|
||||||||
கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார் |
||||||||
மரியாதைக்குரிய மாமனிதர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியின் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் யாரிந்த சி.கோவிந்தராசனார்? இந்தக்கேள்விகள் அய்யா கோவிந்தராசனை மிகவும் குடைந்தது. "நம்ம தமிழ் பெருமையை நம்ம மக்களே சந்தேகப்படுறாங்களே..?" என்று மனம் உடைந்தார். ஆனால் உடைந்ததோடு உட்காரவில்லை. வெகுண்டு எழுந்தார்.!! "நான் கண்டுபிடிக்கிறேன் எல்லாவற்றையும்..! நான் உணர்த்துகிறேன் மக்களுக்கு சிலப்பதிகாரம் கதையல்ல, நடந்த விஷயம் என்று..! கண்ணகி என்பவள் உயிரோடு இருந்தாள் என்று..!" சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன..? நாம் கண்டுபிடிப்போம் என்ற தணியாத தாகத்தில் எண்ணி துணிந்து இறங்கினார். 1945 ஆம் ஆண்டு கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் வி்ற்று விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார். 1945 ம் ஆண்டு மயிலாடுதுறை அருகில் கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன் மணற் பரப்பும்,மணல் மேடுகளும்,கள்ளியுடன் காரைச் செடிகளும் செறிந்த புதர்களும்,சவுக்கு தோப்புகளும்,புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று,அன்று அழைக்கப்பட்ட பகுதியே,பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.கடலடி ஆய்வு செய்து கடற்கோளினால் அளிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே,காவேரிப் பூம்பட்டிணம் கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார். 1945 ஆம் ஆண்டு பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு,கால் நடையாக ஆராய்ந்து,ஆராய்ந்து, நடந்து,நடந்து,மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி,சேரநாடு நோக்கிச் சென்ற வழியில்,இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நகரத் தொடங்கினார். அவரது இவ்வளவு பெரிய சாதனையை அப்படி அரசாங்கமும் மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்? ’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.’’ கண்ணகி கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு? அது கண்ணகி கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்? இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஒரு பொக்கிஷத்தை அரசுக்கு கொடுத்துவிட்டு அவர் சொன்ன வார்த்தைகள், குறிப்பு: |
||||||||
|
||||||||
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
| by Swathi on 16 Oct 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|