LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- இந்திய சாதனைத் தமிழர்கள்

மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி

சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி அவர்களுக்கு எமது புகழஞ்சலி.. 

'வையத்தலைமை கொள்' என்ற வலைத்தமிழ் நிகழ்ச்சியில் பெண் பேராளுமையாக ஆவணப்படுத்தச் சிலமுறை பேசியுள்ளேன். நேரில் சந்தித்து உரையாட விரும்பிய ஆளுமை.. 
தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கல்விக் குரலாகவும், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பல்வேறு சமூக அவலங்கள் குறித்தும்  ஒலித்துக் கொண்டிருந்த முதுபெரும் கல்வியாளர், பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி அவர்கள் காலமானார்.

 இவரின் பணிகளும் வகித்த பதவிகளும்:
* தமிழ் நாட்டின் கல்லூரிகளில் துணைப்பேராசிரியர், பேராசிரியர் துறைத்தலைவர் (1960-1988)
* முதல்வர், அரசு மகளிர் கல்லூரி குடந்தை (1988-1990)
* இந்தியச் சமூக அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் (1990-92)
* துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (1992-98)
* தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் செப்டம்பர்  2001-ஜூலை 2002)
* தலைவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் (2002-2005)

 "நம் சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்க முடியும்" என்ற முழக்கத்தையே தம் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார். 
1980களின் இறுதியில், உசிலம்பட்டி பகுதியில் நிகழும் பெண் சிசுக்கொலைகளைக் களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தியுள்ளார்.

பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது எதிர்ப்புகள் இருக்கும். தைரியம் வேண்டும். தார்மீகப் பொறுப்போடு பதவியை, இடத்தை அணுகவேண்டும். ஆணோ, பெண்ணோ, பொறுப்புக்குரிய அடிப்படை சிந்தனைத் தெளிவு இருந்தால் அதுவே உங்களை இயக்கும். அதுவே உங்கள் பாதையை அமைக்கும். மனிதநேய அணுகுமுறையும், முறைகேடுகளைத் தவிர்ப்பதும் கட்டாயம் என்பது இவர் காட்டும் வழி.

வசந்தி தேவி பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர்திருத்தம் போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டு அதிலேயே தன் வாழ்நாளின் முக்கியமான தருணங்களைச் செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பங்களிப்பைப் பாராட்டும் விதமாக 1973ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கி இந்திய அரசு பெருமை செய்தது.. 

 சமூக மாற்றத்தையே மூச்சாகக் கொண்டு இயங்கிய அம்மையாருக்கு எமது புகழஞ்சலி!!
அவரது நேர்காணலைக் காண: https://www.youtube.com/watch?v=-hiL2s9mt_4&list=PLXPD1_to_UjQ6xegW5ulSJ8YUkaz3yyu3&index=8

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

 

 

by hemavathi   on 01 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார் கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார்
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார் மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார்
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி
ஏடகம் அமைப்பின் நிறுவனர்  மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு ஏடகம் அமைப்பின் நிறுவனர் மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு
இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக  எஸ்.கிருஷ்ணன் தேர்வு இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக எஸ்.கிருஷ்ணன் தேர்வு
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.