#கவைக்கழி பொறிச்சி, துறிஞ்சி போன்ற மரங்களில் வெட்டி, நெருப்பிலிட்டு வாட்டி பட்டைகளை உரித்து 'Y' வடிவில் வடிவமைக்கப்படும் மரத்தினாலான கருவி. முள்வேலிகள் அடைக்க, முட்குவியல்களை செறுகி தூக்க என பயன்படுத்துவர். /எறவானத்துல சொறுவி வைச்சிருந்த கவக்கழியக் காணம். யாருகிட்ட எடுத்து குடுத்தீங்க.../ #நடுநாட்டுச்சொல்லகராதி படம்: திரு கோவிந்தராசு அவர்கள், மணக்கொல்லை.
தொகுப்பு: எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
|