|
||||||||
கொம்பன் காற்று |
||||||||
உசும்பு காற்று.
ஒருமாதிாி தலையைச் சவட்டி....
கொச்சிக்காய் கடித்த பாலரசிபோல
முழிசி மிலாந்தி...
பிச்சைக்காரச் சிறுமியின் மயிராய்
முடிச்சுக் கட்டிச் சுருண்டு கிடக்கிற
பச்சை சிவப்பு
குரோட்டன் இலைகளைத் தொட்டுத் தடவி...
ஈரும்
ஒட்டும்
தேடித் தேடி
பெண்டுகள் பேன்பார்க்கும் விதத்தை ஒத்ததாய்
நீக்கி விலக்கி...
இவர்
காலம் இல்லாக் காலம் வந்த
மனிதர்!
என்னவோ எதையோ நினைத்துக்கொண்டு
நீண்ட நாட்களாய்
மிக நீண்ட நாட்களாய்
கோழி திருடிய கள்ளனைப்போல
நின்ற இடத்திற்கும் விசளம் சொல்லாமல்
மாயமாய் மறைந்த திண்டான் பாஞ்சான்.
பூவைப் பார்க்கிறார்.
புல்லைப் பார்க்கிறார்.
புல்லின் ஓலையில் முட்டையிடுகிற
கைக்குச் சிறுத்த வெண்ஈ வரைக்கும்
இந்த மனிதர் நினைத்த மாதிாி
அழுகவுமில்லை.
அழியவுமில்லை.
பழுக்கவுமில்லை.
புழுக்கவுமில்லை.
மனிதர் திகைத்து என்னை நோக்கினார்.
கரப்பான் பூச்சியை உறுஞ்சிக் குடிக்கிற
சீனாக்காரனின் எழுத்தின் தோதாய்
வானம் முழுக்க ஒட்டியும் விலகியும்
அழகு தருகிற வெள்ளியைப் பார்த்து
நான் மருண்டிருந்தேன்.
நான் மருண்டிருந்தேன்.
உச்சந் தலையால் நடக்க நினைத்தவர்
குப்பற விழுந்தார்,
எனினும் மீசையில்
மண்பட வில்லைபோல் நாலு பூக்களை
கிள்ளியெறிந்தார்.
அவையும்
காய்ந்து போன சருகுச் சுக்குகள்.
உசும்பு காற்று. ஒருமாதிாி தலையைச் சவட்டி.... கொச்சிக்காய் கடித்த பாலரசிபோல முழிசி மிலாந்தி...
பிச்சைக்காரச் சிறுமியின் மயிராய் முடிச்சுக் கட்டிச் சுருண்டு கிடக்கிற பச்சை சிவப்பு குரோட்டன் இலைகளைத் தொட்டுத் தடவி...
ஈரும் ஒட்டும் தேடித் தேடி பெண்டுகள் பேன்பார்க்கும் விதத்தை ஒத்ததாய் நீக்கி விலக்கி...
இவர் காலம் இல்லாக் காலம் வந்த மனிதர்!
என்னவோ எதையோ நினைத்துக்கொண்டு நீண்ட நாட்களாய் மிக நீண்ட நாட்களாய் கோழி திருடிய கள்ளனைப்போல நின்ற இடத்திற்கும் விசளம் சொல்லாமல் மாயமாய் மறைந்த திண்டான் பாஞ்சான்.
பூவைப் பார்க்கிறார். புல்லைப் பார்க்கிறார். புல்லின் ஓலையில் முட்டையிடுகிற கைக்குச் சிறுத்த வெண்ஈ வரைக்கும் இந்த மனிதர் நினைத்த மாதிாி
அழுகவுமில்லை. அழியவுமில்லை. பழுக்கவுமில்லை. புழுக்கவுமில்லை.
மனிதர் திகைத்து என்னை நோக்கினார். கரப்பான் பூச்சியை உறுஞ்சிக் குடிக்கிற சீனாக்காரனின் எழுத்தின் தோதாய் வானம் முழுக்க ஒட்டியும் விலகியும் அழகு தருகிற வெள்ளியைப் பார்த்து நான் மருண்டிருந்தேன். நான் மருண்டிருந்தேன்.
உச்சந் தலையால் நடக்க நினைத்தவர் குப்பற விழுந்தார், எனினும் மீசையில் மண்பட வில்லைபோல் நாலு பூக்களை கிள்ளியெறிந்தார். அவையும் காய்ந்து போன சருகுச் சுக்குகள்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|