண்பித்த, வல்லவராகிய*, ராமச்சந்திர முர்த்தியின் மருகனே, அறிவதற்கு அரிதாகிய, பெரிய தீவுகளிலும், வேறு பல இடங்களிலும் பஞ்சேந்திரியங்களினால், இச்சையினால் உந்தப்பட்டு, பல புலன் நுகர்ச்சிக்காக, அலைந்து திரிகின்ற, புத்தியின், பலத்த தொடர்ச்சியை, நீ ஒழிக்க வேண்டும், எமன் தொடர்ந்து என்னைப் பிடிக்காமல், உனது திருவடியில் நான் நிலைபெற வேண்டும். ..
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே. 54
திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். ..
தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்
தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்
தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்
தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே. 55
கொடியனவற்றையே கற்கின்ற ஏ மனமே, தீமை மாத்திரமோ இறப்பும் ஒழிந்து போகும், பிறவியும் நீங்கும் (ஆதலால்), குற்றத்திற்கு, இடம் ஆகிய, கடலின் கண், அசுர சேனை அனைத்தையும், தகித்த, கை வேலை உடையவனே, கருணா மூர்த்தியே, வேள்வி முடியும் காலத்தில் வேதியர்கள் எல்லோரும் திரண்டு கொண்டு ஒரே மாதிரியாகிய உச்ச குரலில் சுப்ரமண்யோம் என்கிற மந்திரத்தை முழக்கி வணங்குகின்ற, முத்துக்குமரனே, இந்த, வேள்வியில் கொடுக்கப்படும் அவிர் பாகத்திற்கு, உரிமையை உடையவனே, குறிஞ்சிக் கடவுளே, என்று துதிப்பாயாக, உன் சித்தம் அழகு பெறவே. ..
தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்
தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னத்
தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே. 56
தென்னஞ் சோலைகளும், மேகங்கள், கவிந்து கொண்டிருக்கும், திருத்தணி, பரங்குன்றம், திருச்செங்கோடு என்னும் மூன்று மலைகளுக்கு அதிபனே, கையில் சூலத்தைப் பிடித்திருக்கும், தென் திசைக்கு அதிபனாகிய எமராஜனின், உடல், அழியும்படி, காலால் நீட்டி உதைத்த பரமசிவனின், குமாரனே, முன்னொரு காலத்தில், பின் முதுகில் கூனுடைய, பாண்டியனின் உடல் கூனை, நன்மையே பயக்கும் விபூதியினால், சரி செய்து நிமிர்த்தியது போல, இப்போது, வனப்புடைய, மன்மதனின், அழகிய, கையில் பிடித்த கரும்பு வில்லின், வளைவையும், நீக்கி, அந்த மன்மதன் என்மேல் பாணத்தை எய்தாதபடி நீ அணிந்திருக்கும் மாலையை தந்தருள வேண்டும். ..
தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்
தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே
தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்
தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே. 57
கிரணங்களை உடைய சூரியன், சஞ்சாரஞ் செய்யும், அழகிய ஆகாச வெளியையும், கடந்து சென்று, தன் பிள்ளையாகிய பிரம்மனும், பயந்து வணங்கும்படி, திரிவிக்ரமவதாரத்தில், பாதத்தை ஊர்த்தவ தாண்டவமாய் எடுத்த மகாவிஷ்ணுவும், கடலும், அலறி அபயமிட, மாமரமாகிய சூரனால் உண்டான துன்பத்தையும், தீமையையும், முழுவதும், நீங்கும்படி ஒழித்து, அடியா¡ர் கூட்டம், செழிக்கும்படி, விண் உலகத்தையையும், காப்பாற்று என்று, சிரசின்கண், கங்கா ஜலத்தை சூடியிருக்கும் பரமசிவன், சொல்ல, அவரை வணங்கி அந்த வேலையை செய்து முடித்த, கூரிய வேலாயுதத்தை, கையில் ஏந்தி இருக்கும் முருகப் பெருமானே, குருவாகி அந்த சிவனுக்கு, பிரணவப் பொருளை உபதேசித்த நற்குணக் குன்றனே. ..
சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி
சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு
சீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீ
சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே. 58
கொடைக் குணத்திலும், பெருமையிலும், மேம்பட்ட, குறை இல்லாதவனே, சமுத்திரத்தில், கோபமுடைய, அசுரராகிய இருள் கூட்டத்தை, அழித்தவனே, முற்றமான கடர்க்கரையின்கண், முத்துக்கள் நிறைந்திருக்கின்ற, செந்திற் பதியானே, மயில் வாகனமுடைய, அழகிய பரிசுத்த மூர்த்தியே பசியாகிய உதரத்தீயினால், ஏற்படும், துன்பத்தை அடைந்து, மயக்கமுற்றிருக்கிறேன், இது மிகவும் இகழ்ச்சியான, முழுவதும் இழிவான நிலை (அதலால்), இப்படிப்பட்ட ஜனனத்திலே, இனி மேலும், என்னைக் கொண்டு போய்த் தள்ளுவது, நன்று ஆகாது. ..
சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி
சேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்
சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்
சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே. 59
நெருங்கி இருக்கும் தாமரைகளும், அசைகின்ற, ஜலத்தின் கண், நீலோற்பல புஷ்பங்கள் மலரும், திருத்தணி மலையில் வாழும், தெய்வீக சக்தியாகிய, வள்ளி நாயகனே, தும்மல் ஏற்பட்டது, இறந்து விட்டார், என்று, பலரும் ஆச்சரியத்துடன் சொல்வதற்கு முன், உஷ்ணம், சிலேத்துமம், மயக்கம், ஜாக்ரத், சொப்னம், சுசுத்தி, துரியம், துரியாதீதம் என்ற ஐந்து அவஸ்தைகளும், நிரம்பி இருக்கும், இந்த உடல், அழிந்து போவதற்கு முன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் இவர்கள், போற்றி வணங்கும், சிறந்த உன் திருவடித் தாமரையில் என்னைச் சேர்த்தருள வேண்டும்). ..
செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச்
செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்
செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்
செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே. 60
தனது மனைவியைக் கூட, பகைவர்கள் அபகரித்துக் கொள்ளும் முன்பு, தனவந்தர்களுக்கு, நடுநிலைமையுடன், மற்றவர்களுக்கு தானம் கொடுத்து கொடுத்து, சிவந்து போன, கை வாய்க்கப் பெறாவிடில், அவர்கள் எப்படி நல்ல கதி அடைவார்கள், தெய்வீகமாகிய கணபதி, புகழ்ந்து பேசிய, தம்பியே, தில்லை நடராஜராகிய, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில், வெள்ளி, செம்பு, தங்கமான, மதிலை உடைய திரிபுரத்தை, ஜெயித்த பரமசிவனின், மைந்தனே, தேவயானையின் தலைவனே. ..
திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்
திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ
திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்
திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே. 61
தெய்வயானையின் மணாளனே, சமுத்திரத்தின் கண், திருச்செந்தூரில் விளங்கும், முத்தின் கொழுந்தொளி போன்றவனே, முன்னொரு காலத்தில், அஷ்ட திக்கு பாலர்களும், ஆட்டை நிலையான வாகனமாக உடையவனும், சிவபெருமானிடத்தில் சென்று, அரனே, உமாதேவியை இடப்பாகத்தில் வைத்திருப்பவனே, திதியின் பிள்ளைகளான சூரபத்மாதி அசுரர்களால், எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, எப்படித் தாங்கி பிழைப்போம்? என்று முறையிடுகையில், அவர் உனக்கு அளித்த, அடியவரின் இடரை நீக்குவதையே நெறியாகக் கொண்ட, கை வேலாயுதத்தை, நீ அவர்கள் மேல் எய்தி அவர்களை அழித்திராவிடில், அந்த தேவர்கள் எப்படி பிழைத்திருப்பார்கள்? ..
திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்
திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்
திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே
திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே. 62
தேவயானையின் பல்லாகிய, இனிய, முத்தானது, செலுத்துகின்றதும், தன்னால் நுகரப்பட்டதும் ஆன, அதரபானமாகிய அமுதத்தால், மனம் குழைந்த, உள்ளம் உடையவனே, கண்ணுக்குத் தெரியாமல் எள்ளில் எண்ணெய் விரவி இருந்தும் அது எள்ளை அரைக்கும்போதுதான் வெளி வருவது போல, சராசலமெங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு ஆனால் பக்தியினால் வெளிப்படும் போது மட்டும் நேரே தெரிகின்ற, செந்திலாண்டவனே, ஆயுத வகையில் முதன்மை ஸ்தானத்தை வகிக்கும் வேலாயுதத்தை ஏந்தியவனே, கந்தக்கடவுளே, என்று துதித்து ஓலமிடாமல், உன்னிடம் பக்தி இல்லாத மாற்றார்கள் போல், முற்பிறவியில் சம்பாதிக்கப்பட்ட, பெரிய தீவினைகளை நான் அடைந்து, வருந்தி உழல்வது, என்ன காரணம்? ..
தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்
தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்
தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி
தியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே. 63
சங்க நிதி பதுமநிதி இவைகளும், கற்பக விருட்சமும் ஆக விளங்கும், செல்வத்தினை உடைய பொன்னுலகு, முன்பு அழியாமல் பிழைக்கும்படி, நிலை பெற்ற கிரவுஞ்ச கிரியை, போரில் வென்று அழித்த, முழு வீரனே, சற்றும் கலக்கமில்லாத, ஐம்புலங்களை உடைய, இந்த தேகம், அந்திம காலத்தில் அக்கினியில் வெந்து போவதும், எருமை வாகனமுடைய எமதூதன் (என்னை எமபுரத்திற்கு கொண்டு சென்று) வாயைத் திற, சற்றும் தவம் செய்யாத பாவியே, (கருணை இல்லாமல் பிராணிகளை கொன்று சாப்பிட்ட பாவத்திற்காக) தீப்பொறிகளைச் சாப்பிடு, என்று கூறப்போவது, உண்மை ஆதலால், பிரம லிபி என் தலையில் எழுதப்பட்டு, பிரம்மன் என்னை மீண்டும் சிரிஷ்டிக்காதபடி என்னைக் காத்தருள வேண்டும். ..
சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி
சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்
சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்
சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே. 64
தெய்வீகம் பொருந்திய வள்ளியின், (கருணையினால்) சிவந்த, இதய தாமரை போல் விளங்கும், முகார விந்தம் உடையவனே, கிரவுஞ்ச மலையை அழித்த ஒப்பற்ற வீரனே, தலைவனே, பழனிப் பதியானே, ரிஷப வாகனத்தின் மேல், நிலைபெற்று வரும், குற்றமற்ற பரிசுத்தரான சிவபெருமானுக்கு, முன்னொரு காலத்தில், நீ பிரணவ உபதேசத்தை செய்ய, வேதம் ஓதுவதில் வல்லமையும், அன்ன வாகனத்தையும் உடைய, பிரமனுக்கு, எதனால், வெட்கத்தை அடைந்து, பொருள் தெரியாமல் மயங்கி நின்றது? ..
திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய
திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய
திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி
திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே. 65
என் உயிர் போன்ற இந்தப் பெண், விழிகளில் நீர் சொரிந்து கொண்டு, மயங்கி நிற்கிறாள், செந்திலாண்டவன், தன்னுடைய திருத்தோள்களை, எனக்குக் கொடுத்து அருள மாட்டார் என்கிறாள், சந்திரனை, தினமும், வெறுத்து பேசுகிறாள், தான் இப்படி அரற்றி வருந்துவதைப் பார்த்து, மன்னித்து ரட்சிக்க மாட்டேன் என்கிறார் என்று சொல்லுகிறாள், பாண்டிய மன்னனின், சுர வருத்தத்தின், கொடுமை நீங்க, தேவாரப் பதிகத்தைப் பாடி அருளிய, சம்பந்தப் பிள்ளை என்று கூறுகிறாள் (ஆதலால்), பிரமனின், கையினால் சிருஷ்டிக்கப்படுகின்ற உடலுக்குள், இந்த ஆன்மா சேர்க்கபட்டு மீண்டும் பிறவி அடையாதபடி, ஆண்டு கொள்ள வேண்டும், என்னுடைய சுவாமியே அழகிய குமாரக்கடவுளே. ..
சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ
சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு
சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு
சீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே. 66
அலைவீசும், கடலின் கண், பெரிய போர் வீரனான, கொடிய, சூரபத்மனை, ஜெயித்தவனே, தோள்களை, விரும்பி அணைப்பதில் பிரியமுள்ளவளும், நெற்றியில் திலகம் தீட்டியவளுமான, கொடி போன்ற வள்ளிநாயகிக்கு உரிய, அலங்காரமுடையவனே, சிவகுமாரனே, பரிசுத்தமான அக்கினியால், பொறி ரூபத்தில் ஏந்தப் பட்டவனே, ஐராவதத்தையும், மேகத்தையும், வாகனமாக உடைய இந்திரனின், சிறையை மீட்டுக் கொடுத்த, பரிசுத்த மூத்தியே, வலிய, மயக்கத்தைத் தரும், இருவினைகளாகிய மலையை, மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிதற அடித்து விடு. ..
சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா
சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்
சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்
சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே. 67
மயில் வாகனத்தை, தாவிச் செலுத்தும்படி, ஆர்பாரிக்கும், கடலின் கண், செலுத்தி, அந்த வீரம் வாய்ந்த, திதி தேவியின் பிள்ளைகளாகிய அசுர கூட்டங்களை, கோபித்து அழித்தவனே, தந்தம் உடைய, பாம்பு போன்ற நாகாசல வேலவனே, தெய்வீகமாகிய, குறப்பெண்ணாகிய வள்ளி தேவியை, பார்த்து, பணிவுடன், உன் மலர் போன்ற கைகளை, தலைக்கு மேல் கூப்பிக் கோண்டு, ஏ பெண்ணே உன்னுடைய இடுப்பு, புகழ்ந்து கூறப்படும், வஞ்சிக் கொடி போன்ற உருவம் உடையது, உன் விழி, நிலைபெற்ற, ஆபத்துக்களை எல்லாம், அகற்றி என்னுடைய ஆசை அக்கினியைத் தணிப்பதால், நான் செய்த தவத்தின் பயனே ஆகும், என்றெல்லாம் புகழ்ந்துரைத்த தலைவனே. ..
சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத
சேகர வாரண மேவும் புயாசல தீ வினையின்
சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்
சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே. 68
அடியவர்களை பின் வாங்குதல் இல்லாத, போர் செய்வதில் வல்லமை உள்ள வேலாயுத மூர்த்தியே, வள்ளி நாயகியின், தாள்களை சிரத்தில் ஏந்தியவனே, தேவயானை, தழுவும், மலை போன்ற தோள்களை உடையவனே, (அடியார்களின்) கொடிய வினையின், வஜ்ரம் போன்ற திடத் தன்மையை, அரம் போன்று பொடி செய்பவனே, வேதங்கள் பூஜிக்கும் செங்கோட்டு மலைக்கு அதிபனே, தினந்தோரும், முக்கண்ணுடைய சிவபெருமான், மால் விடையாகிய திருமாலின், கையிலிருக்கும், பாஞ்ச சன்யம் என்ற சங்கிற்கும், உன் கையில் இருக்கும், கொடியாகிய கோழிக்கும், (உன்னைச் சேர்ந்திருக்கும் இரவு காலம் நீடிக்காமல் பொழுது புலர்வதை தொனி செய்து காட்டும் சங்கும், அதே போல் சேவல் காலைப் பொழுதை வரவழைக்க கூவுவதாலும்) இரண்டிற்கும் உயிர் ஒன்றாக இருக்குமோ? ..
சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்
சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள்
சீவன சத்துரு செய்யாண் மருகவெ னாதிடையே
சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே. 69
பிராணனுக்கு, (நித்யத் தன்மையும் மாறுபடாத தன்மையும் இல்லாததால்) அசத்தாகும் (ஆதலால் பிராணனும் உடலும் சேர்ந்திருக்கும் பொழுதே), நெஞ்சை உருகவைக்கும் பக்தியினால், (சத்து எது என்று தெரிந்து கொண்டு) இந்த ஜென்மம் ஒழியும்படி, சகல ஜீவன்களுக்கும் மூலகாரணராகிய சிவபெருமானால், ஆட்டு வாகனமுடைய, உஷ்ணமுடைய, உடம்பை உடைய அக்னி தேவனின், கரத்தில் கொடுக்கப்பட்ட (பொறியாய் இருக்கும் போது), குமாரக்கடவுளே, ஒளிவீசும், தாமரையை இருப்பிடமாகக் கொண்ட, சிவந்த நிறமுடைய மகாலட்சுமிக்கு, மருகனே, என்று சித்தத்தில் வைத்து நிலை பெறச் செய்து தியானிக்காமல், ஒரு பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே, ஜீவனானது (சத்தாகிய பரமாத்மாவையும் அசத்தாகிய ஜீவாத்மாவையும் அறிந்து கொள்ளாமல்), ஜடமாகிய, மலபாண்டமாகிய தேகத்தை, அடைந்து, அதற்கு ஏற்கத் தகாத பெரிய பழியை, என் இதயம் எண்ணிக்கோண்டு, அவமே காலத்தைப் போக்குகிறது. ..
சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்
சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்
சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா
சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே. 70
கோலம் தீட்டிய, இந்த அழகு, நிறைந்திருக்கின்ற, புள்ளியை உடைய முகம் பொருந்திய, தேய்வீகமாகிய ஐராவதத்தினிடை வளர்ந்தவளும், அற்புதமான அழகை உடையவளும் ஆகிய, கொடி போன்ற தேவயானைக்கு இன்பம் பயப்பவனே, செந்திற்பதியானே, கிரவுஞ்ச மலையை, சிதற அடித்த, வலிமையை உடையவனே, ஞானா மூர்த்தியே, (முதலில் இவன் மோட்சத்திற்கு தகுதி உள்ளவனா என ஆராய்ச்சி செய்துவிட்ட பிறகு இவன் தக்கவன் என அறிந்தவுடன் தாய் போல் அருள் செய்து) முத்தி வீட்டை அடையச் செய்தவனே (ஆய் .. ஆராய்ச்சி, ஆய் .. தாய்). கடல் ஓயாமல் முழங்குகிறது, இந்த இடத்தில் பிறைச் சந்திரனும் சூரியனின் காந்தி போல் தகிக்கிறது. ..
திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு
திங்களு மாசுண மாக்கும் பதாம்புயன் செந்திலன்னாள்
திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்
திங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே. 71
சந்திரனையும், பாம்பையும், தரித்திருக்கும் சிவபெருமானின், குமாரனும், என் பத்து மாதமென்னும் கால அளவையில் சேர்ந்து அன்னையின் கருப்பையில் படும் பிறவித் துன்பத்தையும், மிகவும் நீறாக்கும், (சுணம் சுண்ணாம்பு), தாமரை போன்ற தாள்களை உடைய குமாரக்கடவுளின், செந்தில் பதியைப் போல, ஒத்து விளங்குகின்ற (இந்த மங்கையின்), தீமைகளை, உண்டாக்கும், ஜீவ ராசிகள் செய்யும் பாவங்களாகிய குற்றங்களை, ஆராய்ந்து பார்க்கும், எமனைப் போல, கண்ணையும், செழிப்பான கரும்பும், இனிய, தேனும், ஓப்பு இல்லாததால் குற்றம் வரும்படி செய்கின்ற, இனிமையான மொழியும், உன்னால் மடல் எழுத முடிந்தால், நன்மையாகும். ..
தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்
தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்
தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்
தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே. 72
ஏ நான்முகனே, இனிமேல், உன்னாலே, என் தலை மேல் விதியாகிய லிபியை, எழுத வேண்டிய வேலை கிடையாது, ரத்தம் முதலிய கறைகள் சேர்ந்த, இந்த ஜனனத்தில், அசூசி அடைந்திருக்கின்ற, மற்ற ஜீவன்களைப் போல, நான் ஆக மாட்டேன், (ஏனெனில்) எட்டு திசைகளிலும், தன்னுடைய நான்கு கொம்புகளையும், கூர்மை செய்கின்றதும், அந்த முகப் படங்களையும், அதிலுள்ள வித்திர எழுத்துக்களையும் கொண்ட, முகத்தை உடைய மலை போன்ற ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின், சிறையை மீட்டின கந்தக் கடவுளின், திருவடிகளை அடைய, என்றும் அழிவில்லாத இந்த தெய்வத்தையே, உள்ளத்தில் தியானித்திருக்கிறேன். ..
திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ
திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ
திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்
திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே. 73
நான்கு திசைகளிலும் முகத்தையுடைய, வேதத் தலைவனாகிய பிரம்மனும், அவரது தந்தையாகிய திருமாலும், சூரியனும், சந்திரனும், தங்கள் தங்கள், ஆயுள் முடிந்து, இறந்து போகும், யுகத்தில் துன்பமடையும் காலத்திலும், அழிய மாட்டார்கள், கோபித்து ஆரவாரம் செய்கின்ற, கடலின் கண் தோன்றி, அழிவைக் காட்டும் முகத்தை உடையவனும், தேவர்களுக்கு அழிவில்லா துன்பத்தை விளைவித்தவனுமான சூரனை, ஜெயித்து அழித்த, வேலாயுதத்தை உடைய முருகன் வசிக்கும், தினைக் காடுகளையும், யானைகளின், கூட்டங்களையும், தன்னுடன் பொருந்தி இருக்கும், குளிர்ந்த, மேகங்கள் தவழ்கின்ற பழமுதிர் சோலை மலையை, அடைந்து இடைவிடாது தியானிப்பவர்களே. அழிய மாட்டார்கள்). ..
சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்
சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்
சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்
சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே. 74
சேர ராஜனின், கொல்லி மலையையும் வெள்ளி மலையையும் போன்ற, வள்ளி மலைக்காட்டில் வாழ்கிற, இனிய மொழிகளை உடைய வள்ளி நாயகியின், காதலனே, அலையானது, கடற் கரையை, அழிக்கும்படி, மோதுகின்ற, ஒப்பற்ற உப்புக் கடலை, வற்றும்படி வேலைப் பிரயோகித்த, சாமர்த்தியனே, சூரனை, கிரவுஞ்ச கிரியுடன், அடியோடு, போர் செய்து அழியும்படி, ஜெயித்து, தேவர்களால் துதிக்கப்பட்ட, மகா வீரனே, ஆகாச கங்கையை, ஒன்றாக, சடை மேல், அடக்கி தரித்த பரமசிவன், செய்த தவத்தால் அவதாரம் செய்தவனே. ..
செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்
செய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச்
செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே
செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே. 75
முன்பிறவியில் செய்த தவத்தினால், சீரிய பஞ்சாட்சரத்தை (உபதேசம் பெற்று), துதிக்கின்றோம் இல்லை, தீமை விளையும், நரக பூமி, அழிந்து போகவும், பூவுலகம், நன்மை பெறவும், சம்பந்தராய் அவதரித்து அருளிச் செய்த தேவாரப்பாட்டினால், ஆண் உருவம் நீங்கி, சிவந்த, அந்தப் பெண்ணுருவாகிய பனை, இனிய பழத்தை, கொடுத்தது என்று சொல்லி துதிக்கவும் இல்லை (ஆதலால்), தீமைகளை செய்துகொண்டு, மூன்று மலங்களாகிய, போர்வையை தரித்துக்கோண்டு, ஏற்பட்ட துன்பத்தால், நடுக்கமுற்று பயந்து கொண்டிருக்கின்றோம். ..
செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்
செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்
செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்
செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே. 76
சிவந்த கிரவுஞ்ச கிரியையும், சங்கினங்கள், உலாவுகின்ற, சமுத்திரத்தின் கண், மா மரமாய் நின்ற சூரபத்மனை ஜெயித்த, வலிய படையாகிய, வேலாயுதக் கடவுளை, வளப்பமான சேவல் கொடியை உடைய குமாரக் கடவுளை, புகழ்ந்து பாடுவதற்கு நினைத்து, மனதைப் புதைத்து விடாதே மூடுதல், செம்மல் மூடாதே), குற்றம் நீக்கப் பட்ட, அழகிய தமிழ்ப் பாட்டுக்களை இசைக்கும் பாணனே, தெளிவாகவும் இனித்திருந்தும், கைக்கு அருகில் வாய்த்திருந்தும், பழைய பூவை, சுரும்பினங்கள் (வண்டு இனங்கள்), இச்சிக்குமோ? இந்த உண்மையை, நீ ஆராய்ந்து பார்த்து, அந்த முருகனையே நீ புகழ்ந்து பாடுவாயாக. ..
தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்
தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்
தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்
தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே. 77
தேவர்கள் கூடி நிர்மாணித்து கொடுத்த ரதத்தை, அச்சு முறியும்படி பண்ணி, திருமாலாகிய ரிஷபத்தில் ஏறி, திரிபுரங்களையும் சிரித்து அழித்த, பெருமானாகிய சிவனுக்கு, பிரணவப் பொருள் தெரியும்படி உபதேசித்த, சுவாமியே, சொல்லத் தகும், தேவர்களைத் துன்புறுத்தி சிறையிலிட்ட குற்றத்தை, தரித்திருந்த, சூரனை அழித்தவனே, என்று துதித்து பாடுங்கள், காம இச்சையால் விலைமகளிரிடம் சென்று, தவளையானது, விஷப் பாம்பின், வாயில் சிக்கிக் கொண்டது போல, அந்த பரத்தையர்களின் வலையில் சிக்கிக் கொண்டு, பேய்த் தேரையாகிய கானல் நீரை, ஊறுகின்ற ஜலமானது, பக்கத்தில் இருக்கிறது என்று நினைத்து ஓடி ஓடிப் போய் வருத்தப்படுகின்ற மக்களே. ..
திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்
திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்
திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ
திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே. 78
எப்போதும் திரிவாயாக, கடல் சூழ்ந்த, உலகை சிருஷ்டிக்குமாறு, பூர நாளில் அவதரித்த பார்வதி தேவியை, தனது உள்பாகமாகிய இடது கையால் மேருவாகிய வில்லைப் பிடிக்கச் செய்து, திரிபுரங்களின் மேல், விஷ்ணுவாகிய பாணத்தை, பிரயோகம் செய்யும் பொருட்டு, தனது பாகம் ஆகிய வலது கையால் ஏற்றிட்ட, மகா வீரனாகிய பரமசிவனின், திருச்செங்கோட்டு மலையை வாசஸ்தலமாகக் கொண்ட, அந்த சாமர்த்தியசாலியான மைந்தனே, திருமாலின் மருகனே, திருக்கை என்னும் மீன் இனங்கள் வாழும், சமுத்திரத்தில், பகைவர்களாகிய அசுரர்களின் ரத்தத்தையே புதிய உறையாகக் கொண்ட, வேலாயுதனே, என்று புகழ்ந்து கொண்டு ஏ நெஞ்சமே என்றும் திரிவாயாக). ..
செப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலை
செப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்
செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன்
செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே. 79
பேசுகின்ற மொழி, இனிய அமுதம் போன்றது, இருண்ட நிறமும், அழகும், நிலை பெற்றிருக்கும், கூந்தல், மேகம் போன்றது, தென்னங் குரும்பை போன்ற தனபாரம், சிமிழைப் போன்றது, முத்துக்கள் நிறைந்த, பழமையான சமுத்திரம் போன்றது, இவளுடைய கண், ஓளிவீசுகின்ற பல் வரிசை, மயில் இறக்கையின் அடிப்பாகம் போன்றது, நான்கு கண்களை உடைய, சிவந்த பெரிய முதலை (யின் வாயில் சிக்கிய), (கஜேந்திரனைக் காப்பாற்றும்பொருட்டு) தடாகத்திற்கு, விரைந்து சென்ற திருமாலின் மருகனும், தன்னை மிகவும் புகழ்ந்து பாடியவர்களின், பிறப்பிற்கு மூலமான வினைத்தொகையை, அடியோடு நிர் மூலமாக்கும் கந்தக் கடவுளின், மலையில் வாழும், இந்தச் சிறந்த பெண்ணிற்கு. ..
சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச்
சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்
சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்
சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே. 80
லட்சுமி நாயகனாகிய, அழகான, திருமாலே, பரம சிவனே, உங்கள் சென்னிக்கு, அழகாக அமைந்திருக்கின்றன, கங்கா ஜலமும், சரப் பாபரணமும், தேன்விளங்கும் துளசி மாலையும், என்று உலகில் சொல்லுவார்கள், தெள்ளிய அலைகளை உடைய கடலின்கண், மா மரமாய் நின்ற சூரபத்மாவின், மார்பைத் துளைக்கும்படி, உடை வாளை, பிரயோகித்த, குமாரக்கடவுளின் திருவடிகளுக்கு, அணிகலமாக அமைந்திருப்பவை, நெருங்கிய, நிலை பெற்ற, தேவர்களின், கி¡£டமணிந்த, தலைகளின் வட்ட வடிவமான வரிசைகளே. ..
சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்
சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா
சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்
சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே. 81
மயில் வாகனனே, அடியார்களிடத்தில், இன்னருளைக் காட்டும், சிறந்த வேலாயுதத்தை உடையவனே, இலஞ்சிப் பதிக்கு அதிபனே, என்னை இழி சொற்களால் பேசும், இந்த ஊர் மக்களும், மன்மதனும், முத்துக்கள் நிறைந்த சமுத்திரமும், சோலைகளும், சந்திரனும், கட்டிலும், இரவில் ஒலிக்கும் புல்லாங்குழல் ஓசையும், என்னைப் பெற்றெடுத்த இனிய மொழியை உடைய, தாயாரின், காவலும், பெரிது அல்ல, காமச்சின்னமாகிய அன்றில் பறவையும், காமனின் தேராகிய தென்றல் காற்றும், கொடிய குதிரை முகத்தை உடைய, வடவாமுகாக்னியைப் போல என்னை வருத்துகின்றன. ..
தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே. 82
வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண், கங்கா ஜலத்தை, தரித்திருக்கும் பரமசிவனின், மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய, பூமா தேவிக்கும், தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகனே, வளமையான வேதங்கள் எல்லாம், பூஜிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபனே, அக்னியைக் கொட்டிக்கோண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது. ..
தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்
தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்
தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்
தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே. 83
தாமரையில் உற்பவித்த பிரம்மனால், தலையில் எழுதப்பட்ட, அனுபவ பிராப்தம், ஒருகாலும் மாறாது, என்று அறிந்திருந்தும், என்னுடைய புத்தி, மென்மேலும் ஆசைப் படுவதினால், பயன் ஏதும் இல்லை என்று, நினைக்காததற்கு என்ன காரணம்? சேயோனே, பயனற்ற சாத்திரங்களை, அழித்துவிடும், ஆகம நூல்களை அருளியவனே, அக்னி தேவன் .. இந்தத் தீப்பொறி மிகவும் அற்பமானது, என் கரத்தால் மிகவும் சுலபமாகத் தாங்கிச் செல்வேன், .. என்று மமதையுடன் சொல்ல, தன்னுடைய சிவந்த கண்களினால், அந்த அக்னியின், நிறமும் காந்தியும், வருத்தமுறவே, கருகிப் போகும்படி கோபித்தவனே. ..
சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்
சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்
சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா
சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே. 84
ஏக வஸ்துவாகிய, சிவபெருமானிடத்தில், ஜெனித்து, வேலாயுதத்தைக் கரத்தில் பிடித்தவனே, தினைப்புனத்தைக் காத்து வந்த, வஞ்சிக் கொடி போன்ற, குறிஞ்சி நிலத்தில் வசித்து வந்த வள்ளி நாயகியின், பக்கத்தை விட்டு நீங்காத, மயில் வீரனே, இவ்வுலகத்தில் சென்று, உன் சிவந்த விழியால், எல்லாவற்றையும் அழித்து வந்த மா மரமாக நின்ற சூரபத்மனை, கோபி கோபி (கோபிப்பாயாக), என்று கூறி வேலாயுதத்தை ஏவிய, வலிமையுடைய வீரனே, மிகுந்த பொறுமை என்னும், பாணத்தின், கூர்மையினால் அடிபட்டு, கோபம் எனகிற மிருகம், விழுந்து விட்டது, உன்னுடைய அருட் பிரகாசம் என்னிடம் கலந்தவுடனே. என்ன ஆச்சரியம் ..
சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்
சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்
சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்
சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே. 85
கந்தக் கடவுளே, கடப்ப மாலையை அணிந்து, அசுரர்களின் கூட்டத்தை, தெளிந்த அலைகளை உடைய சமுத்திரத்தில், கண்கள் கோபத்தால் சிவந்து, அந்த, மா மரமாய் நின்ற சூரனுடன், போரிட்டு கொன்ற அழகிய வேலாயுதத்தை உடையவனே, அழகிய ஜடையின் மேல், இளம் பிறை, கங்கா ஜலம், சர்ப்பங்கள், இவைகள் எல்லாம் (நடனமாடும்போது) துள்ளிக் குதிக்கும்படி, சூடி இருக்கும் பரமசிவனின் குமாரனே, சுற்றமாக பற்றிக் கொள்ளும், மனை வாழ்க்கை, பெண்டிர், என்று சொல்லப்படுகின்ற, இந்தப் பிரபஞ்ச சேற்றில், மெலிந்து வருந்துகிறேன், என்னைக் காத்தருள்வாயாக. ..
சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்
சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்
சேறலைத் தாறலைக் தீர்க்குங் குமார திரியவினைச்
சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே. 86
சேற்றை, உழக்கி, ஆற்றின் அலையில், மேலே எழுந்து, வளப்பமான, பாக்கு மரத்தில், சேல் மீன்கள், மரத்தின் உச்சியில் இருக்கும், குலைகளை, மோதித் தாக்கும், செந்திற் பதியோனே, என் சித்தமானது, கெட்ட மார்க்கத்தில், போய்ச் சேருவதையும், அளவில்லாத அஞ்ஞான இருளை அடைவதையும், நீக்குகின்ற குமாரக்கடவுளே, மாறுபடும்படி, இருவினைகளால் ஏற்படும் பிரபஞ்சச் சேற்றில், என்னை உழல வைத்து, வழிப்பறி செய்பவர் போல் என் உயிரைப் போக்கிவிடத் தகுமோ? உன்னுடைய அருட் பிரகாசத்தின் உண்மைத் திறனை உணர்ந்து அதுவே பற்றுக் கோடாகக் கருதி இருக்கும் என்னை (ஆறலைக்கத் தகுமோ?). ..
திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்
திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்
திறம்பா டுவரிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்
திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே. 87
உன்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ்ந்து பேசுகின்றார், குளிர்ந்த தினைப் புனத்தில் வாழுகின்ற தேவதையே என்று புகழ்கின்றார் (இவர் யார் எனில்), என்றும் கெடுதலையையே செய்து வந்த, மா மரமாய் நின்ற சூரபத்மாவை, தன்னுடைய சுற்றத்தாருடன், உவர்ப்பை உடைய, பெரிய சமுத்திரத்தில், அழிந்து போனான், என்று தேவர்கள் எல்லாம் பேசும்படியாக, அவனை அழித்த கந்தக் கடவுள் ஆவார், செழுமையான தினைப் புனத்திலிருந்து, நீங்கிச் செல்லாத, (ஏ வள்ளி நாயகியே), பவளம் போன்ற, உன்னுடைய அதரத்தைப் பார்த்து, ஏதாவது மறு மொழி வராதா என்று, சித்தம் குலைந்து நிற்கின்றார் (இப்பேற்பட்டவர்), திருச்செந்தூராகிய தம் பதியிலும் இதே அன்பைக் காட்டினால், நம்முடைய உபசாரத்தைக் கொள்ள, இவர் தகுதி உள்ளவரே. ..
செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்
செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்பிரான்
செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்
செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே. 88
சேற்றில் உண்டாவதும், அழகுள்ளதும், ஒப்பற்றதும், ஒளி வீசுவதும், சிரேஷ்டதுமான, பிரம்மாவின் இருப்பிடமான தாமரையைப் போலவும், சிவபெருமான் அமுதைப்போல உண்ட ஆலகால விஷத்தைப் போலவும், வெற்றி நிரம்பிய, லங்காபுரியின், பிரகாசம் பொருந்திய அழகை, கோபித்து அழித்த, மேக வர்ணனாகிய ஸ்ரீராமனின், பாணத்தைப் போலவும், இந்திரனின், போர் புரியும், கையில் தரித்திருக்கும் உடை வாளைப் போலவும், கூர்மையான வேலாயுதத்தைப் போலவும், ஒத்திருக்கின்றன, இந்த முருகக் கடவுள் வீற்றிருக்கும், நிலத்தை (உழுகின்ற), கலப்பையை, மோதிக் கோபிக்கின்ற, வாளை மீன்கள், ஊறுகின்ற, செந்தில் பதியில், வசிக்கின்ற (இப்பெண்ணின்), சேல் கெண்டை மீன் போன்ற இரு கண்களுமே. ..
சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்
சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்
சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்
சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே. 89
அசோக மரத்தை இருப்பிடமாகக் கொண்ட அமணர்கள், உயர்ந்த, அந்த வலிய கழுவில் ஏறி மடியும்படி, சம்பந்தப் பிள்ளையாக அவதரித்து தேவாரம் பாடி ஜெயித்தவன், விழியானது, சேல் மீனையும் வேலாயுதத்தினையும் ஒத்த கூரிய விழியை உடைய, காட்டாற்றின் வளப்பத்தை உடைய வள்ளிமலைக் காட்டில் அவதரித்த வள்ளி நாயகியின், நாயகன், பஞ்சேந்திரியங்களின் சேஷ்டைகளை, நீக்கிய தவ சிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும் ஏற்பட்ட, ஆபத்துக்களுக்குக் காரணமான, சத்துருவாகிய சூரபத்மாவை, குற்றும்படி, இறுக்கக்கட்டிய, பிதாம்பரப் பட்டில், எல்லா மாதர்களும், தங்கள் தங்கள் உள்ளங்களை, கப்பமாக செலுத்திவிட்டனர். ..
சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்
சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா
சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்
சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே. 90
கடல் அலை போல் அலைகின்ற மனதை உடையவர் மோட்சம் அடையும் பொருட்டு, வெளி பூஜை மட்டும் செய்து வீணாக காலத்தைப் போக்குவதால் என்ன பயன்? எல்லோருக்கும் இறைவனாகிய, எலும்பு மாலை பூண்ட சிவபெருமானின், குழந்தையே, செந்திலாண்டவனே, சமுத்திரத்தின் கண், தங்கள் தங்கள் பெருமையை, கூறி ஆர்ப்பாரித்து வந்த, அசுரர்களை, அழித்த கந்தக் கடவுளே, சந்திரன், கோயில் மதில் மேல், தவழ்ந்து செல்லும் (அந்த அளவிற்கு உயர்ந்துள்ள), ஸ்ரீரங்கநாதரின், பிள்ளையாகிய பிரம்மா (ஓதும்), வேதங்கள் பூஜிக்கும், பாம்பு போன்ற செங்கோட்டு மலையில் வசிக்கும், சுவாமியே. ..
திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே. 91
சக்ராயுதத்தை, வலக் கையில், தரித்துள்ள, திருமாலால், தேடி கண்டு கொள்ள முடியாத (பரமசிவனுக்கு), பிரணவப் பொருளை உபதேசித்த, சுவாமிமலைப் பதி, வலம்புரி சங்குகள், வயல்களில், நிறைந்திருக்கும், இலஞ்சிப் பதி, திருச்செந்தூர், மேகங்கள் சூழ்ந்த சர்ப்பம் போன்ற திருச்செங்கோடு, திருவலம், வேறு பல தலங்களையும் சிருஷ்டித்து அருள் செய்த, குமாரக் கடவுளின், திருத்தணியில், மூங்கில், நந்தியாவட்டை மலரை, சூடி இருக்கும் குறிப்பு, இத்தினத்தில் நன்றாக அமைந்திருக்கிறது, தோழியே. ..
சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவட
சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்
சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்
சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே. 92
அழகாக இருக்கிறது, இந்த மங்கையின், வளை அணிந்த தோள்கள், என்று மகிழ்ந்து சொல்லி முன்பு தேவைப்பட்ட காலத்தில் என்னைப் புணர்ந்த, குமாரக் கடவுளே, வெள்ளி மலையின் வட பாரிசத்தில் வாழும் வித்யாதரர்கள், வணங்குகின்ற, தணிகை மலைக்கு அதிபனே, நீ தழுவின பெருமிதத்தால், இருமாப்புக் கொண்டு, துவளுகின்ற, கொடி போன்ற இடையை உடைய பரத்தையரை, நான் நிந்தித்துப் பேச என்ன இருக்கிறது? எனது மார்பகத்தின் திரட்ச்சியை, இந்த மாதிரியாகக் குலைக்கும்படி, மழலை மொழி பேசும் இந்த பாலகன், செய்து விட்டான், என் அருகில் வராமல், அவ்விடத்திலேயே நின்று கொள். ..
செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்
செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த
செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற்
செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே. 93
மேகத்தை, அசைக்கின்ற, அழகிய சோலைகள், சூழ்ந்த, செந்திற்பதியான், அறிகின்றானில்லை, உலகம் எங்கும், பிச்சை வாங்குவதற்காக, போக வேண்டாம், என்று சொல்லி, சிவபெருமானின் கையிலுள்ள பிரம்ம கபாலத்தில், தனது ரத்தத்தை ஒழுக விட்டவரும், துன்பத்தையும், பயத்தையும், பெருமை வாய்ந்த லங்காபுரிக்கு, உண்டாக்கியவருமாகிய, மகாவிஷ்ணுவின், கரிய நிறத்தை, போல விளங்குகின்ற, இருள் நேரத்தில், மன்மதனின் ஐந்து பாணங்களும், மிக நுட்பமான இந்தப் பெண்ணின், பிராணனாது, அழிந்து போகும்படி, வருத்தி நீக்குகிறதை, (செந்திலான் அறிகின்றானில்லை). ..
சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்
சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்
சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்
சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே. 94
சிவந்த கரும்பு வில்லை உடைய மன்மதனை, சாம்பலாகச் செய்த, நெருப்பு விழியை உடைய சிவபெருமானின், குமாரனே, எட்டு திக்குகளும் முன்போல ஸ்திரமான நிலையை அடையவும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலின், குமாரனாகிய பிரம்மா, திகைப்பை அடையவும், சூரபத்மாவின் உடலை, அழித்து, பின்பு சமுத்திரத்தில் குளித்து வந்த, வேலாயுதத்தைக் கையில் ஏந்திக் கோண்டு, எம தூதர்கள் என்னைப் பிடித்துப் போக வந்தால், பெரிய சப்தத்தைப் போட்டு கடகொண்டு, எருமை வாகனத்தில் வரும், எமனுடைய வலிமைத் திறனை, நீ கண்டித்து அடக்க வேண்டும். ..
திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்
திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்
திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்
திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே. 95
பாபமற்ற கைலாயத்தின், கதவைப் திறப்பதற்கு, திறவு கோலானவனே, கிரவுஞ்ச கிரியின் மார்பு, பிளக்கும்படி செய்து, ஆச்சரியமான விதத்தில், தாமரையில் வாழும் பிரம்மனை, ஜெயித்தவனே, தெற்கு திசையிலிருக்கும், செந்தில் பதியை விட்டு, நீங்காத, அழகிய மயில் வாகனத்தை உடையவனே, எனது உடல் அழியும் அந்தக் கடைசி காலத்தில், என்னுடைய மனதை, ஒருவழி படுத்த, அடைக்கல ஸ்தானம் எது எனில் உன்னுடைய மங்களகரமான, தண்டை அணிந்த திருத் தாள்களே. ..
திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்
திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்
திருக்கையம் போருகக் கைந் நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத்
திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே. 96
திருக்கை என்னும் மீன்கள் வாழும், கடல்களோ? தாமரைகளோ? விடமோ? மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள கூரிய பாணமோ? சிவந்த வேலாயுதமோ? கண், கூன் பாண்டியனின் முதுகில் இருந்த கூனாகிய விகாரத்தை, தாமரை போன்ற, தன் திருக்கையில் தரித்த விபூதியினால், நேர்படச் செய்தவரும், தமிழ் நூலாகிய, சிவ பக்தியை உண்டாக்கும், ருக்கு வேத சாரமாகிய தேவாரப் பாக்களை, பர தெய்வம் யார் என்கிற சந்தேகத்தைத் தீர்த்து, சம்பந்தப் பிள்ளையாராக மொழிந்தருளிய குமாரக்கடவுளின், மலையின்கண் வாழும், இந்த இளம் பெண்ணின் கண்). ..
சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே. 97
அற்பமான, சிறு உமியைக் கூட, தர்மம் செய்வதற்கு மனமில்லாமல், மரத்தைப்போல ஈவு இரக்கம் இல்லாமல் இருப்பவர்களே, அழிந்து போவதும் ஜீவனுக்கு ஒதுங்கிடமான (இந்த தேகத்தில்), தும்மல் எற்படும் போதிலாவது, முருகா உன் அடைக்கலம் என்று சொல்லுங்கள், அதன் மூலமாக நற்கதி அடைவீர்கள், சிவந்த தினைப்புனத்தில் வாழும், வள்ளி நாயகிக்கு, தன்னுடைய வம்ச பரம்பரையை எடுத்து உரைத்து அவளுடைய அன்பை வேண்டி, நின்றவனும், வில்லைத் தரித்த கண்ணப்ப நாயனார், தான் முதலில் ருசி பார்த்து நைவேத்தியமாகக் கொடுத்த மாமிசத்தை, மிகவும் களிப்புடன் உண்டவரும், மேன்மையான விதத்தில், சர்ப்பத்தைத் தரித்த சடையை உடைய சிவபெருமானின், மைந்தனாகிய கந்தக் கடவுளின், சிறிய திருவடிகளை தியானித்துக் கொண்டே (தும்மும் போது 'குமரா சரணம்' என்று சொல்லுங்கள்). ..
சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட
சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்
சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்
சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே. 98
கலப்பையையும், முதலையின், தலையை, அற்று விழும்படி, எதிர்த்து தகர்த்த, சக்ராயுதத்தை, அழகிய கையில் தரித்திருக்கும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலும், சிவாகமங்களை அருளிச் செய்த சிவபெருமானும், மன மகிழ்ச்சி கொள்ளும் ஆச்சார்ய மூர்த்தியே, செழுமை மிக்க தினை புனத்தில் வாழும், வாசனைத் திரவியம் பூசிய, மலை போன்ற மார்பகங்களை அணைத்த, கந்தக் கடவுளே, சிறந்த தமிழ் பனுவல்களில் சொல்லப்படும், சீர் முதலிய எட்டு வகைகளிலும் வல்லவனாகிய கவி சிரேஷ்டனனே, இசைப் பிரியனே, என்று துதிப்போருக்கு, தீவினைகள் கிட்ட அணுகாது. ..
தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்
தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்
தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்
தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே. 99
அக்னியானது, தனது இயல்பாகிய எரிக்கும் தன்மையை விட்டது போல், கோபத்தை அடியோடு ஒழித்த, உள்ளத்துள், சத்யம் என்கிற ஞான விளக்கை, அணைந்து விடாமல் எப்போழுதும் பிரகாசிக்கும்படி, நம்முடைய, தீ வினையாகிய, இருள், நீங்கும்படி, ஏற்றி வைத்தோம், வளமையான தினைப் புனத்தில், தீர்ந்து போகாமல் எப்போழும் பசுமையாகவே இருக்கும், தினைப்புனத்தில் வாழும், மான் போன்ற வள்ளி நாயகியின், மணாளனும், உலக பசு பாச தொந்தங்களை அடியோடு நீக்கின அடியார்களுக்கு, செழுமையான பொன் போல் பிரகாசிக்கும் மோட்ச வீட்டை, வரமாகக் கொடுக்கும், முக்திச் செல்வனான முருகப்பெருமானுக்கு (மெய்த் தீபம் எடுத்தனம்). ..
செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்
செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்
செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி
செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே. 100
ஏ மனமே, சென்று, கந்தக் கடவுள் இப்பூவுலகத்தில் சம்பந்தராக அவதரித்த சீர்காழிப் பதியை, துதிப்பாயாக (அதன்), அந்தக் குமரக் கடவுளின் தெய்வீக நாயகியாகிய தேவசேனை, ஊர்ந்து செல்லும், மேகங்கள், நல்ல மழையைப் பொழிந்து, மிகவும் இகழ்ச்சிக்கிடமான, நம்முடைய வறுமை என்கிற நிலையை, போக்கி விடும், கொடிய எமன், நம் மேல் செலுத்தும் நரக தண்டனையை, அவனுடைய கை வேலாயுதமானது, போக்கி விடும், பக்திப் பயிரைக் காத்து வளர்த்த வள்ளி நாயகியின், பெரும் பேறாக விளங்கும், மணாளனாகிய முருகப் பெருமான், குக சாயுச்சியமாகிய தனது சரணங்களைக் கொடுத்து அருளுவான். ..
கந்தர் அந்தாதி முற்றும்.


செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்புசெருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே. 46
போர் புரியும் திறமும், மத்தகமும், கோபமும் உடைய, அயிராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்ட, தேவசேனையின், மணம் வீசுவதும் இறுமாப்பும், பூந்தாதுகளும் உடைய, தன பாரத்தில், மூழ்கும், கடப்ப மாலை அணிந்த முருகனே, இவ்வுலகத்தில் (வினையால் ஏற்படும்), பிற சமய நூல்களின் கர்வத்தை, வெல்லுகின்ற, வேதாகம நூல்களை, சிருஷ்டித்தவனே, தாமரை மலர்களில் உதித்த பிரம்மாக்களும், அழிந்து, தேவர்களின் சா£ரத்தை விடுகின்ற, உகாந்த காலத்திலும், நான் நித்யத்வம் அடையும் பொருட்டு, இப்பிரபஞ்சத்தில் முடிவான பொருள் எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும். ..

திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோதிடம்படு கத்துந் திரித்தம்பு வாலி யுரத்தும்பத்துத்திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்மதிடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே. 47
உறுதிநிலை அழியும், யுகாந்த காலத்திலும், அழிவில்லாமல் இருப்பீர்கள், பூர்வ வினையால் நமக்கு ஏற்படும், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் ஈஷனாத்ரயங்களையும் (மண், பெண், பொன்), ஓயாமல் சோதிட நூல்களை பார்த்து, சதா பிதற்றுவதையும், மாற்றி, தன்பாணங்களை, வாலியின் மார்பின் மீதும், இராவணனுடைய உறுதியான பத்து தலைகளின் மீதும், பிரயோகித்த ஸ்ரீராமனின், மருமகனே, பகை கொண்ட, முப்புரங்களையும், தான் தோன்றிய இடத்திலேயே, விழுந்து அழியும்படி, உயர்ந்த மேருமலையை, வளைத்த சிவபெருமானின், மைந்தனே, என்று துதியுங்கள். ..

சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே. 48
அழகுடனும், மிகுந்த காதலுடனும், கானாறு பாய்கின்ற, வள்ளிக் காட்டில் வாழ்ந்த, வள்ளியுடன், காந்தர்வ மணம் புரிந்த, செந்தில் குமரக்கடவுளே, வலிமையில் மேம்பட்ட, பகைமை உடைய, இராக்கதர்களை அழித்தவனே, செந்நிறமான தெய்வமே, என்று துதித்தால், செவ்வாய், புதன், சந்திரன், பிரகஸ்பதி, வியாழன், ஆதித்தன், அவனுடைய பிள்ளையாகிய சனீஸ்வரன், (இவர்களின் வக்கிரத்தால் ஏற்படும்) நமது சித்தத்தை மாறுபடச் செய்யும், தீமை இல்லாது போகும். ..

சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே. 49
தனது ஐந்து சிரங்களில் ஒன்றை இழந்தவரும், மற்ற தேவர்களைக் காட்டிலும் நிலையான வாழ்க்கையை உடையவருமாகிய, ஆதி காடவுளுமாகி பிரம்மனும் அவனின் பிதாவாகிய திருமாலும், அடிமுடி தேடி கண்டு பிடிக்க முடியாத பரமசிவனின், குமாரனே, நல்ல முறையில் ஒலி செய்யும், சதங்கை, சிரேஷ்டமான, மணிகள், வெட்சி மாலை (இவைகளை எல்லாம் அணிந்த), அழகிய உனது திருவடிகளில், சிவந்த என் இருதயம், தியானித்து ஒருமைப்படும்ப, எனக்கு அருள வேண்டும், தற்போது, முன் செய்த தீ வினையாகிய, சேற்றில், கரை சேறுவதற்கு வழி தெரியாமல், உழலுகின்ற, இச் ஜீவ வாழ்க்கை, பொய்யானது. ..

சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவாசித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்விசித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்திசித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே. 50
பொய்யாக உள்ள, நாம் காண்கின்ற கனவைப் போன்றது, இந்த பிரபஞ்ச வாழ்க்கை, என்ற மன உறுதியை நல்கும், தவ சித்திகளின் வலிமையை (நாடாமல்), மன்மதனுடைய காம நூல் வழியில், கெட்டுப்போன எனக்கு, இனிமேலாவது, வெட்சி மாலை அணிந்த, சிறந்த, அற்புதமான அழகுடைய, பெருத்த தனபாரமுடைய, மயில் போன்ற வள்ளியின், மணாளனே, இந்த பிறப்பாகிய பந்தம் நீங்க, மோட்சப் பேறானது பரிபூரணமாக கிட்டும்படி, எனக்கு அருள வேண்டும் ..

சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புராசிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வாசிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வாசிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே. 51
கொண்டையையும், தூவியையும் உடைய, பெரிய, மயிலை வாகனமாக உடையவனே, கிரவுஞ்ச மலையையும், முழங்குகின்ற, சமுத்திரத்தினிடத்தில், ஒழுங்கான, மேல் கிளைகளை உடைய, மா மரமாக நின்ற சூரபத்மனையும், இருளுக்கு இடமாகிய மாயையும், விலக்கி, போர் செய்து, நான்கு முகத்தை உடைய பிரம்மன், பிரணவப் பொருள் தெரியாமல் வேதத்தைக் கற்ற குற்றத்திற்காக, அவனைக் கோபித்து, பெரும் மகிழ்ச்சியை, அழகுக்கு இருப்பிடமான, தேவ லோகத்தில், விளைவித்தவனே, கொடிய போரில் வல்லவனாகிய (பாண்டிய மன்னனின்), குமாரியின்*, குதிரை முகத்தை, தீர்த்தவனே, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, மயிலைப் போன்ற அழகுடைய தேவயானையின், கலவி இன்பத்தை விட, நக்கீரர் சொல்லிய திருமுருகாற்றுப்படை, உனக்கு இனிமையாக இருந்தது போலும். ..

தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத்தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல்தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே. 52
தித்தி தொந்தி என்கிற தாள வரிசைகளுக்கு ஏற்ப, நடனம் புரிகின்ற, சிவபெருமானின், செவிகளாகிய, வரிசையான புலனிடத்து, நுழையும்படி, பிரணவப்பொருளை, அச்சிவனின் கலக்கம் ஒழியும்படி, உபதேசம் செய்த, குமாரனே, தேன் பண்டங்களின் இனிமையினால், இனிப்புற்று இருக்கும், வயிற்றை உடைய (கணபதிக்கு), தம்பியே, கருப்பையில் உண்டாகிற ஜீவனுக்கும், அழிந்து போகிற, தோலாகிய இந்தப் பைக்கும், சம்பந்தம் ஏற்பட்டு பிறப்பு உண்டாவதற்கு, காரணம், நான் முப்பிறவியில் செய்த, கருமங்களாகிய, கொடிய தளைகள் தானோ? ..

தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர்தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான்தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே. 53
கரத்தில் அக்னியையும், தோளில் வில்வ மாலையையும், சிரசின்கண் கங்கா நதியையும், புனைந்திருக்கும் சிவபெருமானின், பாலகனே, இருண்ட, (ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர்) இவைகளால் உண்டாகிய சமுத்திரம், வரண்டு போகும்படி, வில் வித்தையை காண்பித்த, வல்லவராகிய*, ராமச்சந்திர முர்த்தியின் மருகனே, அறிவதற்கு அரிதாகிய, பெரிய தீவுகளிலும், வேறு பல இடங்களிலும் பஞ்சேந்திரியங்களினால், இச்சையினால் உந்தப்பட்டு, பல புலன் நுகர்ச்சிக்காக, அலைந்து திரிகின்ற, புத்தியின், பலத்த தொடர்ச்சியை, நீ ஒழிக்க வேண்டும், எமன் தொடர்ந்து என்னைப் பிடிக்காமல், உனது திருவடியில் நான் நிலைபெற வேண்டும். ..

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதாதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தாதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்துதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே. 54
திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். ..

தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே. 55
கொடியனவற்றையே கற்கின்ற ஏ மனமே, தீமை மாத்திரமோ இறப்பும் ஒழிந்து போகும், பிறவியும் நீங்கும் (ஆதலால்), குற்றத்திற்கு, இடம் ஆகிய, கடலின் கண், அசுர சேனை அனைத்தையும், தகித்த, கை வேலை உடையவனே, கருணா மூர்த்தியே, வேள்வி முடியும் காலத்தில் வேதியர்கள் எல்லோரும் திரண்டு கொண்டு ஒரே மாதிரியாகிய உச்ச குரலில் சுப்ரமண்யோம் என்கிற மந்திரத்தை முழக்கி வணங்குகின்ற, முத்துக்குமரனே, இந்த, வேள்வியில் கொடுக்கப்படும் அவிர் பாகத்திற்கு, உரிமையை உடையவனே, குறிஞ்சிக் கடவுளே, என்று துதிப்பாயாக, உன் சித்தம் அழகு பெறவே. ..

தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னத்தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே. 56
தென்னஞ் சோலைகளும், மேகங்கள், கவிந்து கொண்டிருக்கும், திருத்தணி, பரங்குன்றம், திருச்செங்கோடு என்னும் மூன்று மலைகளுக்கு அதிபனே, கையில் சூலத்தைப் பிடித்திருக்கும், தென் திசைக்கு அதிபனாகிய எமராஜனின், உடல், அழியும்படி, காலால் நீட்டி உதைத்த பரமசிவனின், குமாரனே, முன்னொரு காலத்தில், பின் முதுகில் கூனுடைய, பாண்டியனின் உடல் கூனை, நன்மையே பயக்கும் விபூதியினால், சரி செய்து நிமிர்த்தியது போல, இப்போது, வனப்புடைய, மன்மதனின், அழகிய, கையில் பிடித்த கரும்பு வில்லின், வளைவையும், நீக்கி, அந்த மன்மதன் என்மேல் பாணத்தை எய்தாதபடி நீ அணிந்திருக்கும் மாலையை தந்தருள வேண்டும். ..

தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவேதீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே. 57
கிரணங்களை உடைய சூரியன், சஞ்சாரஞ் செய்யும், அழகிய ஆகாச வெளியையும், கடந்து சென்று, தன் பிள்ளையாகிய பிரம்மனும், பயந்து வணங்கும்படி, திரிவிக்ரமவதாரத்தில், பாதத்தை ஊர்த்தவ தாண்டவமாய் எடுத்த மகாவிஷ்ணுவும், கடலும், அலறி அபயமிட, மாமரமாகிய சூரனால் உண்டான துன்பத்தையும், தீமையையும், முழுவதும், நீங்கும்படி ஒழித்து, அடியா¡ர் கூட்டம், செழிக்கும்படி, விண் உலகத்தையையும், காப்பாற்று என்று, சிரசின்கண், கங்கா ஜலத்தை சூடியிருக்கும் பரமசிவன், சொல்ல, அவரை வணங்கி அந்த வேலையை செய்து முடித்த, கூரிய வேலாயுதத்தை, கையில் ஏந்தி இருக்கும் முருகப் பெருமானே, குருவாகி அந்த சிவனுக்கு, பிரணவப் பொருளை உபதேசித்த நற்குணக் குன்றனே. ..

சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநிசீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சுசீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீசீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே. 58
கொடைக் குணத்திலும், பெருமையிலும், மேம்பட்ட, குறை இல்லாதவனே, சமுத்திரத்தில், கோபமுடைய, அசுரராகிய இருள் கூட்டத்தை, அழித்தவனே, முற்றமான கடர்க்கரையின்கண், முத்துக்கள் நிறைந்திருக்கின்ற, செந்திற் பதியானே, மயில் வாகனமுடைய, அழகிய பரிசுத்த மூர்த்தியே பசியாகிய உதரத்தீயினால், ஏற்படும், துன்பத்தை அடைந்து, மயக்கமுற்றிருக்கிறேன், இது மிகவும் இகழ்ச்சியான, முழுவதும் இழிவான நிலை (அதலால்), இப்படிப்பட்ட ஜனனத்திலே, இனி மேலும், என்னைக் கொண்டு போய்த் தள்ளுவது, நன்று ஆகாது. ..

சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளிசேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே. 59
நெருங்கி இருக்கும் தாமரைகளும், அசைகின்ற, ஜலத்தின் கண், நீலோற்பல புஷ்பங்கள் மலரும், திருத்தணி மலையில் வாழும், தெய்வீக சக்தியாகிய, வள்ளி நாயகனே, தும்மல் ஏற்பட்டது, இறந்து விட்டார், என்று, பலரும் ஆச்சரியத்துடன் சொல்வதற்கு முன், உஷ்ணம், சிலேத்துமம், மயக்கம், ஜாக்ரத், சொப்னம், சுசுத்தி, துரியம், துரியாதீதம் என்ற ஐந்து அவஸ்தைகளும், நிரம்பி இருக்கும், இந்த உடல், அழிந்து போவதற்கு முன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் இவர்கள், போற்றி வணங்கும், சிறந்த உன் திருவடித் தாமரையில் என்னைச் சேர்த்தருள வேண்டும்). ..

செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச்செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே. 60
தனது மனைவியைக் கூட, பகைவர்கள் அபகரித்துக் கொள்ளும் முன்பு, தனவந்தர்களுக்கு, நடுநிலைமையுடன், மற்றவர்களுக்கு தானம் கொடுத்து கொடுத்து, சிவந்து போன, கை வாய்க்கப் பெறாவிடில், அவர்கள் எப்படி நல்ல கதி அடைவார்கள், தெய்வீகமாகிய கணபதி, புகழ்ந்து பேசிய, தம்பியே, தில்லை நடராஜராகிய, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில், வெள்ளி, செம்பு, தங்கமான, மதிலை உடைய திரிபுரத்தை, ஜெயித்த பரமசிவனின், மைந்தனே, தேவயானையின் தலைவனே. ..

திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீதிக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே. 61
தெய்வயானையின் மணாளனே, சமுத்திரத்தின் கண், திருச்செந்தூரில் விளங்கும், முத்தின் கொழுந்தொளி போன்றவனே, முன்னொரு காலத்தில், அஷ்ட திக்கு பாலர்களும், ஆட்டை நிலையான வாகனமாக உடையவனும், சிவபெருமானிடத்தில் சென்று, அரனே, உமாதேவியை இடப்பாகத்தில் வைத்திருப்பவனே, திதியின் பிள்ளைகளான சூரபத்மாதி அசுரர்களால், எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, எப்படித் தாங்கி பிழைப்போம்? என்று முறையிடுகையில், அவர் உனக்கு அளித்த, அடியவரின் இடரை நீக்குவதையே நெறியாகக் கொண்ட, கை வேலாயுதத்தை, நீ அவர்கள் மேல் எய்தி அவர்களை அழித்திராவிடில், அந்த தேவர்கள் எப்படி பிழைத்திருப்பார்கள்? ..

திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னேதிலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே. 62
தேவயானையின் பல்லாகிய, இனிய, முத்தானது, செலுத்துகின்றதும், தன்னால் நுகரப்பட்டதும் ஆன, அதரபானமாகிய அமுதத்தால், மனம் குழைந்த, உள்ளம் உடையவனே, கண்ணுக்குத் தெரியாமல் எள்ளில் எண்ணெய் விரவி இருந்தும் அது எள்ளை அரைக்கும்போதுதான் வெளி வருவது போல, சராசலமெங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு ஆனால் பக்தியினால் வெளிப்படும் போது மட்டும் நேரே தெரிகின்ற, செந்திலாண்டவனே, ஆயுத வகையில் முதன்மை ஸ்தானத்தை வகிக்கும் வேலாயுதத்தை ஏந்தியவனே, கந்தக்கடவுளே, என்று துதித்து ஓலமிடாமல், உன்னிடம் பக்தி இல்லாத மாற்றார்கள் போல், முற்பிறவியில் சம்பாதிக்கப்பட்ட, பெரிய தீவினைகளை நான் அடைந்து, வருந்தி உழல்வது, என்ன காரணம்? ..

தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநிதியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே. 63
சங்க நிதி பதுமநிதி இவைகளும், கற்பக விருட்சமும் ஆக விளங்கும், செல்வத்தினை உடைய பொன்னுலகு, முன்பு அழியாமல் பிழைக்கும்படி, நிலை பெற்ற கிரவுஞ்ச கிரியை, போரில் வென்று அழித்த, முழு வீரனே, சற்றும் கலக்கமில்லாத, ஐம்புலங்களை உடைய, இந்த தேகம், அந்திம காலத்தில் அக்கினியில் வெந்து போவதும், எருமை வாகனமுடைய எமதூதன் (என்னை எமபுரத்திற்கு கொண்டு சென்று) வாயைத் திற, சற்றும் தவம் செய்யாத பாவியே, (கருணை இல்லாமல் பிராணிகளை கொன்று சாப்பிட்ட பாவத்திற்காக) தீப்பொறிகளைச் சாப்பிடு, என்று கூறப்போவது, உண்மை ஆதலால், பிரம லிபி என் தலையில் எழுதப்பட்டு, பிரம்மன் என்னை மீண்டும் சிரிஷ்டிக்காதபடி என்னைக் காத்தருள வேண்டும். ..

சேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளிசேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே. 64

தெய்வீகம் பொருந்திய வள்ளியின், (கருணையினால்) சிவந்த, இதய தாமரை போல் விளங்கும், முகார விந்தம் உடையவனே, கிரவுஞ்ச மலையை அழித்த ஒப்பற்ற வீரனே, தலைவனே, பழனிப் பதியானே, ரிஷப வாகனத்தின் மேல், நிலைபெற்று வரும், குற்றமற்ற பரிசுத்தரான சிவபெருமானுக்கு, முன்னொரு காலத்தில், நீ பிரணவ உபதேசத்தை செய்ய, வேதம் ஓதுவதில் வல்லமையும், அன்ன வாகனத்தையும் உடைய, பிரமனுக்கு, எதனால், வெட்கத்தை அடைந்து, பொருள் தெரியாமல் மயங்கி நின்றது? ..

திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணியதிகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுயதிகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவிதிகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே. 65

என் உயிர் போன்ற இந்தப் பெண், விழிகளில் நீர் சொரிந்து கொண்டு, மயங்கி நிற்கிறாள், செந்திலாண்டவன், தன்னுடைய திருத்தோள்களை, எனக்குக் கொடுத்து அருள மாட்டார் என்கிறாள், சந்திரனை, தினமும், வெறுத்து பேசுகிறாள், தான் இப்படி அரற்றி வருந்துவதைப் பார்த்து, மன்னித்து ரட்சிக்க மாட்டேன் என்கிறார் என்று சொல்லுகிறாள், பாண்டிய மன்னனின், சுர வருத்தத்தின், கொடுமை நீங்க, தேவாரப் பதிகத்தைப் பாடி அருளிய, சம்பந்தப் பிள்ளை என்று கூறுகிறாள் (ஆதலால்), பிரமனின், கையினால் சிருஷ்டிக்கப்படுகின்ற உடலுக்குள், இந்த ஆன்மா சேர்க்கபட்டு மீண்டும் பிறவி அடையாதபடி, ஆண்டு கொள்ள வேண்டும், என்னுடைய சுவாமியே அழகிய குமாரக்கடவுளே. ..

சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவசீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசுசீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சுசீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே. 66

அலைவீசும், கடலின் கண், பெரிய போர் வீரனான, கொடிய, சூரபத்மனை, ஜெயித்தவனே, தோள்களை, விரும்பி அணைப்பதில் பிரியமுள்ளவளும், நெற்றியில் திலகம் தீட்டியவளுமான, கொடி போன்ற வள்ளிநாயகிக்கு உரிய, அலங்காரமுடையவனே, சிவகுமாரனே, பரிசுத்தமான அக்கினியால், பொறி ரூபத்தில் ஏந்தப் பட்டவனே, ஐராவதத்தையும், மேகத்தையும், வாகனமாக உடைய இந்திரனின், சிறையை மீட்டுக் கொடுத்த, பரிசுத்த மூத்தியே, வலிய, மயக்கத்தைத் தரும், இருவினைகளாகிய மலையை, மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிதற அடித்து விடு. ..

சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரராசிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே. 67

மயில் வாகனத்தை, தாவிச் செலுத்தும்படி, ஆர்பாரிக்கும், கடலின் கண், செலுத்தி, அந்த வீரம் வாய்ந்த, திதி தேவியின் பிள்ளைகளாகிய அசுர கூட்டங்களை, கோபித்து அழித்தவனே, தந்தம் உடைய, பாம்பு போன்ற நாகாசல வேலவனே, தெய்வீகமாகிய, குறப்பெண்ணாகிய வள்ளி தேவியை, பார்த்து, பணிவுடன், உன் மலர் போன்ற கைகளை, தலைக்கு மேல் கூப்பிக் கோண்டு, ஏ பெண்ணே உன்னுடைய இடுப்பு, புகழ்ந்து கூறப்படும், வஞ்சிக் கொடி போன்ற உருவம் உடையது, உன் விழி, நிலைபெற்ற, ஆபத்துக்களை எல்லாம், அகற்றி என்னுடைய ஆசை அக்கினியைத் தணிப்பதால், நான் செய்த தவத்தின் பயனே ஆகும், என்றெல்லாம் புகழ்ந்துரைத்த தலைவனே. ..

சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபதசேகர வாரண மேவும் புயாசல தீ வினையின்சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே. 68

அடியவர்களை பின் வாங்குதல் இல்லாத, போர் செய்வதில் வல்லமை உள்ள வேலாயுத மூர்த்தியே, வள்ளி நாயகியின், தாள்களை சிரத்தில் ஏந்தியவனே, தேவயானை, தழுவும், மலை போன்ற தோள்களை உடையவனே, (அடியார்களின்) கொடிய வினையின், வஜ்ரம் போன்ற திடத் தன்மையை, அரம் போன்று பொடி செய்பவனே, வேதங்கள் பூஜிக்கும் செங்கோட்டு மலைக்கு அதிபனே, தினந்தோரும், முக்கண்ணுடைய சிவபெருமான், மால் விடையாகிய திருமாலின், கையிலிருக்கும், பாஞ்ச சன்யம் என்ற சங்கிற்கும், உன் கையில் இருக்கும், கொடியாகிய கோழிக்கும், (உன்னைச் சேர்ந்திருக்கும் இரவு காலம் நீடிக்காமல் பொழுது புலர்வதை தொனி செய்து காட்டும் சங்கும், அதே போல் சேவல் காலைப் பொழுதை வரவழைக்க கூவுவதாலும்) இரண்டிற்கும் உயிர் ஒன்றாக இருக்குமோ? ..

சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள்சீவன சத்துரு செய்யாண் மருகவெ னாதிடையேசீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே. 69

பிராணனுக்கு, (நித்யத் தன்மையும் மாறுபடாத தன்மையும் இல்லாததால்) அசத்தாகும் (ஆதலால் பிராணனும் உடலும் சேர்ந்திருக்கும் பொழுதே), நெஞ்சை உருகவைக்கும் பக்தியினால், (சத்து எது என்று தெரிந்து கொண்டு) இந்த ஜென்மம் ஒழியும்படி, சகல ஜீவன்களுக்கும் மூலகாரணராகிய சிவபெருமானால், ஆட்டு வாகனமுடைய, உஷ்ணமுடைய, உடம்பை உடைய அக்னி தேவனின், கரத்தில் கொடுக்கப்பட்ட (பொறியாய் இருக்கும் போது), குமாரக்கடவுளே, ஒளிவீசும், தாமரையை இருப்பிடமாகக் கொண்ட, சிவந்த நிறமுடைய மகாலட்சுமிக்கு, மருகனே, என்று சித்தத்தில் வைத்து நிலை பெறச் செய்து தியானிக்காமல், ஒரு பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே, ஜீவனானது (சத்தாகிய பரமாத்மாவையும் அசத்தாகிய ஜீவாத்மாவையும் அறிந்து கொள்ளாமல்), ஜடமாகிய, மலபாண்டமாகிய தேகத்தை, அடைந்து, அதற்கு ஏற்கத் தகாத பெரிய பழியை, என் இதயம் எண்ணிக்கோண்டு, அவமே காலத்தைப் போக்குகிறது. ..

சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சாசிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே. 70

கோலம் தீட்டிய, இந்த அழகு, நிறைந்திருக்கின்ற, புள்ளியை உடைய முகம் பொருந்திய, தேய்வீகமாகிய ஐராவதத்தினிடை வளர்ந்தவளும், அற்புதமான அழகை உடையவளும் ஆகிய, கொடி போன்ற தேவயானைக்கு இன்பம் பயப்பவனே, செந்திற்பதியானே, கிரவுஞ்ச மலையை, சிதற அடித்த, வலிமையை உடையவனே, ஞானா மூர்த்தியே, (முதலில் இவன் மோட்சத்திற்கு தகுதி உள்ளவனா என ஆராய்ச்சி செய்துவிட்ட பிறகு இவன் தக்கவன் என அறிந்தவுடன் தாய் போல் அருள் செய்து) முத்தி வீட்டை அடையச் செய்தவனே (ஆய் .. ஆராய்ச்சி, ஆய் .. தாய்). கடல் ஓயாமல் முழங்குகிறது, இந்த இடத்தில் பிறைச் சந்திரனும் சூரியனின் காந்தி போல் தகிக்கிறது. ..

திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிருதிங்களு மாசுண மாக்கும் பதாம்புயன் செந்திலன்னாள்திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்திங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே. 71

சந்திரனையும், பாம்பையும், தரித்திருக்கும் சிவபெருமானின், குமாரனும், என் பத்து மாதமென்னும் கால அளவையில் சேர்ந்து அன்னையின் கருப்பையில் படும் பிறவித் துன்பத்தையும், மிகவும் நீறாக்கும், (சுணம் சுண்ணாம்பு), தாமரை போன்ற தாள்களை உடைய குமாரக்கடவுளின், செந்தில் பதியைப் போல, ஒத்து விளங்குகின்ற (இந்த மங்கையின்), தீமைகளை, உண்டாக்கும், ஜீவ ராசிகள் செய்யும் பாவங்களாகிய குற்றங்களை, ஆராய்ந்து பார்க்கும், எமனைப் போல, கண்ணையும், செழிப்பான கரும்பும், இனிய, தேனும், ஓப்பு இல்லாததால் குற்றம் வரும்படி செய்கின்ற, இனிமையான மொழியும், உன்னால் மடல் எழுத முடிந்தால், நன்மையாகும். ..

தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே. 72

ஏ நான்முகனே, இனிமேல், உன்னாலே, என் தலை மேல் விதியாகிய லிபியை, எழுத வேண்டிய வேலை கிடையாது, ரத்தம் முதலிய கறைகள் சேர்ந்த, இந்த ஜனனத்தில், அசூசி அடைந்திருக்கின்ற, மற்ற ஜீவன்களைப் போல, நான் ஆக மாட்டேன், (ஏனெனில்) எட்டு திசைகளிலும், தன்னுடைய நான்கு கொம்புகளையும், கூர்மை செய்கின்றதும், அந்த முகப் படங்களையும், அதிலுள்ள வித்திர எழுத்துக்களையும் கொண்ட, முகத்தை உடைய மலை போன்ற ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின், சிறையை மீட்டின கந்தக் கடவுளின், திருவடிகளை அடைய, என்றும் அழிவில்லாத இந்த தெய்வத்தையே, உள்ளத்தில் தியானித்திருக்கிறேன். ..

திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவதிசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போதிசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே. 73

நான்கு திசைகளிலும் முகத்தையுடைய, வேதத் தலைவனாகிய பிரம்மனும், அவரது தந்தையாகிய திருமாலும், சூரியனும், சந்திரனும், தங்கள் தங்கள், ஆயுள் முடிந்து, இறந்து போகும், யுகத்தில் துன்பமடையும் காலத்திலும், அழிய மாட்டார்கள், கோபித்து ஆரவாரம் செய்கின்ற, கடலின் கண் தோன்றி, அழிவைக் காட்டும் முகத்தை உடையவனும், தேவர்களுக்கு அழிவில்லா துன்பத்தை விளைவித்தவனுமான சூரனை, ஜெயித்து அழித்த, வேலாயுதத்தை உடைய முருகன் வசிக்கும், தினைக் காடுகளையும், யானைகளின், கூட்டங்களையும், தன்னுடன் பொருந்தி இருக்கும், குளிர்ந்த, மேகங்கள் தவழ்கின்ற பழமுதிர் சோலை மலையை, அடைந்து இடைவிடாது தியானிப்பவர்களே. அழிய மாட்டார்கள்). ..

சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே. 74

சேர ராஜனின், கொல்லி மலையையும் வெள்ளி மலையையும் போன்ற, வள்ளி மலைக்காட்டில் வாழ்கிற, இனிய மொழிகளை உடைய வள்ளி நாயகியின், காதலனே, அலையானது, கடற் கரையை, அழிக்கும்படி, மோதுகின்ற, ஒப்பற்ற உப்புக் கடலை, வற்றும்படி வேலைப் பிரயோகித்த, சாமர்த்தியனே, சூரனை, கிரவுஞ்ச கிரியுடன், அடியோடு, போர் செய்து அழியும்படி, ஜெயித்து, தேவர்களால் துதிக்கப்பட்ட, மகா வீரனே, ஆகாச கங்கையை, ஒன்றாக, சடை மேல், அடக்கி தரித்த பரமசிவன், செய்த தவத்தால் அவதாரம் செய்தவனே. ..

செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்செய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச்செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையேசெய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே. 75

முன்பிறவியில் செய்த தவத்தினால், சீரிய பஞ்சாட்சரத்தை (உபதேசம் பெற்று), துதிக்கின்றோம் இல்லை, தீமை விளையும், நரக பூமி, அழிந்து போகவும், பூவுலகம், நன்மை பெறவும், சம்பந்தராய் அவதரித்து அருளிச் செய்த தேவாரப்பாட்டினால், ஆண் உருவம் நீங்கி, சிவந்த, அந்தப் பெண்ணுருவாகிய பனை, இனிய பழத்தை, கொடுத்தது என்று சொல்லி துதிக்கவும் இல்லை (ஆதலால்), தீமைகளை செய்துகொண்டு, மூன்று மலங்களாகிய, போர்வையை தரித்துக்கோண்டு, ஏற்பட்ட துன்பத்தால், நடுக்கமுற்று பயந்து கொண்டிருக்கின்றோம். ..

செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே. 76

சிவந்த கிரவுஞ்ச கிரியையும், சங்கினங்கள், உலாவுகின்ற, சமுத்திரத்தின் கண், மா மரமாய் நின்ற சூரபத்மனை ஜெயித்த, வலிய படையாகிய, வேலாயுதக் கடவுளை, வளப்பமான சேவல் கொடியை உடைய குமாரக் கடவுளை, புகழ்ந்து பாடுவதற்கு நினைத்து, மனதைப் புதைத்து விடாதே மூடுதல், செம்மல் மூடாதே), குற்றம் நீக்கப் பட்ட, அழகிய தமிழ்ப் பாட்டுக்களை இசைக்கும் பாணனே, தெளிவாகவும் இனித்திருந்தும், கைக்கு அருகில் வாய்த்திருந்தும், பழைய பூவை, சுரும்பினங்கள் (வண்டு இனங்கள்), இச்சிக்குமோ? இந்த உண்மையை, நீ ஆராய்ந்து பார்த்து, அந்த முருகனையே நீ புகழ்ந்து பாடுவாயாக. ..

தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே. 77

தேவர்கள் கூடி நிர்மாணித்து கொடுத்த ரதத்தை, அச்சு முறியும்படி பண்ணி, திருமாலாகிய ரிஷபத்தில் ஏறி, திரிபுரங்களையும் சிரித்து அழித்த, பெருமானாகிய சிவனுக்கு, பிரணவப் பொருள் தெரியும்படி உபதேசித்த, சுவாமியே, சொல்லத் தகும், தேவர்களைத் துன்புறுத்தி சிறையிலிட்ட குற்றத்தை, தரித்திருந்த, சூரனை அழித்தவனே, என்று துதித்து பாடுங்கள், காம இச்சையால் விலைமகளிரிடம் சென்று, தவளையானது, விஷப் பாம்பின், வாயில் சிக்கிக் கொண்டது போல, அந்த பரத்தையர்களின் வலையில் சிக்கிக் கொண்டு, பேய்த் தேரையாகிய கானல் நீரை, ஊறுகின்ற ஜலமானது, பக்கத்தில் இருக்கிறது என்று நினைத்து ஓடி ஓடிப் போய் வருத்தப்படுகின்ற மக்களே. ..

திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போதிரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே. 78

எப்போதும் திரிவாயாக, கடல் சூழ்ந்த, உலகை சிருஷ்டிக்குமாறு, பூர நாளில் அவதரித்த பார்வதி தேவியை, தனது உள்பாகமாகிய இடது கையால் மேருவாகிய வில்லைப் பிடிக்கச் செய்து, திரிபுரங்களின் மேல், விஷ்ணுவாகிய பாணத்தை, பிரயோகம் செய்யும் பொருட்டு, தனது பாகம் ஆகிய வலது கையால் ஏற்றிட்ட, மகா வீரனாகிய பரமசிவனின், திருச்செங்கோட்டு மலையை வாசஸ்தலமாகக் கொண்ட, அந்த சாமர்த்தியசாலியான மைந்தனே, திருமாலின் மருகனே, திருக்கை என்னும் மீன் இனங்கள் வாழும், சமுத்திரத்தில், பகைவர்களாகிய அசுரர்களின் ரத்தத்தையே புதிய உறையாகக் கொண்ட, வேலாயுதனே, என்று புகழ்ந்து கொண்டு ஏ நெஞ்சமே என்றும் திரிவாயாக). ..

செப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலைசெப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன்செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே. 79

பேசுகின்ற மொழி, இனிய அமுதம் போன்றது, இருண்ட நிறமும், அழகும், நிலை பெற்றிருக்கும், கூந்தல், மேகம் போன்றது, தென்னங் குரும்பை போன்ற தனபாரம், சிமிழைப் போன்றது, முத்துக்கள் நிறைந்த, பழமையான சமுத்திரம் போன்றது, இவளுடைய கண், ஓளிவீசுகின்ற பல் வரிசை, மயில் இறக்கையின் அடிப்பாகம் போன்றது, நான்கு கண்களை உடைய, சிவந்த பெரிய முதலை (யின் வாயில் சிக்கிய), (கஜேந்திரனைக் காப்பாற்றும்பொருட்டு) தடாகத்திற்கு, விரைந்து சென்ற திருமாலின் மருகனும், தன்னை மிகவும் புகழ்ந்து பாடியவர்களின், பிறப்பிற்கு மூலமான வினைத்தொகையை, அடியோடு நிர் மூலமாக்கும் கந்தக் கடவுளின், மலையில் வாழும், இந்தச் சிறந்த பெண்ணிற்கு. ..

சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச்சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே. 80

லட்சுமி நாயகனாகிய, அழகான, திருமாலே, பரம சிவனே, உங்கள் சென்னிக்கு, அழகாக அமைந்திருக்கின்றன, கங்கா ஜலமும், சரப் பாபரணமும், தேன்விளங்கும் துளசி மாலையும், என்று உலகில் சொல்லுவார்கள், தெள்ளிய அலைகளை உடைய கடலின்கண், மா மரமாய் நின்ற சூரபத்மாவின், மார்பைத் துளைக்கும்படி, உடை வாளை, பிரயோகித்த, குமாரக்கடவுளின் திருவடிகளுக்கு, அணிகலமாக அமைந்திருப்பவை, நெருங்கிய, நிலை பெற்ற, தேவர்களின், கி¡£டமணிந்த, தலைகளின் வட்ட வடிவமான வரிசைகளே. ..

சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலராசிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே. 81

மயில் வாகனனே, அடியார்களிடத்தில், இன்னருளைக் காட்டும், சிறந்த வேலாயுதத்தை உடையவனே, இலஞ்சிப் பதிக்கு அதிபனே, என்னை இழி சொற்களால் பேசும், இந்த ஊர் மக்களும், மன்மதனும், முத்துக்கள் நிறைந்த சமுத்திரமும், சோலைகளும், சந்திரனும், கட்டிலும், இரவில் ஒலிக்கும் புல்லாங்குழல் ஓசையும், என்னைப் பெற்றெடுத்த இனிய மொழியை உடைய, தாயாரின், காவலும், பெரிது அல்ல, காமச்சின்னமாகிய அன்றில் பறவையும், காமனின் தேராகிய தென்றல் காற்றும், கொடிய குதிரை முகத்தை உடைய, வடவாமுகாக்னியைப் போல என்னை வருத்துகின்றன. ..

தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர்தென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே. 82

வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண், கங்கா ஜலத்தை, தரித்திருக்கும் பரமசிவனின், மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய, பூமா தேவிக்கும், தாமரையில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகனே, வளமையான வேதங்கள் எல்லாம், பூஜிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபனே, அக்னியைக் கொட்டிக்கோண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது. ..

தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே. 83

தாமரையில் உற்பவித்த பிரம்மனால், தலையில் எழுதப்பட்ட, அனுபவ பிராப்தம், ஒருகாலும் மாறாது, என்று அறிந்திருந்தும், என்னுடைய புத்தி, மென்மேலும் ஆசைப் படுவதினால், பயன் ஏதும் இல்லை என்று, நினைக்காததற்கு என்ன காரணம்? சேயோனே, பயனற்ற சாத்திரங்களை, அழித்துவிடும், ஆகம நூல்களை அருளியவனே, அக்னி தேவன் .. இந்தத் தீப்பொறி மிகவும் அற்பமானது, என் கரத்தால் மிகவும் சுலபமாகத் தாங்கிச் செல்வேன், .. என்று மமதையுடன் சொல்ல, தன்னுடைய சிவந்த கண்களினால், அந்த அக்னியின், நிறமும் காந்தியும், வருத்தமுறவே, கருகிப் போகும்படி கோபித்தவனே. ..

சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவாசிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே. 84

ஏக வஸ்துவாகிய, சிவபெருமானிடத்தில், ஜெனித்து, வேலாயுதத்தைக் கரத்தில் பிடித்தவனே, தினைப்புனத்தைக் காத்து வந்த, வஞ்சிக் கொடி போன்ற, குறிஞ்சி நிலத்தில் வசித்து வந்த வள்ளி நாயகியின், பக்கத்தை விட்டு நீங்காத, மயில் வீரனே, இவ்வுலகத்தில் சென்று, உன் சிவந்த விழியால், எல்லாவற்றையும் அழித்து வந்த மா மரமாக நின்ற சூரபத்மனை, கோபி கோபி (கோபிப்பாயாக), என்று கூறி வேலாயுதத்தை ஏவிய, வலிமையுடைய வீரனே, மிகுந்த பொறுமை என்னும், பாணத்தின், கூர்மையினால் அடிபட்டு, கோபம் எனகிற மிருகம், விழுந்து விட்டது, உன்னுடைய அருட் பிரகாசம் என்னிடம் கலந்தவுடனே. என்ன ஆச்சரியம் ..

சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே. 85

கந்தக் கடவுளே, கடப்ப மாலையை அணிந்து, அசுரர்களின் கூட்டத்தை, தெளிந்த அலைகளை உடைய சமுத்திரத்தில், கண்கள் கோபத்தால் சிவந்து, அந்த, மா மரமாய் நின்ற சூரனுடன், போரிட்டு கொன்ற அழகிய வேலாயுதத்தை உடையவனே, அழகிய ஜடையின் மேல், இளம் பிறை, கங்கா ஜலம், சர்ப்பங்கள், இவைகள் எல்லாம் (நடனமாடும்போது) துள்ளிக் குதிக்கும்படி, சூடி இருக்கும் பரமசிவனின் குமாரனே, சுற்றமாக பற்றிக் கொள்ளும், மனை வாழ்க்கை, பெண்டிர், என்று சொல்லப்படுகின்ற, இந்தப் பிரபஞ்ச சேற்றில், மெலிந்து வருந்துகிறேன், என்னைக் காத்தருள்வாயாக. ..

சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்சேறலைத் தாறலைக் தீர்க்குங் குமார திரியவினைச்சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே. 86

சேற்றை, உழக்கி, ஆற்றின் அலையில், மேலே எழுந்து, வளப்பமான, பாக்கு மரத்தில், சேல் மீன்கள், மரத்தின் உச்சியில் இருக்கும், குலைகளை, மோதித் தாக்கும், செந்திற் பதியோனே, என் சித்தமானது, கெட்ட மார்க்கத்தில், போய்ச் சேருவதையும், அளவில்லாத அஞ்ஞான இருளை அடைவதையும், நீக்குகின்ற குமாரக்கடவுளே, மாறுபடும்படி, இருவினைகளால் ஏற்படும் பிரபஞ்சச் சேற்றில், என்னை உழல வைத்து, வழிப்பறி செய்பவர் போல் என் உயிரைப் போக்கிவிடத் தகுமோ? உன்னுடைய அருட் பிரகாசத்தின் உண்மைத் திறனை உணர்ந்து அதுவே பற்றுக் கோடாகக் கருதி இருக்கும் என்னை (ஆறலைக்கத் தகுமோ?). ..

திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்திறம்பா டுவரிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே. 87

உன்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ்ந்து பேசுகின்றார், குளிர்ந்த தினைப் புனத்தில் வாழுகின்ற தேவதையே என்று புகழ்கின்றார் (இவர் யார் எனில்), என்றும் கெடுதலையையே செய்து வந்த, மா மரமாய் நின்ற சூரபத்மாவை, தன்னுடைய சுற்றத்தாருடன், உவர்ப்பை உடைய, பெரிய சமுத்திரத்தில், அழிந்து போனான், என்று தேவர்கள் எல்லாம் பேசும்படியாக, அவனை அழித்த கந்தக் கடவுள் ஆவார், செழுமையான தினைப் புனத்திலிருந்து, நீங்கிச் செல்லாத, (ஏ வள்ளி நாயகியே), பவளம் போன்ற, உன்னுடைய அதரத்தைப் பார்த்து, ஏதாவது மறு மொழி வராதா என்று, சித்தம் குலைந்து நிற்கின்றார் (இப்பேற்பட்டவர்), திருச்செந்தூராகிய தம் பதியிலும் இதே அன்பைக் காட்டினால், நம்முடைய உபசாரத்தைக் கொள்ள, இவர் தகுதி உள்ளவரே. ..

செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்பிரான்செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே. 88

சேற்றில் உண்டாவதும், அழகுள்ளதும், ஒப்பற்றதும், ஒளி வீசுவதும், சிரேஷ்டதுமான, பிரம்மாவின் இருப்பிடமான தாமரையைப் போலவும், சிவபெருமான் அமுதைப்போல உண்ட ஆலகால விஷத்தைப் போலவும், வெற்றி நிரம்பிய, லங்காபுரியின், பிரகாசம் பொருந்திய அழகை, கோபித்து அழித்த, மேக வர்ணனாகிய ஸ்ரீராமனின், பாணத்தைப் போலவும், இந்திரனின், போர் புரியும், கையில் தரித்திருக்கும் உடை வாளைப் போலவும், கூர்மையான வேலாயுதத்தைப் போலவும், ஒத்திருக்கின்றன, இந்த முருகக் கடவுள் வீற்றிருக்கும், நிலத்தை (உழுகின்ற), கலப்பையை, மோதிக் கோபிக்கின்ற, வாளை மீன்கள், ஊறுகின்ற, செந்தில் பதியில், வசிக்கின்ற (இப்பெண்ணின்), சேல் கெண்டை மீன் போன்ற இரு கண்களுமே. ..

சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே. 89

அசோக மரத்தை இருப்பிடமாகக் கொண்ட அமணர்கள், உயர்ந்த, அந்த வலிய கழுவில் ஏறி மடியும்படி, சம்பந்தப் பிள்ளையாக அவதரித்து தேவாரம் பாடி ஜெயித்தவன், விழியானது, சேல் மீனையும் வேலாயுதத்தினையும் ஒத்த கூரிய விழியை உடைய, காட்டாற்றின் வளப்பத்தை உடைய வள்ளிமலைக் காட்டில் அவதரித்த வள்ளி நாயகியின், நாயகன், பஞ்சேந்திரியங்களின் சேஷ்டைகளை, நீக்கிய தவ சிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும் ஏற்பட்ட, ஆபத்துக்களுக்குக் காரணமான, சத்துருவாகிய சூரபத்மாவை, குற்றும்படி, இறுக்கக்கட்டிய, பிதாம்பரப் பட்டில், எல்லா மாதர்களும், தங்கள் தங்கள் உள்ளங்களை, கப்பமாக செலுத்திவிட்டனர். ..

சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலராசித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே. 90

கடல் அலை போல் அலைகின்ற மனதை உடையவர் மோட்சம் அடையும் பொருட்டு, வெளி பூஜை மட்டும் செய்து வீணாக காலத்தைப் போக்குவதால் என்ன பயன்? எல்லோருக்கும் இறைவனாகிய, எலும்பு மாலை பூண்ட சிவபெருமானின், குழந்தையே, செந்திலாண்டவனே, சமுத்திரத்தின் கண், தங்கள் தங்கள் பெருமையை, கூறி ஆர்ப்பாரித்து வந்த, அசுரர்களை, அழித்த கந்தக் கடவுளே, சந்திரன், கோயில் மதில் மேல், தவழ்ந்து செல்லும் (அந்த அளவிற்கு உயர்ந்துள்ள), ஸ்ரீரங்கநாதரின், பிள்ளையாகிய பிரம்மா (ஓதும்), வேதங்கள் பூஜிக்கும், பாம்பு போன்ற செங்கோட்டு மலையில் வசிக்கும், சுவாமியே. ..

திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்னதிகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே. 91

சக்ராயுதத்தை, வலக் கையில், தரித்துள்ள, திருமாலால், தேடி கண்டு கொள்ள முடியாத (பரமசிவனுக்கு), பிரணவப் பொருளை உபதேசித்த, சுவாமிமலைப் பதி, வலம்புரி சங்குகள், வயல்களில், நிறைந்திருக்கும், இலஞ்சிப் பதி, திருச்செந்தூர், மேகங்கள் சூழ்ந்த சர்ப்பம் போன்ற திருச்செங்கோடு, திருவலம், வேறு பல தலங்களையும் சிருஷ்டித்து அருள் செய்த, குமாரக் கடவுளின், திருத்தணியில், மூங்கில், நந்தியாவட்டை மலரை, சூடி இருக்கும் குறிப்பு, இத்தினத்தில் நன்றாக அமைந்திருக்கிறது, தோழியே. ..

சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவடசேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே. 92

அழகாக இருக்கிறது, இந்த மங்கையின், வளை அணிந்த தோள்கள், என்று மகிழ்ந்து சொல்லி முன்பு தேவைப்பட்ட காலத்தில் என்னைப் புணர்ந்த, குமாரக் கடவுளே, வெள்ளி மலையின் வட பாரிசத்தில் வாழும் வித்யாதரர்கள், வணங்குகின்ற, தணிகை மலைக்கு அதிபனே, நீ தழுவின பெருமிதத்தால், இருமாப்புக் கொண்டு, துவளுகின்ற, கொடி போன்ற இடையை உடைய பரத்தையரை, நான் நிந்தித்துப் பேச என்ன இருக்கிறது? எனது மார்பகத்தின் திரட்ச்சியை, இந்த மாதிரியாகக் குலைக்கும்படி, மழலை மொழி பேசும் இந்த பாலகன், செய்து விட்டான், என் அருகில் வராமல், அவ்விடத்திலேயே நின்று கொள். ..

செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்தசெல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற்செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே. 93

மேகத்தை, அசைக்கின்ற, அழகிய சோலைகள், சூழ்ந்த, செந்திற்பதியான், அறிகின்றானில்லை, உலகம் எங்கும், பிச்சை வாங்குவதற்காக, போக வேண்டாம், என்று சொல்லி, சிவபெருமானின் கையிலுள்ள பிரம்ம கபாலத்தில், தனது ரத்தத்தை ஒழுக விட்டவரும், துன்பத்தையும், பயத்தையும், பெருமை வாய்ந்த லங்காபுரிக்கு, உண்டாக்கியவருமாகிய, மகாவிஷ்ணுவின், கரிய நிறத்தை, போல விளங்குகின்ற, இருள் நேரத்தில், மன்மதனின் ஐந்து பாணங்களும், மிக நுட்பமான இந்தப் பெண்ணின், பிராணனாது, அழிந்து போகும்படி, வருத்தி நீக்குகிறதை, (செந்திலான் அறிகின்றானில்லை). ..

சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே. 94

சிவந்த கரும்பு வில்லை உடைய மன்மதனை, சாம்பலாகச் செய்த, நெருப்பு விழியை உடைய சிவபெருமானின், குமாரனே, எட்டு திக்குகளும் முன்போல ஸ்திரமான நிலையை அடையவும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலின், குமாரனாகிய பிரம்மா, திகைப்பை அடையவும், சூரபத்மாவின் உடலை, அழித்து, பின்பு சமுத்திரத்தில் குளித்து வந்த, வேலாயுதத்தைக் கையில் ஏந்திக் கோண்டு, எம தூதர்கள் என்னைப் பிடித்துப் போக வந்தால், பெரிய சப்தத்தைப் போட்டு கடகொண்டு, எருமை வாகனத்தில் வரும், எமனுடைய வலிமைத் திறனை, நீ கண்டித்து அடக்க வேண்டும். ..

திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே. 95

பாபமற்ற கைலாயத்தின், கதவைப் திறப்பதற்கு, திறவு கோலானவனே, கிரவுஞ்ச கிரியின் மார்பு, பிளக்கும்படி செய்து, ஆச்சரியமான விதத்தில், தாமரையில் வாழும் பிரம்மனை, ஜெயித்தவனே, தெற்கு திசையிலிருக்கும், செந்தில் பதியை விட்டு, நீங்காத, அழகிய மயில் வாகனத்தை உடையவனே, எனது உடல் அழியும் அந்தக் கடைசி காலத்தில், என்னுடைய மனதை, ஒருவழி படுத்த, அடைக்கல ஸ்தானம் எது எனில் உன்னுடைய மங்களகரமான, தண்டை அணிந்த திருத் தாள்களே. ..

திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்திருக்கையம் போருகக் கைந் நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத்திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே. 96

திருக்கை என்னும் மீன்கள் வாழும், கடல்களோ? தாமரைகளோ? விடமோ? மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள கூரிய பாணமோ? சிவந்த வேலாயுதமோ? கண், கூன் பாண்டியனின் முதுகில் இருந்த கூனாகிய விகாரத்தை, தாமரை போன்ற, தன் திருக்கையில் தரித்த விபூதியினால், நேர்படச் செய்தவரும், தமிழ் நூலாகிய, சிவ பக்தியை உண்டாக்கும், ருக்கு வேத சாரமாகிய தேவாரப் பாக்களை, பர தெய்வம் யார் என்கிற சந்தேகத்தைத் தீர்த்து, சம்பந்தப் பிள்ளையாராக மொழிந்தருளிய குமாரக்கடவுளின், மலையின்கண் வாழும், இந்த இளம் பெண்ணின் கண்). ..

சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே. 97

அற்பமான, சிறு உமியைக் கூட, தர்மம் செய்வதற்கு மனமில்லாமல், மரத்தைப்போல ஈவு இரக்கம் இல்லாமல் இருப்பவர்களே, அழிந்து போவதும் ஜீவனுக்கு ஒதுங்கிடமான (இந்த தேகத்தில்), தும்மல் எற்படும் போதிலாவது, முருகா உன் அடைக்கலம் என்று சொல்லுங்கள், அதன் மூலமாக நற்கதி அடைவீர்கள், சிவந்த தினைப்புனத்தில் வாழும், வள்ளி நாயகிக்கு, தன்னுடைய வம்ச பரம்பரையை எடுத்து உரைத்து அவளுடைய அன்பை வேண்டி, நின்றவனும், வில்லைத் தரித்த கண்ணப்ப நாயனார், தான் முதலில் ருசி பார்த்து நைவேத்தியமாகக் கொடுத்த மாமிசத்தை, மிகவும் களிப்புடன் உண்டவரும், மேன்மையான விதத்தில், சர்ப்பத்தைத் தரித்த சடையை உடைய சிவபெருமானின், மைந்தனாகிய கந்தக் கடவுளின், சிறிய திருவடிகளை தியானித்துக் கொண்டே (தும்மும் போது 'குமரா சரணம்' என்று சொல்லுங்கள்). ..

சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்டசீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே. 98

கலப்பையையும், முதலையின், தலையை, அற்று விழும்படி, எதிர்த்து தகர்த்த, சக்ராயுதத்தை, அழகிய கையில் தரித்திருக்கும், ஸ்ரீரங்கநாதராகிய திருமாலும், சிவாகமங்களை அருளிச் செய்த சிவபெருமானும், மன மகிழ்ச்சி கொள்ளும் ஆச்சார்ய மூர்த்தியே, செழுமை மிக்க தினை புனத்தில் வாழும், வாசனைத் திரவியம் பூசிய, மலை போன்ற மார்பகங்களை அணைத்த, கந்தக் கடவுளே, சிறந்த தமிழ் பனுவல்களில் சொல்லப்படும், சீர் முதலிய எட்டு வகைகளிலும் வல்லவனாகிய கவி சிரேஷ்டனனே, இசைப் பிரியனே, என்று துதிப்போருக்கு, தீவினைகள் கிட்ட அணுகாது. ..

தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே. 99

அக்னியானது, தனது இயல்பாகிய எரிக்கும் தன்மையை விட்டது போல், கோபத்தை அடியோடு ஒழித்த, உள்ளத்துள், சத்யம் என்கிற ஞான விளக்கை, அணைந்து விடாமல் எப்போழுதும் பிரகாசிக்கும்படி, நம்முடைய, தீ வினையாகிய, இருள், நீங்கும்படி, ஏற்றி வைத்தோம், வளமையான தினைப் புனத்தில், தீர்ந்து போகாமல் எப்போழும் பசுமையாகவே இருக்கும், தினைப்புனத்தில் வாழும், மான் போன்ற வள்ளி நாயகியின், மணாளனும், உலக பசு பாச தொந்தங்களை அடியோடு நீக்கின அடியார்களுக்கு, செழுமையான பொன் போல் பிரகாசிக்கும் மோட்ச வீட்டை, வரமாகக் கொடுக்கும், முக்திச் செல்வனான முருகப்பெருமானுக்கு (மெய்த் தீபம் எடுத்தனம்). ..

செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்விசெல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே. 100

ஏ மனமே, சென்று, கந்தக் கடவுள் இப்பூவுலகத்தில் சம்பந்தராக அவதரித்த சீர்காழிப் பதியை, துதிப்பாயாக (அதன்), அந்தக் குமரக் கடவுளின் தெய்வீக நாயகியாகிய தேவசேனை, ஊர்ந்து செல்லும், மேகங்கள், நல்ல மழையைப் பொழிந்து, மிகவும் இகழ்ச்சிக்கிடமான, நம்முடைய வறுமை என்கிற நிலையை, போக்கி விடும், கொடிய எமன், நம் மேல் செலுத்தும் நரக தண்டனையை, அவனுடைய கை வேலாயுதமானது, போக்கி விடும், பக்திப் பயிரைக் காத்து வளர்த்த வள்ளி நாயகியின், பெரும் பேறாக விளங்கும், மணாளனாகிய முருகப் பெருமான், குக சாயுச்சியமாகிய தனது சரணங்களைக் கொடுத்து அருளுவான். ..




கந்தர் அந்தாதி முற்றும்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.